வியாழன், 20 டிசம்பர், 2012

உலகம் அழியும் என்பதை யாரும் நம்ப வேண்டாம் !


உலகம் அழியும் என்பதை யாரும் நம்ப வேண்டாம் !

உலகம் அழியும் எனபது, உலகம் மனிதர்களால் செய்த பொம்மை அல்ல !

உலகம் அழியும் என்ற வதந்தியை பரப்பியது முட்டாள்கள் சொன்ன கதையாகும்..கதைகளையும் கற்பனைகளையும் மூட நம்பிக்கைகளையும் ,மக்கள் மனதில் விதைத்த ஆன்மீகவாதிகளின் அறியாமை செயல்களாகும் .

உலக ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் ,அருள் பெற்ற ஞானசித்தர்களால் மட்டுமே அறியமுடியும் .அந்த ஞானசித்திப் பெற்ற அருளாளர் ,உலகிலேயே வள்ளல்பெருமான் ஒருவர்தான் .மற்றவர்கள் எல்லாம் ,கருமசித்தி,யோகசித்திப் பெற்றவர்கள் .அவர்கள் சொல்லுவது யாவும் உண்மைக்கு புறம்பானதாகும் .

உலகம் மாபெரும் அருள் இயக்கம் ! அதை கணிக்க அறிவியலாலும் முடியாது,ஆன்மீக சிந்தனை யாளர்களாலும் முடியாது.இந்த உலகம்போல் (அண்டம் ) பலகோடி உலகங்கள் உள்ளன .அத்தனை உலகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் ,இயங்கிக் கொண்டும் உள்ளன .இதை எல்லாம் இயக்கிக் கொண்டு உள்ளது எது ?யார் ? அது எங்கு இருந்து இயக்கிக் கொண்டும், இயங்கிக் கொண்டும் உள்ளது என்பதை வள்ளலார் என்னும் அருளாளர் வெளிப்படையாக சொல்லி ,மக்களுக்கு பதிவு செய்து உள்ளார் .அந்த பாடலைப் பாருங்கள் ...

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆனவெல்லாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியே அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒன்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

உலகில் உள்ள அண்டங்களையும் ,தோற்றங்களையும் ,அதன் உள் இருந்து இயங்கும் உயிர்களையும்,மற்றும் உயிர் அற்ற பொருள்களையும் , பஞ்ச பூத் அணுக்களையும் (மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,) படைத்து ஆடல் (இயக்கம் )செய்து நடத்துகின்ற ,,,அந்த ஈடு இணையற்ற மாபெரும் சக்திதான் ''அருட்பெருஞ் ஜோதி "'என்னும் பெரோளியாகும் ,அந்த பேரொளி இருக்கும் இடம் ,''அருட்பெருவெளி '' என்பதாகும்..அந்த பேரொளியைக் கண்டவர்கள்தான் ஞான தேகம் படைத்தவர்கள் ,ஞானதேகம் படைத்தவர்களுக்கு மரணம் கிடையாது ,உடம்பு உயிர் கிடையாது ,அதற்குப் பெயர் ''சுத்த பிரணவ ஞான தேகம் ''என்பதாகும்.அதற்கு மேலும் சொல்ல வேண்டுமானால் ''ஒளிதேகம் ' பெற்றவர்கள் என்பதாகும்.

உலக வரலாற்றில் ஒளிதேகம் பெற்ற ஒரேஒரு மனிதர் தமிழ் நாட்டில் தோன்றிய ''திருஅருட் பிரகாச வள்ளலார் ''என்பவராகும்..

அவர் சொல்லுகிறார் உலகம் என்றைக்கும் அழியாது ! அழிக்கவும் யாராலும் முடியாது. இனிமேல் வரப்போகிறது ஞான சித்தன் காலம்.,இனிமேல் சுத்த சன்மார்க்கம் என்னும் உண்மைப் பொது நெறி ஒன்றே ,எல்லா உலகத்தும் விளங்கும்.

இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் கிடையாது.தடையற்ற பெருநெறி ,இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும் .அதன் மேன்மேலும் வழங்கும்.

இப்போது உள்ள பலவகைப் பட்ட சமய பேதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும் ,ஆசார பேதங்களும் போய் ,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்,இது கடவுள் சம்மதம்,விருப்பம்.என்கிறார் .
இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய ,மத,சாத்திர ,புராணங்களில் வந்ததாகச் சொல்லப் படுகின்ற பலவகைப் பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி,முதலானவர்களில் ஒருவர் அல்ல ! என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலும் இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் ,எல்லாத் தேவர்களும்,எல்லா ஞானிகளும்,,தங்கள்,தங்கள்,தரத்திற்கு ,தகுந்த அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க் கினறபடி எழுந்து அருள்கின்ற தனித்தலைமைப் பெரும்பதி ''அருட்பெருஞ் ஜோதி ''என்னும் ஒரே அருள் ஒளிதான் என்பதை அனைத்து உலகமும் அறிந்து,தெரிந்து,புரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தி உள்ளார்.

ஆதலால் உலகம் என்றும் அழியாது ,உண்மையை அறிந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.கடவுள் ''அருட்பெரு ஒளியாக'' உள்ளார் என்பதை அறிவு தெளிபட உணர்ந்து ,ஒளியையே கடவுளாக நினைந்து வழிபாடு செய்து ஒளிபெற்று ஆனந்தமாக வாழுங்கள் .

உங்கள் அன்புள்ள ஆண்மநேயன் ;--கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு