வியாழன், 8 செப்டம்பர், 2011

தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் தேவை யாகும் !


தனிமனித ஒழுக்கம் அனைவருக்கும் தேவை யாகும் !


ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தினால் நாமும் நாடும் திருந்தும் என்பது உண்மையான கருத்தாகும் .அதைத்தான் வள்ளலார் .கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக.அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க என்றார் .ஒழுக்கம் நிறைந்த அருள் பெற்றவர்கள் நாட்டை ஆளும் போது.மக்களை கெடுக்கும் தீய சக்திகளை வேரோடு பிடுங்கி எரிந்து விடுவார்கள் .சாதி மதம் சமயம் இனம்,போன்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம என்ற சமநோக்கு சிந்தனையுடன் ஆட்சி செலுத்துவார்கள் . உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் .ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கும் .அப்படி கிடைத்தால் தவறு நடக்காது .ஊழல் லஞ்சம் .திருட்டு,கற்பழிப்பு ,மது மாமிசம், கொலை கொள்ளை .தீவிரவாதம் அணு ஆயுதம்,எல்லை பாதுகாப்பு ,போன்ற எதுவும் தேவை இல்லை,எதுவும் நடக்காது .ஆதலால் தனி மனித ஒழுக்கம் தன்னைத்தானே வந்து விடும் .இவை யாவும் நடக்குமா என்பது கேள்வியாகும் ,கண்டுப்பாக நடக்கும் .என்று அருளாளர் வள்ளலார் அவர்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .நம்பிக்கையுடன் இருப்போம் .எதுவும் சிலகாலம் .அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு.

1 கருத்துகள்:

8 செப்டம்பர், 2011 அன்று PM 10:45 க்கு, Blogger http://machamuni.blogspot.com/ கூறியது…

எல்லாம் சரி வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்று என்றாவது தெளிவாக அறிதலுக்கு யாரேனும் உங்களை நோக்கி வந்ததுண்டா??நீங்கள்தான் இது ஞானம் இது என்று தெளிந்ததுண்டா????ஏனெனில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இது என்று தெளிவாக எமது சபையில் உபதேசம் பெறாமல் சொன்னவருண்டு?உபதேசம் இது என்று உணர்ந்தவருண்டு!!!உணராமலேயே இது வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கம் என்று உளறுவாறுமுண்டு,உண்மையை உணர்ந்தாரே சுத்த சன்மார்க்கர்கர்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/
http://kavithaichcholai.blogspot.com/

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு