புதன், 20 பிப்ரவரி, 2013

ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி ?


ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி ?

ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும் அதனால் உபகார சக்தி விருத்தியாகி ,மகிழ்ச்சியுடன் வாழலாம்.வினையால் வரும் துன்பங்களான அச்சம்,துன்பம் ,துயரம்,பயம்,வியாதி ,அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் விலகிவிடும்.இல்லத்தில் தாய்,தந்தை,மனைவி,மக்கள்,உறவினர்,நண்பர் அனைவரும் வாழ்த்தும் அளவிற்கு மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஜீவகாருண்யம் இல்லாத இல்லத்தில் அன்பு ,அறிவு விளக்கம் இல்லாமல் மறைந்து விடும்.அதனால் உபகார சக்தி மறைந்து விடும்.அதனால் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்.வியாதி போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.இல்லத்தில் மகிழ்ச்சி இல்லாமல் வேதனை அதிகரித்துக் கொண்டே இருக்கும் .அதனால் தாய்,தந்தை,மனைவி,மக்கள்,உற்றார் ,உறவினர்,நண்பர் அனைவரும் மகிழ்ச்சி இல்லாமல் துன்பம் நிறைந்த சோகத்துடன் வாழ நேரிடும் .அற்றை தீர்பதற்கு எந்த வழிபாடும் செல்லுபடி ஆகாது.இவை இயற்கையின் சட்டம் .

ஆதாலால் நாம் ஒவ்வொருவரும் அன்பு,இறக்கம்,தயவு,கருணை என்னும் ஜீவகாருண்யத்தை உண்டுபண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்.அப்படி வாழ்ந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழலாம்.

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு