வெள்ளி, 9 செப்டம்பர், 2011

சிரிப்பு பகிழ்ச்சியை கொடுக்கும் .எப்படி ?


சிரிப்பு பகிழ்ச்சியை கொடுக்கும் .எப்படி ?
சிரிப்பு எதனால் வருகிறது மனிதன் அகம் மகிழ்கின்ற போது சிரிப்பு வருகிறது .அகம் எதனால் மகிழ்கின்றது மற்றவைகளை விட நலமாக உள்ளேன் .மற்றவர்களை வெற்றிக் கொண்டு விட்டேன் ,எனக்கு எந்த துன்பமும் இல்லை ,யாரைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை என்பது போன்ற தான் அடையும் சுகத்தாலே மகிழ்ச்சியின் வெளிப்பாடே சிரிப்பாகும் .
அடுத்தவர்களின் துன்பத்தைக் கண்டு சிரிப்பதும் சிரிப்புதான் ,அடுத்தவர்கள் துன்பம் நம்முடைய துன்பம் போல் என்று என்னும் என்னமுடையவர்களுக்கு சிறப்பு வருமா? மற்றவர்கள் சிரிக்கமுடியாமல் இருக்கிறார்கள் என்றால் என்ன ?அவர்கள் ஏதோ ஒரு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மையாகும் .அவர்கள் துன்பபடுமபோது அதனால் கிடைக்கும் எதிர்பார்ப்பு தான் சிரிப்பாகும் .
ஒருவன் சிரிக்கிறான் என்றால் மற்றவர்கள் துன்பப் படுகிறார்கள் என்பது உண்மையாகும்.அதை ஏற்றுக் கொள்ளமுடியுமா?வாழ்க்கை என்பது சிரிப்பதற்கு இல்லை ,சிந்திப்பதற்கு !இந்த உலகில் உள்ள மக்கள் அறியாமல் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு துன்பப் படுகிறார்கள் அவர்கள் துன்பத்தை எப்படி போக்குவது என்பதை நினைப்பவர்கள் ஞானிகள் .அவர்கள் சிரிக்க மாட்டார்கள் .அவர்கள் இறைவன் படைத்த உலகில் உண்மைத் தெரியாமல் போட்டியும் ,பொறாமையும் .வஞ்சகமும் ,கொண்ட வாழ்க்கையில் வாழ்ந்து அழிந்து கொண்டு இருக்கிறார்களே .அவர்களை எப்படி நல வழிப் படுத்துவது என்பதை நினைத்து மக்களுக்கு ஒழுக்கத்தையும் .இறைவனுடைய உண்மையும் எடுத்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள் .அதனால் அவர்கள் சிரிப்பதில்லை .
அதனால் அவர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்பது பொருள் அல்ல !நாம் சிரிக்க பிறக்கவில்லை .நாம் செல்லும் இடம் வேகுதூரம் உள்ளது ,அதுதான் இறைவன் இல்லம் அந்த இடத்திற்கு செலவதுதான் மனித வாழ்க்கையாகும். மனித வாழ்க்கையின் லஷ்யமாகும் ,அதைவிடுத்து சிரித்து வாழ்வதில் எந்த நன்மையையும் இல்லை .சிரிப்பு எவ்வகவு நாளைக்கு தொடரும் ,அடுத்த கணமே துன்பம் நிறைந்து விடும் .சிரித்து வாழ்ந்திடாதே மற்றவர்கள் சிறக்க வாழ வேண்டும் .அதுவே மனித நேயமாகும் .அதுவே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் .அதை வலியுறுத்திச சொன்னவர் வள்ளலார் என்ற மாபெரும் ஞாநியாகும்
இறைவன் படைப்பில் நாம் எல்லோரும் சகோதரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழி காட்டுவோம் அதுவே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகும் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு