சனி, 24 செப்டம்பர், 2022

வள்ளலாரின் முக்கிய கருத்துக்கள்!

 வள்ளலாரின் முக்கிய கருத்துக்கள்!


கடவுள் ஒருவரே !

அவரே அருட்பெருஞ்ஜோதியர்!


நன்மார்க்கம் நன்மார்க்கம்!

சன்மார்க்கம்

சன்மார்க்கம்!


உயிர்க்கொலை செய்யாதே !

புலால் உண்ணாதே!


தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதே !


வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்!


எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! 


என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!


நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே 

சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே! 


நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே

எம்பலம் ஆகிய அம்பலப்பாட்டே!


உலகினில் உயிர்க்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக,

நீ அடைந்து விலக்குக மகிழ்க! 


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக !


கொல்லா நெறியே குருவருள் நெறி !


உயிர் எலாம் பொதுவில் உளம்பட நோக்குக !


 உயிர்உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் செய்!


அருள் அலாது அணுவும் அசையாது !

அதனால் அருள்  நலம் பரவுக !


அருள்  நெறி ஓன்றே தெருள் நெறி ! அருள் பெற முயல்க !


அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருள் அறிவு !


அருள் பெறில் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும்!


அருள் சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ் சுகம்! 


அருள் அறியார் தம்மையும் அறியார ! அதனால் அருள் பெற முயல்க !


அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறும் நிலை !


ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!


உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ! 


ஏழைகளின் பசிப் பிணியைப் போக்குவதே கடவுள் வழிபாடு ! 


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாதுகாக்க வேண்டும்!


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்!


சாதி சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது ! 


கருணை உள்ள இதயத்திலே கடவுள் வாழ்கிறார்!


கருணையும் சிவமும் ஒன்றே எனும் காட்சியும் பெறுக ! 


அன்பு தயவு கருணையால் அருள் பெறலாம்! 


அருள் வழங்கும் கடவுளே அருட்பெருஞ்ஜோதி!


எல்லாம் செய் வல்ல தெய்வம் அருட்பெருஞ்ஜோதி எங்கும் நிறை தெய்வம் !


சாகாதே கல்வியே கல்வி 

ஒன்றே சிவம் என அறிந்த அறிவே தகும் அறிவு ! 


ஒத்தோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணைந்து உலகத்தை நடத்த வேண்டும்!


எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் ! 


நல்லாரக்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம் ! 


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்! 

காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்!


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தனக்கு நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்! 


சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்!

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்! 


ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்!


அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்த தேனே அருள் விரைந்து !


பொது நடத்தரசே புண்ணியனே புலவரெலாம் புகழ் கண்ணியனே !


உத்தர ஞான சிதம்பரமே சித்தி எலாம் தரும் அம்பரமே !


நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே நல்ல எலாம் செய் வல்லவனே !


அருட்பொது நடமிடும் தாண்டவனே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவனே !


நடராஜ பலமது நம்பலமே நடமாடுவது திரு அம்பலமே !


நடராஜர் பட்ட நறும் பாட்டு ஞாலத்தார் பாட்டெலாம் வெறும் பாட்டு!


சிதம்பர பாட்டே திருப்பாட்டு ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு ! 


அம்பலப் பாட்டே  அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு !


சன்மார்க்கம் சன்மார்க்கம் நன்மார்க்கம்! 


நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே நல்வரம் ஈயும் தயாநிதியே !


அருட்பெருஞ்ஜோதிக் கண்டோமே ஆனந்த தெள்ளமுதம் உண்டோமே ! 


சிற்சபை நடம் அறிந்து  தியானம் செய்தால் பெற வேண்டியதை பெறலாம்! 


உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட வெள்ஒளி காட்டிய மெய் அருட் கனல்!


தொடரும்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு