திங்கள், 26 செப்டம்பர், 2022

வள்ளலாரின் வைர வரிகள்!

 *வள்ளலாரின் வைர வரிகள் !*


கதை கற்பனை இல்லாதது சுத்த சன்மார்கம்! 


ஆன்மாவைத் தெரிந்து கொள்வதே ஆன்மீகம்! 


கடவுள் வேறு, ஆன்மா வேறு, உயிர்வேறு, உடல் வேறு !


கடவுள் ஆன்மா உயிர் உடல் ஒரே நேர் கோட்டில் இயங்குகிறது !


இயற்கை உண்மை, இயற்கை விளக்கம்,

இயற்கை இன்பம் இம் மூன்றும் இணைந்ததே அருட்பெருஞ்ஜோதி! 


பஞ்ச பூதங்கள் இல்லாத இடத்தில் இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! 


உலகம் தானாக சுற்றவில்லை,அருள் (சக்தி) ஆற்றலால்  சுற்றுகிறது!


மனிதன் தானாக இயங்கவில்லை ஆண்டவர் அருளால் இயங்குகிறான்!  


இறப்பை ஒழிப்பதே சன்மார்க்கம்!

சாகாதவனே சன்மார்க்கி !


சாகாத கல்வியே கல்வி !


மெய்ப்பொருள் என்பதே அருட்பெருஞ்ஜோதி! 


வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !


வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் உண்மையைத் தெரிவிக்காது !


ஆன்மாவை பிரிக்கப்படுவது எதுவாக இருந்தாலும் பின் தொடராதே !


உயிர்நேயத்தைவிட, மனிதநேயத்தை விட ஆன்மநேயம் முக்கியம் !


ஆன்ம நேயத்துடன் வாழ்பவர் பேரின்ப சித்தி பெற்று வாழ்வார்! 


ஆன்மநேயத்தை அறிந்தவரே கடவுள் நிலை அறிவர்!


தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்! 


உன்னைப்பார் உன்னுள் என்னைப் பார்!


உன்னைப்பார்த்தால் என்னைப் பார்ப்பீர்கள்!


தன்னை அறிய தந்திரத்தை அறிய வேண்டும்!


ஒழுக்கம் நிறைந்தவன் உயிர் காப்பாற்றப்படுவான்!


இறைவன் திருஅருளைப் பெற்றவர் நீடூழி வாழ்வர் !


பொருள் இருந்தால் மரணம் வரும்! அருள் இருந்தால் மரணம் வராது !


பஞ்சபூத உடம்பிற்கு மரணம் உண்டு, அருள் உடம்பிற்கு மரணம் இல்லை !


அருள் உடம்பை பஞ்ச பூதங்கள் தாக்காது ! 


மனித தேகத்திற்குள் இரண்டு தேகம் உண்டு ! பொருள்தேகம்! அருள்தேகம்!


அழியும் உடம்பை அழியாமல் மாற்றுவதே சாகாக்கல்வி !


வள்ளலார் துறவி அல்ல! முற்றும் அறிந்த அருளாளர்! 


மரணத்தை வென்ற மகாஞானி வள்ளலார்!


மகா மந்திரத்தை சொல்லி மகா உபதேசம் செய்தவர் வள்ளலார்!


கடவுள் மனித உருவத்தில் இல்லை,அருள்ஒளி உருவத்தில் உள்ளார் !


அருள் நிறைந்த ஜோதியே அருட்பெருஞ்ஜோதி !


தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி ! 

 

ஒழுக்கம் நிறைந்த உத்தமர் கண்களில் கடவுள் காட்சி தருவார்!


ஆண் பெண் அலி என்ற பேதம் பார்க்காதவரே அருளாளர்! 


உடம்பில் பேதம் உண்டு, உயிர் ஆன்மா கடவுள்  பேதம் இல்லை !


உலகப் பொதுநெறி சுத்த சன்மார்க்க தனிநெறி !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்! 


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது !


எக்காரியங்கள் செய்தாலும் அன்னதானம் செய்ய வேண்டும்!


 உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து அகத்தில் காண கடவுளைக் வேண்டும்! 


உலகப் பொதுநெறி சுத்த சன்மார்க்க தனிநெறி !


தொடரும்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு