புதன், 3 ஜூன், 2015

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் !

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் !

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்று சொன்னார்கள் !

அந்த ஒன்றே ஒரே கடவுள் யார் ? என்பதை எவரும் சொல்லவில்லை .அ வர் யார் ? என்பதை எவரும் காட்டவில்லை.

வள்ளல்பெருமான் ஒருவர்தான் ஒரே கடவுள் யார் என்பதை உலகுக்கு,உலக மக்களுக்கு காட்டியவர் .

ஒரே கடவுள் என்பவர் அருட்பெருஞ்ஜோதி ஒருவர் மட்டுமே என்பதைத் தான் கண்டு உண்மையை வெளிப்படுத்தியவராகும்.

அந்த ஒரே கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு ,தமிழ் நாட்டில்,உள்ள கடலூர் மாவட்டத்தில் பார்வதிபுரம் என்னும் வடலூரில் ''சத்திய ஞான சபையைத்'' தோற்றுவித்து ,சாதி,சமய ,மத என்ற வெறும் பாடுகள் இல்லாமல் உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடுவதற்கு ஏற்றதாக அமைத்துள்ளார் .

வடலூரில் உள்ள ஒரே உண்மைக் கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளியைத்தான் இயற்கை விளக்கமாக மைத்துள்ளார் அவரே உண்மை கடவுளாகும்.அவர் மனிதர்களில் ,தேவர்களில் ,கர்த்தாக்க்களில் சித்தர்களில் யோகிகளில்,ஞானிகளில் ஒருவர் அல்ல .

பல கோடி அண்டங்களையும்,உலகங்களையும்,
உயிர்களையும்,பொருள்களையும்.கிரகங்களையும் .
மற்றை எல்லாவற்றையும்.படைத்து ,காத்து,மாற்றி,
இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.
அவரே எல்லா ஆன்மாக்க்ளிலும் உள் ஒளியாக இருந்து .உயிர்களின் தோற்றமாகி .உடம்பை கொடுத்து இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அந்த உண்மைக் கடவுளை... ஜீவகாருண்ய வல்லப்பத்தாலும்....சத்விசார செயல்களாலும் ..வழிபாடு செய்து அருளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு