செவ்வாய், 13 செப்டம்பர், 2011

வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


இந்த உலகம் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற வேறுபாட்டினால் மனிதனை மனிதன் வேறு படுத்தி ஒற்றுமை இல்லாமல் அழிந்து கொண்டு இருந்தார்கள் .இவை மனிதனுக்கு அறிவு தெரிந்த காலம் முதல் நடந்துக் கொண்டு வருகின்றன. 

மனிதர்களை நல்வழிப்படுத்த பல அருலாளர்களை இறைவன் அனுப்பிக்கொண்டே இருந்தார.அவர்கள் வந்து பல பொய்யான கலைகள், கற்பனைக் கதைகளாகவும் பலவழி முறைகளை சொல்லிப் பார்த்தார்கள் மனதை அடக்கும் .யோகம தவம தியானம் போன்ற பயிற்ச்சி முறைகளையும் சொல்லிப் பார்த்தார்கள் .பல உபதேசங்கள் சொல்லிப் பார்த்தார்கள் மக்களை ஒன்றும் மாற்றம் செய்ய முடியவில்லை .ஏன் ?

அவர்கள் அனைவரும் இறைவன் கட்டளைப்படி உண்மையைத் தெளிவாக சொல்லவும் இல்லை சொல்லியபடி வாழ்ந்து காட்டவும் இல்லை .அரசியல் கட்சிகள் போல் பல பிரிவுகள் ஆன்மீகத்தில் தோன்றி விட்டன .ஒவ்வொரு ஆன்மீகத் தலைவருக்கும் அவரவர்க் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொருக் கூட்டம் உருவாக்கப் பட்டது. இதனால் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதம் ஏற்ப்பட்டு மக்கள் போரிட்டு அழிந்து வீண் போய் கொண்டு இருந்தார்கள் .

இதைப் பார்த்த இறைவன் .இதை உடனே நிறுத்த வேண்டும் என்ற எண்ணங் கொண்டு .ஒரு பரிசுத்தமான ஆன்மாவை இந்த உலகத்திற்கு 1823,ஆம் ஆண்டு அனுப்பி வைக்கிறார் .அவர்தான் சிதம்பர இராமலிங்கம் என்னும் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் 

அவர்தான் உண்மையான இறைவன் யார்/ என்பதை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் .அது மட்டும் அல்ல ,மனிதன் ,மரணம் அடையாமல் வாழ முடியும் என்ற உண்மையை உலகுக்கு வாழ்ந்து வழிக் காட்டியுள்ளார்.கடவுள் ஒருவர்தான் என்பதை உலகுக்கு காட்டுவதற்கு .தமிழ் நாட்டில் உள்ள வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' நிறுவி உள்ளார் ,அங்கே கடவுள் ஒளியாக உள்ளார் என்பதைக் காட்டும் வகையில் ,அணையா விளக்கு {அதாவது தீபம் }ஒளிர்ந்து கொண்டே இருக்கும் .அடுத்து இறைவனை வழிபடுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும் ,தெரிந்து கொள்வதற்கும் ஒரே மார்க்கம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 'என்ற அனைவருக்கும் பொதுவான சங்கத்தை அமைத்துள்ளார் .

அந்த சங்கத்தில் உள்ளவர்கள் கொலை புலை {புலால் }மறுத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வகுத்து தந்து உள்ளார் .உயிர்க் கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் ,இறைவனைப் பற்றி பேசுவதற்கும் வழிபடுவதற்கும் தகுதி அற்றவர்கள் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .இறைவனை அறிவதறகும் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கும் முதல் தடையாக இருப்பது உயிர்க் கொலை செய்வதும் புலால் உண்பதும்தான் என்பதை /ஆதாரத்தோடு விளக்கி உள்ளார் .

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் ,அவை மறையும் பொது அன்பும் அறிவும் தானே மறையும் ,விளங்காது .என்பது இறைவன் ஆணையாகும் என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரை நடைப் பகுதியில் ,எழுதி வைத்து உள்ளார் அதைப் படித்தாலே மக்கள் ஒழுக்க நிலைக்கு வந்து விடுவார்கள். அடுத்து உலக உண்மைகளை ;;திரு அருட்பா ''என்னும் ஆறாம் திரு முறையில் எழுதி வைத்து உள்ளார் .இவை எல்லாம் வள்ளலார் எழுதவில்லை .கடவுள் ''இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர்'' சொல்ல'  சொல்ல வள்ளலார் ஒரு கருவியாக இருந்து எழுதி வைத்துள்ளதாகும் .வள்ளலார் கல்வி கற்காதவர் .யாருடைய போதனையும் கேட்காதவர் .இறைவனிடம் இருந்து ,''சாகாக் கல்வி கற்றவர் ''மற்றவர்கள் எல்லாம் சாகும் கல்வி கற்றவர்கள் .சாகாக் கல்வி கற்றவர்கள் கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்கள் .என்பது உண்மையாகும் .

அதனால் இறைவன் வள்ளலார் அவர்களுக்கு இந்த உலகத்தை இயக்கும் பொறுப்பான ''ஐந்தொழில் வல்லபத்தை 1874,ஆம் ஆண்டு கொடுத்துள்ளார் .இது வரைக்கும் யாருக்கும் கிடைக்காத பெரிய உயர்ந்த பதவியான ''இந்த உலகத்தை ஆளும் அதிகார ஆட்சியைத் தந்துள்ளார் .வள்ளலார்தான் இந்த உலகத்தை ஆண்டுக் கொண்டு உள்ளார் என்பது.சுத்த சன்மார்க்கத்தை கடைப் பிடிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரியும் .இனிமேல் இந்த உலகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது .உண்மைகள வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. 
மக்கள் இனிமேல் ஒழுக்கத்துடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வார்கள் .

துன்மார்க்கம் தொலைந்து நன் மார்க்கம் நடை பெரும் .இவை கடவுளுடைய ஆணையாகும் .வள்ளலார் ஆட்சி செய்யம் காலமாகும் .மக்கள் இனிமேல் துன்பமும் ,துயரமும் ,அச்சமும் பயமும் இல்லாமல் வாழலாம் .உலகம் முழுவதும் ஒரு குடை கீழ்தான் செயல்படும் .குற்றம் செய்யும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ,அரசியல் வாதிகளும் .ஆண்டவர் தீர்ப்பான நீதி மன்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது .அவரவர்கள் முக மூடி வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் விளங்கும் .இதற்கு எவ்விதப் பட்டத் தடைகளும் கிடையாது .இனிமேல் கலியுகம் கிடையாது .சத்திய யுகம் ஆரம்பித்து விட்டது. .பழைய பொய்யான வேதம், ஆகமம் ,புராணம் ,இதிகாசம் சாத்திரம் .எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடும் .மக்கள் உண்மையை உணர்ந்து உண்மையுடன் வாழும் காலம் ஆரம்பமாகி விட்டது. இன்மேல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் .

அதற்கு முக்கியமானது ஒழுக்கம் .அந்த ஒழுக்கம்தான் .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .இந்த ஒழுக்க வழிமுறைகளை .வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .அதன் பின் அறிவு தானாக விளங்கும் .இனிமேல் பொய்ப் பொருளை நம்பாமல்,மெய்ப் பொருளை நம்புங்கள் .அந்த மெய்ப் பொருள்தான் ''அருட்பெரும் ஜோதி'' என்பதாகும்.அனைவரும் வளமுடன் வாழ்க !

உங்கள் ஆன்மநேயன் -கதிர்வேலு.    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு