செவ்வாய், 16 ஜூன், 2015

கடவுளை யார் காணமுடியும் ?

கடவுளை யார் காணமுடியும் ?

உண்ணாமலும் ,உறங்காமலும்,சுவாசிக்காமலும் வாழும் வழியைத் தெரிந்து கொண்டவர்கள் யாரோ அவரே கடவுளைக் காணமுடியும்.

உலக வரலாற்றில் அப்படி வாழ்ந்த ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே !

கடவுள் உண்ணுவதில்லை,உறங்குவதில்லை,
சுவாசிப்பது இல்லை ..

அதேப்போல் வாழ்ந்தால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.!

கடவுள நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டுமானால் .கடவுளின் தன்மைக்கு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

அதற்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமையை உணர்ந்து, உண்மையை  அறிந்து கருணையே வடிவமாக மாற வேண்டும்

எங்கே கருணை இயற்கையில் உள்ளன்
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

உண்ணாமலும் உறங்காமலும் சுவாசிக்காமலும் வாழ்வதற்கு அருள் என்னும் திரவம் வேண்டும் .

அந்த அருள் கருணை பூரணமாக விளங்குகின்ற போதுதான் இறைவனால் கொடுக்கப்படும்.

வள்ளல்பெருமான் ஜீவ காருண்யம் என்னும் கருணையே வடிவமானவர் அதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வாரி வழங்கினார் .

அருள் பூரணமாக கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று ,பேரின்ப சித்தி பெரு வாழ்வு வாழ முடியும்.

வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனவே வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய ,சுத்த சன்மார்க்க உண்மை பெருநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழும் வழியை தெரிந்து வாழ்வோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு