செவ்வாய், 27 மார்ச், 2012


மாயன் காலண்டர் ! உண்மையா ?பொய்யா ?

மாயன் காலண்டரில் 2012,ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும் என்று விஜய் டி வி யில் ஒலிபரப்புக் கொண்டு உள்ளார்கள் .இவை மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிக் கொண்டு உள்ளது .

உலகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது என்பதை முன்பே விளக்கமாக தெரிவித்து உள்ளேன் .ஜோதிடம் என்பது கிரகங்களின் வேலையாகும்.உயிர்களின் வாழ்க்கை முறையை ஒழுங்கப் படுத்த கிரகங்கள் படைக்கப் பட்டுள்ளன .கிரகங்கள் என்னும் ஜோதிடம் இவ்வுலகத்தின் வேலை செய்யும் கருவிகள் .

கருவிகளைப் படைத்தவன் இறைவன் கருவிகளை படைக்கவும்,உருவாக்கவும் மாற்றவும் அருட்பெரும்ஜோதி என்னும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அந்த பரம்பொருள் ஆகிய ஜோதிக்கு மட்டுமே தெரியும் ,மற்றவை எதற்கும் தெரியாது .தெரிவதாக சொல்வது அனைத்தும் சுத்தமான பொய்யாகும் .

1974,ஆம் ஆண்டுக்கு பிறகு ஞான சித்தர்கள் காலமாகும் .சாதி, சமயம்,மதம் சாத்திரங்கள் ஆசாரங்கள் கற்பனை யான தத்துவங்கள் அனைத்தும் மறைந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் மட்டுமே விளங்கும் .மக்கள் எதற்கும் அச்சமோ .பயமோ,கவலையோ படவேண்டிய அவசியம் இல்லை .இனி வருங்காலம் வசந்த காலமாக இருக்கும் .மக்கள் புதிய சிந்தனைகளையும் புதிய கண்டு பிடிப்புகளும் ,புதிய வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் .இந்த உலகத்தின் உண்மையை உணரும் காலம் வரப்போகிறது .

மனிதன் தெய்வமாக மாறி உலகை கருவிகள் இல்லாமல் சுற்றிவரும் காலம் வரப்போகிறது .மனித சக்தி என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள் .ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளும் புறமும் என்ன நடந்து கொண்டு உள்ளது என்பதை ஞான அறிவால் அறிந்து கொள்வான் ,

ஆதலால் பொய்யான கற்பனைக் கதைகளை படித்து நம்பி ஏமாந்து விடாமல் உண்மையை உணருங்கள் .

மீண்டும் சொல்கிறேன் உலகை அழிக்க யாராலும் முடியாது ,நாகரீகம், வாழ்கை முறை,மாறிக்கொண்டே இருக்கும் மாறாதது உண்மை மட்டுமே .உண்மையை மட்டும் நம்புங்கள்

வள்ளலார் பாடல் ஒன்று ;-

உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடைமின் உலகீர்
உரை இதனிற் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
ஏன் உள்ளத்து இசைகின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய காழ்வு அளிக்கக்
கண்மைதரு வொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

மேலே கண்ட பாடலில் உண்மையை சொல்லி உள்ளார் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு