வெள்ளி, 4 ஜனவரி, 2013

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி ?

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி ?

ஆன்மா என்பது ஒவ்வொரு ஜீவன் களுக்குள்ளும் விளங்கிக் கொண்டு (இயங்கிக்கொண்டு )இருக்கும் ஒளியாகும் .

ஆன்மாக்கள் உடலுக்குள் மறைந்து இருக்கின்றன.ஆன்மாவில் இருந்து வெளியே வருவது உயிர்ஒளி என்னும் ஜீவனாகும் ,உயிர் வாழ்வதற்கு உடம்பு என்னும் தேகம் தேவைப்படுகிறது.உடம்பு செயல்படுவதற்கு கரணம் ,இந்திரியங்கள் தேவைப்படுகிறது .அனைத்துக்கும் காரண காரியமாக இயங்குவது ஆன்மாவாகும்.

தேக வாழ்வுக்கு இந்த ஒளி என்னும் ஆன்மாக்கள் ஆதாரமாய் இருக்கின்றது.ஆன்மா மறைந்து இருக்கின்றதால் அதன் இயல் உண்மை இன்னது என்று அனைவராலும் தெரிந்து கொள்ள முடிவதில்லை .இந்திரியம் ,கரணம் என்னும் புலன்கள் ,  அறிவுக்கு விளங்காத ஆன்ம உண்மை அகத்தூய்மை உணர்வுடன் உள்ளவர்களுக்கு ,அதாவது ஞான யோகிகளுக்கு ஒருவாறு வெளிப்பட்டு இருக்கின்றது.மற்றவர்களுக்கு வெளிப்படாது மறைந்து செயலாற்றிக் கொண்டு உள்ளது.

அதுவும் வள்ளலார் காட்டிய சுத்த சனமார்க்க அருள் ஞானம் வெளிப்படாத காலத்தே கண்டு உரைக்கப் பட்ட ஆன்ம உண்மையாகும்.அதன் இறை பேரியல் உண்மை ஏகதேச (சிறிய அளவில் ) விளக்கமாகவே இருந்து இருக்கின்றன.ஆகவே இதுவரையில் மறைப்பின்றி முழுதாக வெளியானதில்லை .என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல்தான் அணுக்கள் சேர்க்கையால் ஆன்மாவைச் சூழ்ந்து உருவாகி,வளர்வதும் தளர்வதும் அழிவதுமாய் இருக்கின்றது .தேகப் படைப்பில் இந்த மூன்று தொழில்களும் செயல்பட்டுக் கொண்டு வருவதை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் இவ்வுடளுக்குள் இருந்து மறைந்து போகின்ற ஆன்மா ,பின்னர் மற்றொரு பிறவி வடிவில் எப்படி வந்து தோன்றுகின்றது என்பது எல்லாம் சாதாரண அறிவு கொண்டு அறிந்து கொள்ள முடிவதில்லை

மறைப்பின் மறைந்தன ! என்று சொல்லுவார் வள்ளலார் .அதாவது தேகத்தில் மறைந்து விளங்கிய ஆன்மா ,தேகத்தை விட்டு நீங்கும் போதும் மறைந்தே போய்விடுகின்றது .அப்படி மறைந்து போன அவ் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி பிறிதொரு கருவில் வெளியாக்கப் பெற்றுப் புதிய உருவோடு உலகில் வருவிக்கப் படுகின்றது.ஆனால் அந்த உருவிலும் அந்த ஆன்மா மறைந்துதான் இருக்கின்றதாம்.

இப்படி எத்தனையோ உருவில் அஞ்ஞானவாசம் (மறைந்து உறைந்த) முடிவில் தான் மனித தேகம் எடுத்து தோன்றுகின்றது .மனித தேகம் எடுத்ததின் நோக்கமே ஆன்மாவை அறிந்து கொள்வதற்கே !ஆனால மனித தேகம் படைத்தவர்கள் மறைந்து இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவை காணமுடியாமல் மடிந்து மறைந்து போய் கொண்டே உள்ளார்கள் .

பழைய ஆன்மீக வாதிகள் !

காரணம் முன்னாடி இருந்த ஆன்மீக அருளார்கள் வெளிப்பட பார்க்க முடியாமலும் அதனை தெரிந்து கொள்ளும் வழி தெரியாமலும்,சமய மதவாதிகள் ,கற்பனைக் கதைகளை மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள் .எப்படி எனில் ! கதைகளில் உண்மையை அறிய முடியாது .உண்மையை உண்மையால் தான் அறிய முடியும்.

மனிதன் கடவுளைப் பிரிந்து இருப்பதாகவும் ,கடவுள் வேறு, தான் வேறு என்பதாலும்,  அறிந்தும் அறியாமலும் செய்த ஏதோ குற்றத்திற்காகத் தன புனித நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு ,இப்புவி நிலைக்கு ஆன்மாவைத்  தள்ளிவிட்டு இருப்பதாகவும் ,அதனால் மனிதன் புனிதனாக்கும் பொருட்டே இங்கு பிறவி எடுத்துள்ளான் எனவும் ,அவனை ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன என்றும் ,அம்மல ஒழிப்புக்காக மேலும் மாயா கன்ம மலங்களையும் சேர்த்து ,இவ் உலகத்தில் வருவிக்கப்பட்டு உள்ளதாகவும் ,கதைகளைக் கட்டி உள்ளார்கள் .

அதற்காக வேதங்களை  படித்து கடவுளை நினைத்து ஓதி அகம் ,பிரம்மம்,அத்துவைதம்,துவைதம்,மந்திரம் ,தந்திரம் போன்ற கலைகள்   ,நிலையை அறிந்து கொண்ட வேதாந்திகள், ஆன்மாவின் உண்மை தெரியாமல் உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் உண்மையை மறந்து ,பிரிந்து பொய்யான மாயா தேக நிலையில் சிக்குண்டு உலகில் உழன்றும் அழிந்தும் கொண்டு உள்ளார்கள் .மக்களையும் அறியாமையில் அழுத்தி விட்டார்கள் .வேதங்களை படிப்பதால் ஓதுவதால் மலங்கள் ஒழிந்து விடுவதில்லை .ஒழிக்கவும் முடியாது.

அப்படி சொல்வது உண்மை அல்ல ! எதுவும் தடை அல்ல !

மனிதன் கடவுள் நிலையில் இருந்து வேறுபட்டவன் அல்லன்,பிரிந்தவன் அல்லன்.ஆகையால் கடவுளை, ஆன்மாவை அறிந்து கொள்வதற்கு எதுவும் தடையாக இல்லை , மனிதனை எதுவும் தடுப்பதில்லை துன்ப வாழ்வில் வருந்தி உழலச் செய்கின்றது ஒன்றும் இல்லை .எல்லாம் அறியாமையால் விளந்த்தாகும் ,அறியாமை என்னும் திரை நீங்கினால் அனைத்தும் விளங்கும்.அறியாமை என்னும் மறைப்பு ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கிறார் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள் .

மனித தேகம் படைத்தவர்கள் உண்மை தெரிந்து கொள்ளாமல் இருந்ததால் உண்மையை தெரியப்படுத்த உவ்வுலகத்திற்கு இறைவனால் வள்ளல் பெருமானை வருவிக்க உற்றார் என்பதை ,உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

உண்மையை தெரிந்து கொள்வதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்னும் அருள் திருநெறியை தோற்றுவித்து உள்ளார்கள் ,அந்த புனித நெறியில் சேர்ந்து உண்மையை உணர்ந்து ,ஆன்மாவை அறிந்து ,அருளைப் பெற்று, கடவுளின் நிலை அறிந்து அதன் மயமாவோம் .என்கிறார் வள்ளலார் அவர்கள்.

இப்பொழுது உலகமும் உலகில் உள்ள ஜீவராசிகளும் மாசுடையதாய் உள்ளது .மனிதன் தன்னுடைய மாசு உடைய மனத்தால் உண்மை அறிந்து கொள்ள இயலாது.உண்மை அறிந்து கொள்ளாத காரணத்தால் ,பொய் நெறிகளைப் பற்றிக் கொண்டு பேரவத்தைப் பட்டு  மடிந்து கொண்டே உள்ளார்கள்.

இவற்றை எல்லாம் ஒழித்து மெய் இன்ப நெறியில் உலகத்தைச் செலுத்தவே ,மெய் நெறியாம் சுத்த சன்மார்க்கத்தை நம் வள்ளல் பெருமான் மூலம் ,இறைவனால் வழங்கப்பட்டு உள்ளன.

மெய்ப் பொருளாகிய கடவுள் என்னும் அருட்பெருஞ் ஜோதி ! எங்கும் எதிலும் என்றும் இருந்த போதிலும் அருள் ஞானமுற்ற மெய்ஞ் ஞானிகள் உளத்தே தான் வெளிப்பட்டு விளங்குகின்றார் என்பது சத்தியமான உண்மையாகும்.அந்த மெய் ஞானிதான் வள்ளல் பெருமான் என்னும் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.அதனால்தான்,அவர் அமைத்த மார்க்கத்திற்கு ,மெய் நெறியாம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''எனற பெயர் வைத்துள்ளார் .

அவர் உள்ளத்தில் தான் இறைவன் முழுமையான அன்பு கொண்டு விழித்து இருக்கின்றார் .அதனால்தான் ''களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி விளங்க என்னுள்ளே விளங்கும் மெய்ப்பொருளே ''என்று சொல்லியுள்ளார்.

வள்ளலார் உடைய ஆன்மா எதையும் வேறுபட்டு நினைக்காமல் ஒன்றாகவே நினைத்தது ,கடவுள் வேறு ,தான் வேறு ,ஆன்மா வேறு, உலக உயிர்கள் வேறு ,உலகம் வேறு என்று நினைக்கவில்லை ,அதனால்தான் மெய்ப்பொருள் என்னும்,''அருட்பெருஞ்ஜோதி '' அவர் அகம் நின்று விளங்கு கின்றது.என்பதை என்பதை அறிவு படைத்த ஆன்மாக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி !

வள்ளலார் அவர்கள் இந்த உலகில் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதை அறிந்து அவர்போல் வாழ்ந்தால், நாமும் அவர்போல் அறிந்து தெரிந்து அழியாமல் வாழலாம்.

நாம் பழைய பொய்யான நெறிகளை எல்லாம்,பொய் என்று உணர்ந்து அவைகளைத் தள்ளிவிட வேண்டும்.அகத்தில் உள்ள அறியாமை என்னும் திரை அதாவது மாசு சுத்தமாக நீக்கி ஆன்மாவை பரிசுத்த மாக்கிக் கொள்ள வேண்டும்.ஆண்டவர் இடத்தில் அன்பும் ,உயிர்கள் இடத்தில் இரக்கமும் அதாவது தயவும் கருணையும் கொள்ள வேண்டும் .அப்போது தான் ஆன்மாவில் ...இறைவன் நம்மீது கருணைக் கொண்டு அன்பு என்னும் அருளைத் நிரப்புவார் .அந்த அருள் என்னும் அமுதம்தான் உள்ளதனை உள்ளபடிக் காட்டும் கருவியாகும்.

அழியும் பொருளை விட்டு அழியாப் பொருளான அருளைப் பெற்றவர் உள்ளத்தில் உயிரில் ஆன்மாவில் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நீங்காது விளங்கிக் கொண்டே இருப்பார் .அதனால் ஆன்மாவிடத்தில் இடைவிடாது அன்பு செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.;--''மெய் அகத்தே நம்மை வைத்து விழித்து இருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக ''என்று எனது கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினால் .என்று வள்ளலார் அனுபவித்து அனுபவமாலை என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

ஆன்மாவில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் .நான்வேறு இறைவன் வேறு இல்லை என்பதை அறிந்தேன்,அதேபோல் உலக உயிர்களும் இறைவன்தான் என்பதை அறிந்தேன் .ஆதலால் ஆன்மநேயப் பற்றுக் கொண்டேன்,எல்லா ஆன்மாக்களும் என்னைப் போன்றதே என்பதை அறிந்து  எத்துணையும் பேதம் இல்லாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை கொண்டேன் .ஆதலால் ஒருமை உண்டானது அந்த ஒருமையால்தான் இறைவன் என்னை விட்டு நீங்காது என் உள்ளே இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை தெளிவு படுத்தி உள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள் .

நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து பயின்று ஆன்மாவை அறிந்து பேரின்ப வாழ்வில் வாழ்வோம் .  

.
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

   .

                      

1 கருத்துகள்:

12 பிப்ரவரி, 2013 அன்று PM 11:28 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

"ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன என்றும் ,அம்மல ஒழிப்புக்காக மேலும் மாயா கன்ம மலங்களையும் சேர்த்து ,இவ் உலகத்தில் வருவிக்கப்பட்டு உள்ளதாகவும் ,கதைகளைக் கட்டி உள்ளார்கள் ."
வள்ளலாரே இதை ஒப்புகொள்கிறார். நீங்கதான் அறியாமையில் இருக்கீங்க. திருஅருட்பாவில் எத்தனை இடத்துல அவர் மாயை, விதி பற்றி எல்லாம் குறிப்பிட்டு இருக்கார். அவர் சொல்வது இருப்பது எல்லாம் ஒன்றுதான் என்பதைதான். அதுவே அத்வைதம். அதற்கு வள்ளலார் வழங்கிய பெயரே சன்மார்கம். ஆனால் அந்த ஒருமை நிலையை அடைய பல வழிகள் இருக்கு. அது ஒவ்வொரு மனிதனுடைய மன நிலைக்கேற்ப மாறுபடும். அது பக்தி நிலையாகிய துவைதமாக இருக்கலாம், யோகமாக இருக்கலாம், அத்வைதமாக இருக்கலாம், பகவான் ரமணரின் ஆன்மவிசாரமாக கூட இருக்கலாம், அருணகிரி நாதருக்கு முருகன் அருள் எப்படி கிடைத்தது? எல்லாம் ஈசன் செயல். அது அறியாமையில் இருக்கும் மட்டும் பொருந்தும். அறியாமை மறைந்த பிறகே இருப்பது ஒன்றே என கூறலாம். இல்லை எனில் மாற்றி மாற்றி குழப்பமே ஏற்படும். துவைதம் என்பது

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு