வியாழன், 12 மே, 2011

உருவவழிபாடு தேவையா ?வேண்டாமா? கடிதம்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .உருவ வழிபாடு தேவையில்லை.கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பது வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானதாகும்.உடம்பின் உறுப்புகளை (தத்துவங்களை)சிலைகளாக வைத்து,பல கடவுள்கள் இருப்பதாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்,உண்மையை விட்டு தத்துவங்களை கடவுளாக எண்ணி மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்,ஒழுக்கம் என்பது குறைந்து விட்டன,கடவுளுக்கு கை,கால,உடம்,இருபதாகவும்.குடும்பம்,மனைவி மக்கள் இருப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்,கடவுளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருபதாகவும் அவைகளை மனிதனுக்கு இருப்பதுபோல் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள்.கடவுளுக்கேஇப்படி இருக்கும்போது நமக்கு ஏன்இருக்க கூடாது என்று தவறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அதனால் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டன.உருவவழிபாடு மக்களை நல்வழி படுத்தமுடியாது.அதனால் உருவ வழிபாடு தேவையற்றதாகும்.
   கடவுள் ஒளியாக உள்ளார்,அவர் எல்லாஉடம்பிலும் உயிராக ஒளியாக  செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்,அந்த உயிரே கடவுளாகும்,ஆதலால் எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே கடவுள் வழிபாடாகும் என்பதை நமது அருளாளர் வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார்.உடம்பிற்கு ஒரு உயிர்தான் இருக்கமுடியும்,அதுபோல் இந்த உலகத்திற்கு ஒரு கடவுள்தான் இருக்கமுடியும்,பல கடவுள் என்பதும் பல தெய்வங்கள் என்பதும் பொய்யான செய்திகளாகும் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே என்றார் வள்ளலார்.உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும் சாதி,மதம் சமயம் எல்லாம் பொய்யானதாகும்.கடவுள் பெயரால் சமயங்களும் மதங்களும் பொய்யான கருத்துகளை சொல்லி மக்களை பிரித்து விட்டார்கள்.அவைகளை நம்பவேண்டாம் என்கிறார் வள்ளலார்.
   சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி!
என்கிறார் வள்ளலார்
   கலை உரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமேல்லாம்.மணமூடிப் போக என்று சாடுகிறார் வள்ளலார்.
கடவுள் எப்படி உள்ளார் என்பதை கீழவரும் பாடலில் விளக்குகிறார்.     

இயற்கையிலே பாசங்கள் ஒன்ருமிளார் குணங்கள் 
ஏது மில்லார் தத்துவங்கள் ஏதுமில்லார் மற்றோர் 
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் 
திரிபில்லார் கலங்கமில்ளார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் 
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய் 
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் .

 என்று கடவுளின் தன்மையைப்பற்றி தெளிவாக தெருயப்படுத்தியுள்ளார்.ஆதலால் கடவுள் ஒருவரே அவர் அருட்பெருன் ஜோதியாக உள்ளார்,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்/

  கடவுள் பெயரால் உயிர்பலி செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும் .
எல்லாஉயிர்களியும் தம உயிர்போல் பாவிக்கும் எண்ணம வந்து உண்மையான உரிமையுடன் வாழ வேண்டும்.

  மனிதன் மனிதனாக் வாழவேண்டுமானால் அன்பு,கருணை தயவு வேண்டும்.கடவுள் கருணையாக உள்ளார் அதுபோல் நாமும் கருணையுடன் வாழ்ந்தால் நம்மை கடவுள் கைவிடமாட்டார்.

 உருவவழிபாட்டினால் கருணை வாராது,பொருளுக்கு முக்கியத்துவம்தான் வருமே ஒழிய அருளுக்கு முக்கியத்துவம் வாராது.அதனால்தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்.போருளைத்தேடினால் அருள் வாராது.அருளைத்தேடினால் அனைத்தும் வந்து சேரும்.இதுவே உண்மையாகும்.அருள் தேவையா ?பொருள் தேவையா ?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.உருவ வழிபாட்டினால் அருள் நிச்சியம் கிடைக்காது.உயிர் ஒளி வழிபாட்டினால் அனைத்தும் கிடைக்கும்.ஆதலால் உருவ வழிபாடு தேவை இல்லை என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அருள் கருத்தாகும்.அதை ஏற்று அனைவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.--அன்புடன் கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு