வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் !

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் !

கடவுள் ஒருவரே !அவர் ஒளியாக உள்ளார் !

அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் 

உருவ வழிபாடான சிறு தெய்வ வழிபாடு கூடாது!

கடவுள் பெயரால் உயிர் பலி செய்யக் கூடாது!

உயிர்க் கொலை செய்யக்கூடாது,புலால் உண்ணக் கூடாது!

சாதி சமய,மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது !

அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்!

ஏழைகளின் பசியைப் போக்குவதே கடவுள் வழ்பாடு !

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

ஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவு கோல்!

வேதங்களும், புராணங்களும்,சத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டாது !

இறந்தவர் புதைக்க வேண்டும் எரிக்ககூடாது!

கருமாதி,திதி முதலிய சடங்குகள் வேண்டாம்,!

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது!

சாகாதவனே சன்மார்க்கி,!

மரணம் என்பது இயற்கை அல்ல !அவை செயர்க்கையாகும் !

எதிலும் பற்று அற்றவனே துறவி ! தன்னை வெளியே காட்டாதவனே துறவி !

பொருள் இருக்கும் இடத்தில் அருள் இருக்காது !அருள் இருக்கும் இடத்தில அனைத்தும் இருக்கும் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும் .


ஆன்மநேயன் ;;கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு