புதன், 7 செப்டம்பர், 2011

மனிதன் மனிதனாக வாழ வேண்டும் அதுவே இறைவன் தீர்ப்பாகும் !



மனிதன் மனிதனாக வாழ வேண்டும் அதுவே இறைவன் தீர்ப்பாகும் !

எந்த உணவாக இருந்தாலும்அனைத்திற்கும்ஒரு வரைமுறை உள்ளது மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அனைவரும் பகிர்ந்துதான் உண்ணவேண்டும் இவையாவும் வெளியில் கிடைக்கும் உணவாகும் நம் உடம்பில் உள்ள உணவு ஒன்று உள்ளது அதற்குப் பெயர்தான் அருள் உணவு என்பதாகும் அந்த அருள் உணவு யாரும் உண்பதில்லை அதை எடுப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை அதை இறைவன் ஒவ்வொருவருக்கும் ஆன்மாவில் அதாவது உயிர் ஒளியில வைத்துள்ளார் .அதை உண்பவர்கள்தான் ஞானிகள் .அவர்களுக்கு வெளியில் உள்ள அசுத்த உணவு தேவை இல்லை அருள், அருள் என்று எல்லோரும் சொல்கிறார்கள் அருள் எங்கே உள்ளது என்பது சராசரி மனிதர்களுக்கு தெரிவதில்லை 

பொருள் உணவு உண்பவர்கள் எல்லோரும் மாண்டு விடுவார்கள் அருள் உணவு உண்பரகளுக்கு மரணம் கிடையாது .ஆதலால் நீங்கள் எந்த உணவு வேண்டுமானாலும் உண்டு  கொள்ளுங்கள் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஒரு மனிதனின் குணங்கள் குற்றங்கள் எல்லாம் அவன் உண்ணும உணவினால்தான் உண்டாகுகிறது என்பதை உணர்ந்தால்தான் உண்மைகள் விளங்கும் .அதுவரையில் உண்மை விளங்காது .

ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு வெளியில் உள்ள உணவு கொடுப்பதில்லை ஏன்?வெளியில் உள்ள அறுசுவை உணவை கொடுத்தால் அது தாங்காமல் இறந்து விடும் .அதனால்தான் அதன் வளர்ச்சிக்கு அதற்கு வேண்டிய உணவு அதன் தாயின் மார்பில் சுரந்து தரப்படுகிறது .அந்த தாயின் மார்பில் எப்படி பால் சுரந்தது என்பதை சிந்தித்தீர்களா ?இல்லை, எதோ பால் வருகிறது என்று நினைக்கிறீர்கள் .அதுதான அந்த தாயின் மார்பில் கலப்படம் இல்லாமல் அறுசுவை இல்லாமல் சுரப்பதாகும் அதையார் செய்து அனுப்புகிறார்கள் .அங்கேதான் சிந்திக்க வேண்டும் .அந்த தாயின் உடம்பில் கரு உண்டாகும் பொது அதற்கு தேவையான உணவை ஆன்மாவில் இருந்துதான் அந்த குழந்தைக்கு தரப்படுகிறது .தாய் உண்ணும உணவை அந்த குழந்தை உண்டால் அந்த குழந்தை வளராது அங்கேயே இறந்து விடும் .

அதுபோல நமக்கு வெளியில் வாழ்வதற்கு வெளியில் உள்ள உணவை உண்பதால் வளர்ச்சியடைந்து நரை திரை முதுமைப் பெற்று மரணம் அடைந்து விடுகிறோம் .நாம் மரணம் அடையாமல் வாழ வேண்டுமானால் நமக்கு இறைவன் வைத்த உணவான அருள் உணவை உண்பதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.அந்த அருள் அமுதம் கிடைபதற்கு.முதல் தடையாக இருப்பது மாமிசம் என்ற புலால் உணவாகும் .அதனால்தான் உயிர்க் கொலையும் புலை புசிப்பும் வேண்டாம் என்பதாகும்.

அதற்கு மேல் தாவர உணவில் கூட,இதை இதைத்தான் உண்ணவேண்டும் என்ற வழிமுறை இருக்கிறது .அதையும் முறையாக கடைபிடித்து வந்தால் அந்த உணவும் நீங்கி அருள் உணவு உண்ணும வாய்ப்பு கிடைக்கும்.அதை பெறுபவர்கள்தான் முற்றும துறந்த ஞானிகள் என்பதாகும் பொது நோக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் .மக்களை காப்பாற்ற வழி காட்டுவார்கள் .அவர்கள் சொல்லியும் கேட்கவில்லை என்றால் மக்கள் மாக்களாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .கண்டதே காட்சி கொண்டதே கோலம என்று இருப்பவர்களுக்கு எதை சொன்னாலும் கேட்கமாட்டார்கள் .அது அவரவர்கள் வினைப்பயன் என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் .

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனால் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது .அதை அவர்கள் எந்தவழிகளிலும் பயன் படுத்தி செயல்படுத்திக் கொள்ளலாம் .அதன் பின் விளைவுகளை அவர்களே அனுபவித்தாக வேண்டும் 
இதுவே இறைவன் கட்டளையாகும் .புரிந்தால் சரி .

உங்கள் அனைவரின் அன்பு சகோதரன் ஆண்மநேயன் --கதிர்வேலு. ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு