செவ்வாய், 20 மார்ச், 2012

சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு >


சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்


வள்ளலார் இந்த உலகத்திற்கு கொடுத்த கொடை தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும் ;-இவை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி,  வள்ளலார் மக்கள் முன்னிலையில் வடலூரில் அமைத்துள்ளார்.சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தும் தகுதி சாதாரண மக்களுக்கு பொருந்தாது .அருள் பெற்றவர்கள் தான் வழி நடத்த முடியும் .

வள்ளலார் சங்கத்தை அமைத்துவிட்டார் அதில் அங்கம் வகிப்பவர்கள் தயவு உடையவர்களாக இருக்க வேண்டும்.அதனால்தான் தயவு உடையவர்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றார் வள்ளலார்.அருள் உடையவர்கள் எல்லாம் சன்மார்க்கத்தை அடைந்தவர்கள் என்று தெளிவான விளக்கம் தந்துள்ளார்.  

தயவு உள்ளவர்கள் சன்மார்க்க சங்கத்தில் உள்ள ஒழுக்கங்களையும்,கொள்கைகளையும் முதலில் கடைபிடிக்க வேண்டும் அருள் பெற்ற பின் சன்மார்க்க சங்கத்தை வழி நடத்த வேண்டும் என்பது வள்ளலார் மக்களுக்கு கொடுத்துள்ள உறுதியான செய்தியாகும்

அதனால்தான் வள்ளலார் நானே சன்மார்க்கத்தை நடத்துகிறேன் என்றார்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன ?அருள் பெறாதவர்கள் சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி அற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

சன்மார்க்க சங்கத்தலைவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவராகும் சன்மார்க்க சங்கத்தலைவனே நினைப போற்றும் மார்க்கம் என்மார்க்கமே,என்று புகழ்ந்து கூறுகிறார்.

ஆதலால் இறைவன் அருள் ஆணைப்படி சன்மார்க்க சங்கத்தை வழி நடத்துபவர் நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் என்பது சத்தியமான உண்மையாகும்.அவர் ஒளி உடம்பாக இருந்து செயல் படுத்திக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .

யார் அருள் பெறுகிறார்களோ அவர்களிடம் சன்மார்க்க சங்கத்தை,நடத்தும் பொறுப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொடுப்பார் .அது வரையில் வள்ளலார்தான் சன்மார்க்கத்தை நடத்துவார்

அருளைப் பெற முயற்ச்சி செய்வோம் ,பொறுப்பு தானே தேடிவரும்.அதன்பின் சன்மார்க்கத்தை வழி நடத்தும் தலைவன் ஆவோம் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு