செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உயிர்க் கொலை என்பது யாது ?


உயிர்க் கொலை என்பது யாது ?


 உலகத்தில் உள்ள எல்லாமே உயிர் உள்ளவைகள்தான் எல்லா உயிருள்ள ஜீவன்களும் ஏதாவது ஒரு உயிரை கொன்றுதான் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன இதில் எந்த சந்தேகமும் இல்லை .மனிதன் ஆடு ,மாடு,கோழி ,பன்றி பறவை போன்ற உயிர்களை கொன்று தின்பது குற்றம் என்றும் ஜீவ இமசை என்றும் சொல்லுகிறோம் ,இவை கண்களுக்கு தெரிந்து செய்யும் கொலையாகும் கண்களுக்கு தெரியாத உயிர்களை கொன்று தின்று கொண்டு இருக்கிறோம்,--நிலம் ,நீர் ,அக்கினி ,காற்று ,ஆகாயம்,போன்ற அனைத்திலும் உயிர்கள் உள்ளன ,அதனால் உண்டாகும் அனைத்திலும் உயிர்கள் உள்ளன தாவரம முதல் மனிதன் வரை அனைத்தும் உயிர் உள்ளவைகள் தான்,நாம் சுவாசிக்கும் காற்றிலும் உயிர் உள்ளன .நம் உடம்பில் உள்ள அனைத்து அணுக்களும் உயிர் உள்ளவைகள் தான் ,நாம் ஒவ்வொருவரும் தினமும் பல கோடி உயிர்களை கொன்றுக் கொண்டே இருக்கிறோம் ,உயிர் இல்லாத பொருள் ஒன்று உண்டு --அதுதான் அருள் என்பதாகும் ,அருளை உணவாக உட்கொண்டால் மட்டும் தான் உயிர்க் கொலை கிடையாது .அதனால்தான் வள்ளலார் எந்த உணவையும் உட்கொள்ளவில்லை .தன்னுடைய சுவாசத்தையும் நிறுத்தி விடுகிறார் , தன்னிடத்தில் உள்ள அருளை உணவாக உட்கொள்கிறார் .--நல்ல அமுதம் என் நாவுளம்காட்டி என் அல்லலை நீக்கிய அருட்பெரும்ஜோதி என்றும் .உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே --என்று உணர்ந்து தன் உடம்பில் உயிர் உள்ளது ,உடம்பு எல்லாம் உயிராக உள்ளது .அதனால் உடம்பை அழிக்காமல் அமுதத்தால் உடம்பை பிரித்து உயிர்களைக் காப்பாற்றி மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டுகிறார்,உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் அதுவும் உயிர் கொலைதான ,உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை எந்த உயிர்களையும் உயிர் அணுக்களையும் கொலை செய்யாமல் வாழ்ந்தவர் வள்ளலார் ஒருவர்தான் .இதை சாதாரண அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியாது .இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அதனால் இந்த அளவுடன் நிறுத்திக் கொள்கிறேன் ,

அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு