வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கடவுள் இருக்கா இல்லையா ?


கடவுள் இருக்கா இல்லையா ?


கடவுள் இருக்கு இல்லை என்பதை யார் சொன்னாலும் ,அவரவர் செயகையாலும் நம்பிக்கையிலும் வரும் வார்த்தைகளாகும் .இந்த உலகத்தை இயக்குவது யார் என்பதை உணர்ந்தால் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டு உள்ளது, இருக்கிறது என்பது தெளிவாகும் .அதைத்தான கடவுள் என்கிறார்கள் அந்த கடவுள் யார் என்பதில் தான் வேறுபாடுகள் .ஒவ்வொரு ஞானிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள் .அந்த கருத்து பேதத்தை மாற்றி உண்மையைக் கண்டவர் வள்ளலார் அவர்கள் .அந்த சக்தி உருவம் தாங்கிய மனிதர்கள் அல்ல தத்துவங்கள் அல்ல .அது மாபெரும் அருள் ஆற்றல் உள்ள பேரொளியாகும்.அதற்கு பெயர் -அருட்பெரும் ஜோதியாகும் .அது தனிப்பெரும் கருனையாகும்.அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை .அதுதான் பல கோடி அண்டங்களை தன அருள் சக்தியால் இயக்கிக் கொண்டு உள்ளது .என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தான் அறிந்து தெளிவு படுத்தியுள்ளார் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு