புதன், 7 செப்டம்பர், 2011

ஆசான் யார் ?


ஆசான் யார் ?


ஆசான் என்பது யாரை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பமேஉள்ளது. ,இன்று உள்ள ஆசான்கள் அனைவரும் பணம் பறிக்கும் ஆசானகளாகவே இருக்கிறார்கள் .நான் அனைவருடைய கருத்துக் களையும் பார்த்து விட்டு ,வள்ளலார் சொல்லிய, வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை படித்த பின்தான் எனக்கு முழுமையாக அறிவு தெளிவு புலப்பட்டது .அவர் சொல்லியதோடு இல்லாமல் அதன் படி வாழ்ந்து காட்டியுள்ளார்.
அதைவிட முக்கியமானது மரணத்தை வென்றவர், .மரணத்தை வென்றவர்களால்தான்,உலக உண்மைகளையும் மனித வாழ்க்கை முறைகளையும் உண்மையாக சொல்லமுடியும் என்பதை உணர்ந்தேன்
35,ஆண்டுகளாக வள்ளலார் காட்டிய வழியை பின் பற்றி வருகிறேன் .

ஆசான் என்பது நமக்கு[எனக்கு ]வள்ளலார்தான் முன் தெரிகிறார்.அவரது சுத்த சன்மார்க்க கொள்கைகள் மக்களை நல்வழிப் படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது என்னுடைய ஆழமான கருத்தாகும் .
ஆதலால் ஆன்மீக வேஷம் போடும் வேடதாரிகளை அடியேன் நம்புவதில்லை .அவர்களை ஆசான் என்றும் சொல்லுவற்கு இல்லை .உடல் பொருள் ஆவி மூன்றும் இறைவன்பால் யார் செளுத்துகிரார்களோ அவர்களே ஆசானாகும் .அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் அவர்களை நான் வணங்குகிறேன் பின் பற்றுகிறேன் .

அன்புடன் ஆன்மநேயன்--கதிர்வேலு

1 கருத்துகள்:

7 டிசம்பர், 2013 அன்று AM 4:39 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

sri.vallalar avarkal arut perumjothi anru chidambaram nadaraja peumanai kurikirara?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு