திங்கள், 12 செப்டம்பர், 2022

வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !

 *வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !*


*வருகின்ற 05-10-2022 முதல்  05-10-2023 வரை 52 வாரங்கள் தமிழக அரசால் விழா எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.* 


*நமது தமிழக முதல்வர் அவர்கள் வள்ளலார் மீது அளவில்லா பற்றுக் கொண்டு தனிப்பட்ட முறையில் பெரு முயற்சி எடுத்துள்ளார்கள் அதற்காக தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் , திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் அனைத்து சன்மார்க்க அன்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்*

*சாதி சமயம் மதம் சாராத,உலகத்திற்கே ஒரு பொதுவான புதிய தனிநெறியான தனிக் கொள்கையான "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை" 1872 ஆம் ஆண்டு  வடலூர் தோற்றுவித்து உள்ளார்கள்.* 


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்  என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்வதற்காக  வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத்" 1867 ஆம் ஆண்டு துவக்கி வைத்து இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது என்பதும் உலகமே அறிந்த்தாகும்*


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்பதை அழுத்தமாக தெரிவித்து, இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமாக வடலூரை தேர்வு செய்துள்ளார்,*


*சமயம் மதம் கடந்தது! சமயம் மதம் சாராதது!*


 *சமயங்கள் மதங்கள் சார்ந்த கடவுளின் பெயரால், கோவில் ஆலயம்,சர்ச், மசூதி போன்ற தெய்வ நிலையங்கள் எதுவும் (தோற்றுவிக்காமல்) வெளிப்படுத்தாமல், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிபாட்டு முறையை, வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை" யைத் தோற்றுவித்து கடவுள் ஒளியாக உள்ளார் என்னும் உண்மையை அகச் சான்றுடனும், புறச் சான்றுடனும் வெளிப்படுத்தி தோற்றுவித்து  உள்ளார் என்பது உலகமே அறிந்த உண்மையாகும்.*


*அதற்காக வடலூர் மக்கள் 80 காணி நிலமும் இடமும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக வழங்கி உள்ளார்கள்.* 


*விழாக்குழு உறுப்பினர்கள்!*


*தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  வள்ளலார் 200  விழாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சமயம் மதத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள் அவர்களுக்கு வள்ளலாரின் அடிப்படை கொள்கைகள் என்னவென்று தெரியாமல். வள்ளலார் உருவப்படத்திற்கு சமயச் சின்னமான விபூதி வைக்க வேண்டும்  என்று குழப்பத்தை உண்டாக்கி வருவதாக கேள்விபட்ட சுத்த சன்மார்க்க அன்பர்கள் மிகவும் வேதனையும் வருத்தமும் கொண்டுள்ளார்கள்.* 


*வள்ளலார் படம்!*


*வள்ளலார் ஒளி தேகம் பெற்றவர், முத்தேக சித்தி பெற்றவர் , மரணத்தை வென்றவர்,  வள்ளலாருக்கு மனித உருவம் கிடையாது, வள்ளலாரை பலமுறை போட்டோ எடுத்தும் போட்டோவில் விழாதவர்.*


*பன்ருட்டி குயவனார் ஒருவர் மண்ணால் செய்த வள்ளலார் உருவத்தை  வள்ளலார் இடம் கொடுத்த போது, பொன்னால் ஆன உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கீழே போட்டு உடைத்தவர் வள்ளலார். இப்போதுள்ள வள்ளலார் படங்கள் யாவும் உண்மையானது அல்ல, கற்பனையால்  வரைந்த உருவ படங்கள் மற்றும் போட்டாக்கள். என்பதை மக்களும் தமிழக அரசும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*படமே வேண்டாம் என்ற வள்ளலாருக்கு படம் வைத்து வணங்குவது வழிபடுவது மிகவும் வேதனைக்குறியதாகும்.மேலும் வள்ளலார் படத்திற்கு சமயச்சின்னம்  அனிவது அதைவிட வேதனைக்குறியதாகும்*


*இவற்றை அறிந்து உணர்ந்து தயவு செய்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபாடு கொண்ட சன்மார்க்க அன்பர்களையும் .வடலூரில் உள்ள முக்கிய சன்மார்க்க அன்பர்களையும் விழாக்குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து, வள்ளலார் 200 விழாக்கள் சிறப்புடன்  நடைபெருவதற்கு ஆவண செய்ய வேணுமாய் ஆதரவு அளிக்க வேண்டும்* 


*ApJ அருள் என்கின்ற இளங்கோ !*


*எனது இனிய ஆன்மநேய சகோதரர் திரு ApJ அருள் என்கின்ற இளங்கோ அவர்கள் நீதி மன்றத்தின் வாயிலாக சென்று வள்ளலார் சாதி சமயம் மதம் கடந்தவர்,சாதி சமயம் மதம்  சாராதவர் என்பதை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றம் சென்று உறுதிப் படுத்தி அதற்குண்டான நீதி மன்றத்தின் தீர்ப்பில் வெற்றியும் கண்டுள்ளார்* 


*அதற்குண்டான ஆதாரத்தையும்.மேலும் வள்ளலாரின் கொள்கைகளையும் திருஅருட்பாவில் வள்ளலார் இறுதியாக ஆறாம் திருமுறையில் எழுதிய பாடல்களையும் உரைநடைப்பகுதிகளில் எழுதி வைத்துள்ள  சான்றுகளையும் நீதி மன்ற தீர்ப்புகளையும்.தமிழக அரசின் முதல்வர் அவர்களுக்கும் .முதன்மை அதிகாரிகளுக்கும்,அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார்.*


அதன் நகல் இத்துடன் இணைத்துள்ளோம்.


*மேலும் சன்மார்க்க அன்பர்களின் அனைத்து விதமான சுத்த சன்மார்க்க ஆதரவையும் அளித்து உதவி செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்., நமது வள்ளல்பெருமான் சொல்லியவாறு, சமயம் மதம் சாராத புதிய சன்மார்க்க உலகத்தை படைக்க ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் ஒத்துழைப்பைத் தருவோம் என உறுதி கொள்ளுமாறு மிகவும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உணர்வுடன் பங்கு கொள்வோம். இதன் நகல் எடுத்து தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம்*


*உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்க சுகநிலைப் பெறுக* 

*உத்தமன் ஆகுக ஓங்குக!*


*சாதி,சமயம்,மதம் அற்ற சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை என்பது வள்ளலாரின்அருள் வாக்காகும்.*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896.*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு