வியாழன், 18 டிசம்பர், 2014

பெண்களின் முக்திக்கு தடையானவர்கள் யார் ?


பெண்களின் முக்திக்கு தடையானவர்கள் யார் ?

முக்திக்கு தடைக் கற்கள் பெண்களே என்று வேதங்கள் சாத்திரங்கள் சொல்லி உள்ளன் .
பெண்களும் சூத்திரர்களும் இழி பிறவிகள் என்று பகவான் கிருஷ்ணபரமாத்மா கீதையில் எழுதி வைத்திருப்பதால் ,பிராமணர்கள் பெண்களின் முத்திக்கு தடை விதித்து உள்ளார்கள் .
குழந்தைகளைப் பெற்றுத் தருவது யார் ?
பெண்கள் பெண்கள்தான் ஆண்களையும் பெற்று எடுத்து தருகின்றார்கள் .வளர்த்து தருகின்றார்கள்.
குழந்தைகளை பெற்றுத் தருகின்ற, வளர்க்கின்ற பெண்களுக்கு அறிவில்லை என்று வேதம் சொல்லுகின்றது.
பிறக்கிற குழந்தைகளுக்கு பாலோடு சேர்த்து அறிவையும் ஊட்டி வளர்ப்பவள் பெண்கள் என்பது தெரியாதா கிருஷ்ண பகவானுக்கு / கடவுள் பேதம் பார்க்கலாமா ?
தாயால் பொது அறிவை ஊட்டி வளர்க்காத குழந்தைகளின் கதி என்னவாகும்/ நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .
வள்ளல்பெருமான் பெண்களுக்கும் அறிவு உண்டு ஞானம் உண்டு என்பதை தெரியப் படுத்தி உள்ளார் .பெண்களுக்கும் யோகம் ஞானம் முதலியவை சொல்லித் தரவேண்டும் என்றார்
பெண்கள் இல்லை என்றால் ஒவ்வொரு வீட்டிலும் உணவிற்கு எங்கு செல்வார்கள்.ஜீவ காருண்யம் எப்படி விளங்கும்.புரிந்து கொள்ளவேண்டும் .
அதனால்தான் வள்ளல்பெருமான் !
வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆகமத்தின் விளைவு அறியீர் ...சூதாகச்
சொன்னதளால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை
என்ன பயனோ இவை .....
வேதம்,ஆகமம்,சாத்திரங்கள்,புராணங்கள்,யாவையும் ஆழமாக குழியைத் தோண்டி புதைத்து விடுங்கள் என்றார் .
அதனால்தான் உயிர்களிடத்தில் பேதம் இருக்கக் வேண்டாம் என்பதால் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை வேண்டும் என்று தெளிவுப் படுத்தி உள்ளார் .இறைவன் படைத்த உயிர்களிடத்தில் ஆண்,பெண்,அலி என்ற பேதம் எதுவும் .இருக்கக் கூடாது என்பதை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார் ..
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு