செவ்வாய், 29 ஜூன், 2021

வழிதப்பி போனவர்களுக்கு வழிகாட்டிய அற்புதம் !

 *வழி தப்பி  போனவர்களுக்கு  வழிகாட்டிய அற்புதம்* ! 

*வள்ளலாரைத் தேடி வடலூர்  வருபவர்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் அவற்றை நீக்கிக் கொண்டே இருந்தார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். இப்போதும் தீர்த்துக் கொண்டே இருப்பார் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கவேண்டும்* 

*வயதான கிழவிபோல் வந்தது*

பெங்களூரில் போஸ்டுமாஸ்டராக இருந்த *வேணுகோபால்பிள்ளை என்பவர்*. ஒருநாள் தாய் தம்பியர்களுடன் வடலூர் சென்று வள்ளலாரைச்  சந்தித்துவிட்டு பின் சிதம்பரம் போவதாக எண்ணி வண்டியில் சென்றுள்ளார்கள்.

பின்னலூருக்குச் செல்லும் போது வழிதவறிப் போய்விட்டார்கள்.

மாலைநேரம் ஒரு அணைக்கட்டு குறுக்கிட்டதால் பெரிதும் நிலைகலங்கினர்.

*அச்சமயம் ஒரு வயதான கிழவி தோன்றி* தன்னுடன் வரும்படி அழைத்துச்சென்று அணைக்கட்டை தாண்டி *இதோ அந்த கிராமம் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.*

*ஆச்சரியம் அந்த கிராமம் வடலூர் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தனர்*.

வள்ளலாரைச் சந்தித்தபோது வழியில் நடந்ததை சொன்னார்கள்.

*எல்லாம் ஆண்டவர்செயல் நல்லதே நடக்கும் என்றார்*. பின்பு அவர்களை  தங்கவைத்து காலையில் உணவு படைத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். 

*துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை*

*அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)

*சிறுவனைப் போல் வந்தது*

நாகூரிலிருந்து சுவாமிநாத செட்டியார் மற்றும் அன்பர்கள் சிலர் வடலூருக்கு வந்து தரிசித்துவிட்டு ஊருக்கு இரவில் திரும்பி உள்ளார்கள்.

அவர்கள் போகின்ற தடம் திருடர் பயம்உள்ள தடம் என்பதால்.

அதுசமயம் 16.பதினாறு வயதுடைய சிறுபிள்ளை போல் வண்டியின் பின்புறத்தே பாதுகாப்பாகச் சென்றுள்ளார். 

*வண்டியில் உள்ளோர் ஏன் பின் தொடர்ந்து வருகிறீர்கள் என கேட்க.தம்ஊர் மருதூர் எனச்சொல்லி மறைந்தனர்.*

வண்டிஉடன் பின்வந்தவர் மருதூரார் என்பவர் வேறுயாரும் இல்லை  *வள்ளலாரே* என்று அறிந்து.அதுமுதல் ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் வடலூர் வந்து ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அவ்வன்பர்கள் அன்னதானம் செய்து வருகின்றனர்.

*வள்ளலார் எந்த சித்து விளையாட்டும் செய்யவில்லை*.

*வள்ளலாருக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே செய்த அற்புதமாகும்.*

எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ் ஜோதி!

எங்குறு தீமையு மெனைத் தொடராவகைகங்குலும் பகலும் மெய்க் காவல்செய் துணையே!  ( அகவல்)  

*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே* ! (வள்ளலார் பாடல்) 

*வடலூர் செல்வோம் நல்லவரம் பெறுவோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு