திங்கள், 5 ஜூலை, 2021

பொய் உண்மையானது !

 *பொய் உண்மையானது!*


மேட்டுக்குப்பத்தில்  வள்ளலார் தங்கி இருக்கும் போது மக்கள் தங்கள் குறைகளையும் துன்பங்களையும் போக்கிக்கொள்ள கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர்.


ஒருநாள் கொங்கண தேசத்தில் இருந்து வந்த இருவர் தங்களுக்குண்டான *வெண் கருங்குஷ்டத்தால்* வருந்துவதை விண்ணப்பிக்க வள்ளலார் ஐந்துவேலை மருந்துகொடுக்க  பெற்றுக் குணமடைந்தனர்.


*பொய் உண்மையானது*


மக்கள் வள்ளலார் இடம் வந்து போவதை கவனித்த  இருபது வயதுள்ள  *துலுக்கப்பையன்*

(முஸ்லீம்பையன்) ஒருவன் *வள்ளலாரை சோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடம்பில் எண்ணெய் தடவிக்கொண்டு பஞ்சை அப்பி வேணுமென்றே வள்ளலாரிடம் சென்று *சிரங்கு* என்றுகூறி இவற்றை நீக்கவேண்டும் என்று வேண்டினான் *வள்ளலார் சிலநாள் பொறுத்துக்கொள் குணமாகும் என்றார்*.


வெளியில் வந்து பஞ்சை அகற்றினான் சிரங்கு இல்லாத  *உடம்பு முழுவதும் சிரங்காகியது.*


*விளையாட்டு*

*வினையாயிற்று**பின்பு வருந்தி சரணடைந்தான்*.


*வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் உள்ள கேணியில்* *மூழ்கச் சொன்னார்*.

*அவ்வாறே*

*மூழ்கியதும்* *குணமடைந்தான்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைத்த தேர்வில் (சோதனையில்) எல்லாவற்றிலும் வெற்றிபெற்றவர் நமது வள்ளல் பெருமான்*.


*வள்ளலார் பாடல்* ! 


வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் *வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்*


*தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்*.


அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!


*இரகசியமாக சொன்னது*


மேலும் ஒரு துலுக்க வைத்தியன் ஒருவன் வள்ளலாரிடம் வந்து என்னிடம் ஒரு ரகசியம் உள்ளது என்றான்.

*என்ன ரகசியம் என்று வள்ளலார் கேட்க*


*ரஸபஸ்பம் செய்ய  இன்ன மூலிகை உள்ளது* என்று  பிறர் கேட்காமல் ரகசியமாக வள்ளலார் காதில் மட்டும் கேட்கும்படி கூறினான். 


உடனே வள்ளலார் *ரஸபஸ்பம்* செய்வதற்கு *பல மூலிகைகள் உண்டு* என்று அனைவருக்கும்  கேட்குபடி உரத்தகுரலில் கூறினார். மேலும் மூலிகையின் பெயரையும் வெளிப்படையாக கூறினார். 


*தங்கம் செய்வதற்கும் ரஸபஸ்பம் செய்வதற்கும் ரஸம் கட்டுவதற்கும் பற்று அற்றவர்களுக்கே பலிக்கும்*


*வள்ளலார் பாடல்* !


*பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென*

*தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி*! (அகஙல் )


*நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே*

*வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே*! (அகவல்)


*துறையிது வழியிது துணிவிது நீசெயும்*

*முறையிது* *வெனவே மொழிந்தமெய்த் துணையே*! (அகவல்)


*நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற*

*அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே!* (அகவல்)


நாம் தெரிந்து கொள்ள வேண்டியுது யாதெனில் ?.


*உலகப்பற்றான மாயைப்பற்றை (பொருள்பற்றை) விட்டு* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்றினால் எல்லாம் கைகூடும்* .


எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 


*வள்ளல் இருக்க வாட்டம் ஏன்* *நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு