சனி, 24 செப்டம்பர், 2022

மனிதன் செய்யக் கூடாத செயல்கள்!

 வள்ளலாரின் அருள் வார்த்தைகள்!

மனிதன் செய்யக் கூடாத செயல்கள்.


*கீழே உள்ளன.*


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே!


வலிய வழக்கிட்டு மானங் கெடுக்காதே!


தானங் கொடுப்போரைத் தடுத்து நிற்காதே!


கலந்த சினேகரைக் கலகஞ் செய்யாதே!


மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்யாதே!


குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொள்ளாதே!


ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!


தருமம் பாராது தண்டஞ் செய்யாதே!


மண்ணோரம் பேசி வாழ்வழிக்காதே!


உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்யாதே!


களவு செய்வோர்க்கு உளவு சொல்லாதே!


பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே!


ஆசை காட்டி மோசஞ் செய்யாதே!


வரவுபோக் கொழிய வழியை யடைக்காதே!


வேலை யிட்டுக் கூலி குறைக்காதே!


பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே!


இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்று சொல்லாதே!


கோள் சொல்லிக் குடும்பங் குலைக்காதே!


நட்டாற்றிற் கையை நழுவ விடாதே !


கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுக்காதே !


கற்பழிந்தவளைக் கலந்திருக்காதே!


காவல் கொண்டிருந்த கன்னியை அழிக்காதே!


கணவன்வழி நிற்போரைக் கற்பழிக்காதே !


கருப்பம் மழித்துக் களித்திருக்காதே !


குருவை வணங்கக் கூசி நிற்காதே !


குருவின் காணிக்கை கொடுக்க மறக்காதே !


கற்றவர் தம்மைக் கடுகடுக்காதே !


பெரியோர் பாட்டிற் பிழை சொல்லாதே !


பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைக்காதே !


கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைக்காதே !


ஊன்சுவை யுண்டு உடல் வளர்க்காதே !


கல்லும் நெல்லும் கலந்து விற்காதே !


அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்யாதே !


குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்க்காதே !


வெய்யிலுக்கு ஒதுங்கும் விருக்ஷத்தை அழிக்காதே !


பகை கொண்டு அயலோர் பயிரை அழிக்காதே !


பொது மண்டபத்தைப் போய் இடிக்காதே !


ஆலயக் கதவை அடைத்து வைக்காதே !


சிவனடியாரைச் சீறி வையாதே !


தவஞ்செய் வோரைத் தாழ்வு சொல்லாதே !


சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்யாதே !


தந்தைதாய் மொழியைத் தள்ளி நடக்காதே !


தெய்வம் இகழ்ந்து செருக்கு அடையாதே !


தொடரும்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு