வெள்ளி, 28 டிசம்பர், 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

உலகில் உள்ள அனைவரும் ஒருதாய் மக்கள் ,நம்முடைய ஒரே தந்தை ''அருட்பெருஞ்ஜோதி'' ஆண்டவர் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் .இந்த உலகம் நம் அனைவருக்கும் சொந்தம்.இதுவரையில் இருந்தது போல்,இனிமேலும் வீண்காலம் கழிக்காமல் , இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.

இறைவன் படைத்த இவ்வுலகில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சமமானதாகும் .அனைவரும் சமமாக பகிர்ந்து வாழ்ந்தால் ,நம்மை படைத்த இறைவன் மகிழ்ச்சி அடைவார் .உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் எனற பேதம் இல்லாமல் பகிர்ந்து உண்டு ,அனுபவித்து,மகிழ்ந்து ஒற்றுமையுடன் வாழ்வோம்.

வருகின்ற புத்தாண்டு, அனைவருக்கும். மகிழ்ச்சியும் ,ஆனந்தமும், நிறைந்து வழங்க ,எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய ,''அருட்பெரும்ஜோதி ''ஆண்டவர் அருள்புரிவார் .அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.தீயவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகட்டும் ,அவர்களுக்கு இறைவன் அறிவைக் கொடுத்து புனிதர்களாக மாற்றட்டும் .,உண்மை ,நேர்மை,ஒழுக்கம் ,உழைப்பு,ஓங்கட்டும்.

அனைத்து இல்லங்களிலும் இருள் ஒழிந்து, ஒளி வீசட்டும் ! ....தீவிரவாதம் ..,பயங்கரவாதம்,..அணுஆயுத புரச்சி,..எல்லைத் தகராறு,..சாதி சமய மத வேறுபாடுகள்,..அரசியல் காழ்புணர்ச்சி ,..அதிகார துஷ்பிரயோகம்.. ,போன்ற கொடுஞ் செயல்கள் ஒழிந்து ,மக்கள் ஒழுக்கமுடன் ,ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ,அனைவரும் வருகின்ற புத்தாண்டில் சபதம் எடுப்போம்.சத்தியத்தை கடைபிடிப்போம்,சமரசம் காண்போம்.புனிதமுறு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை'' படைத்து புதிய உலகத்தை காண்போம் . .

நாடும், நாமும் ,எல்லா உலக உயிர்களும் ,வருகின்ற புத்தாண்டு முதல் அழிவில்லாத நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.இறைவன் நம்மை என்றும் இடைவிடாது ,துணையாக இருந்து வாழ வைப்பார்,என்ற முழு நம்பிக்கையுடன் வாழ்வோம்.

வருக ! வருக ! புத்தாண்டு என வணங்கி வரவேற்போம் .

உங்கள் அன்பில் வாழும் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு