சனி, 25 பிப்ரவரி, 2012

யோகத்தின் பயன் !

யோகத்தின் பயன் !

யோகம என்பது ஏழு வகைப்படும் அவை ;-இராஜயோகம,கருமயோகம்,ஹடயோகம்,இலயயோகம்,பக்தியோகம் ,மந்திரியோகம்,ஞானயோகம் என்பவையாகும் ,

யோகம் என்பது யாவுமே ஸ்துலத்தை நினைவில் கொள்ளாமல் சூஷ்மத்தை,நினைப்பதாகும்,யோகம என்ற பெயரில், விபரம் தெரியாமல் கண்டதை நினைத்து யோகம் 
,தவம ,தியானம் ,செய்யக்கூடாது,நம்முடைய உடம்பை இயக்கம் ஆன்ம உயிர் ஒளியான சூஷ்மமான உள் ஒளியை நினைத்து யோகம செய்யவேண்டும்.அதற்கு ஞானயோகம என்பதாகும்.இதைத்தான் வள்ளலார் ஞானத்தில் சரியை,கிரியை,யோகம ,ஞானம் .என்பதில் உள்ள பதினைந்தாம் படியாகிய,ஞானத்தில் யோகம என்னும் ஞானயோகம் செய்யச்சொல்கிறார்,

இவை யாதெனில் நம் உடம்பில் இறைவன் குடிருக்கும்.புருமத்தியில் உள்ள ஆன்ம ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொள்ள வேண்டும்.நம் மனதை அங்குதான் செலுத்தவேண்டும்.அப்படி அங்கு செலுத்தும்போது,நம் உடம்பில் உள்ள எழுபத்தி இரண்டாயிரம் நாடி நரம்புகளும் முறையாக வேலை செய்யும்.உடம்பில் அனைத்து வியாதிகளும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும் .அறிவு தன்னைத்தானே தெளிவாகும் .

ஆன்மாவில் இருந்து வெளிவரும் ஆற்றல் அதாவது அருள்மருந்து,உடலையும் உயிரையும் காப்பாற்றும் சக்தியாகும் .இதை தெரியாமல் மக்கள் மற்றவர்களிடம் ஏமாந்து பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்து கொண்டு உள்ளார்கள் .

மக்களை ஏமாற்றி பணம் பரிப்பதற்காகவே , பல பல பொய்யான அமைப்புகள் இயங்கிக் கொண்டு உள்ளது.அவர்கள் போடும் விளம்பரத்தால் வேஷத்தால்,மக்கள் மதிமயங்கி வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி கொள்கிறார்கள் ..இதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் ஆதரவு தருகிறார்கள் . 

மனம் ஒருமைப் பாட்டுக்கு வருவதற்கு ஏழை எளியவர்களுக்கு உபகாரமும,இரக்கமும் செலுத்தினால் அதுவே மனதை ஒருமைப்படுத்தும் .இதுவே இயல்பான வழியாகும் 

பள்ளியில் படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்லித் தராமல் பொய்யான யோகத்தையும் தியானத்தையும் சொல்லிக் கொடுக்க பலகோடி பணத்தை செலவு செய்து கொண்டு உள்ளார்கள்.இதை யாரிடம் சொல்வது எப்படி சொல்வது.ஆண்டவர்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு