சனி, 26 ஜூன், 2021

வள்ளலாரைத்தேடி சித்தர் வருகை !

 *வள்ளலாரைத் தேடி சித்தர் வருகை !* 

*கதையல்ல கற்பனைஅல்ல உண்மை*

கூடலூர் பங்குனி உத்தரத்தில் கிண்ணித்தேர் உற்சவம் நடப்பது வழக்கம். அதுசமயம் 

தேரடிக்கு அருகில் நாலாவது வீட்டில் வசிக்கும் அப்பாசாமிச் செட்டியார் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று *வள்ளல்பெருமான் அவர்கள் வீட்டின் உள்ளே அமர்ந்து இருந்தார்*

வள்ளலாரைப் பார்க்க அன்பர்கள் பலர் வெளியே திண்ணைமீது அமர்ந்து இருந்தனர்.

அதுசமயம் *வள்ளலார் போலவே சித்தர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்றார்*.

வெளியில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம்.வீட்டின் உள்ளே வள்ளலார் இருக்க *வள்ளலார் போலவே ஒருவர் உள்ளே போகிறார்*. யார் இவர்? என உரையாடிக் கொண்டு இருந்தனர். 

சிறிது நேரத்தில் வள்ளலார் உருவத்தில்  உள்ளே போனவர் வெளியே சென்றார். போனவர் யார்?  என்பதைத் தெரிந்து கொள்ள. புதுவை உறையூர் துரைசாமிப்பிள்ளைஅவர்கள் பின் தொடர்ந்தார்.

*அச்சித்தர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்தார்.*

பின் அன்பர்கள் உள்ளே சென்று பார்த்தனர். *வள்ளலார் அருகில் ஒருதட்டில் லட்டு வைத்து இருந்தது*.

சிறிது லட்டு எடுத்து வள்ளலார் வாயில் போட்டுக்கொண்டு அங்குள்ள அனைவருக்கும் லட்டு கொடுத்தார்.

*பிட்டு வாணிச்சி கொடுத்தது இப்படித்தான் இருந்த்தோ* என அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து. ருசித்துவிட்டு பதில்  சொல்லுங்கள் என்றார் வள்ளலார்.பதில் சொல்லத் தெரியாமல் மவுனமாக இருந்தார்கள்.

வந்தவர் காணோம் எனத் துரைசாமிபிள்ளை கூறினார். அதற்கு வள்ளலார் *அவர் இந்நேரம் காசியில் இருப்பார்* *என  சித்தர்களின் நிலைகளை அவர்களுக்கு  தெரிவித்தார்.* 

தெரிந்து கொள்வோம்!

*சித்தர்கள் மூன்று வகை*! 

*கர்மசித்தர்.*

*யோகசித்தர்.*

*ஞானசித்தர்* என மூன்று வகையான சித்தர்கள் உண்டு.

*சுத்ததேகம் உள்ளவர்கள் கர்மசித்தர்கள்*.

*பிரணவதேகம் உள்ளவர்கள் யோகசித்தர்கள்*.

*ஞானதேகம் உள்ளவர்கள் ஞானசித்தர் என்று சொல்லப்படும்*.

அருளின் அளவை வைத்து தேகங்கள் சித்துக்கள் சித்தர்கள் மாறுபடுவார்கள்.

கர்ம சித்தர்கள் தன்னைத்தேடிவரும் அன்பர்களுக்கு ஆசிசெய்தால்  பலிக்கும்.

*வள்ளலாரைப் பார்க்க சாசியில் இருந்து வந்த சித்தர் யோகசித்தர்*.

உருவம் மாற்றிக்

கொள்ளவும் எங்கு வேண்டுமானாலும் செல்லவும் யோக சித்தர்களுக்கு சித்துக்கள் கைகொடுக்கும்.

*ஞான சித்தர்களுக்கு இருந்த இடத்திலிருந்தே நினைத்த மாத்திரத்தில் யாவும் தடையில்லாமல் நடைபெறும் நிறைவேறும் ஆற்றல் பெற்றவராகும்*

*வள்ளலார் ஞான தேகம் பெற்ற ஞானசித்தர்*.

ஞான சித்தரைத்தேடி மற்ற எல்லா சித்தர்களும் வருவார்கள்.

*கர்மசித்தர்கள் யோகசித்தர்களுக்கும் மரணம்வரும்* .*மீண்டும் பிறப்பு உண்டு*.

*ஞான சித்தர்களுக்கு மரணம்இல்லை பிறப்பும்இல்லை*

*ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு

கோடியும்* விளங்கக் குலவுமெய்ப் பொருளே*! (அகவல்)

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்ஆவகை யெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

கருமசித்திகளின் கலைபல கோடியும்அரசுற வெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்ஆகவென் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி!

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி! (அகவல்)

*வள்ளலார் 647 கோடி சித்துக்கள் கைவரப்பெற்றவர்.தேவையில்லாமல் எந்த சித்துக்களையும் விரயம் செய்ய மாட்டார்.அதுதான் வள்ளலார்* 

*ஞானசித்தர்களால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்பு கொள்ள முடியும்*.

*வள்ளலார் பாடல்!*

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

நித்தவடிவும் நிறைந்தோங்கு -   *சித்தெனும்ஓர்*

*ஞான வடிவுமிங்கே*  நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.! 

நானே தவம்புரிந்தேன் *நம்பெருமான் நல்லருளால்*

நானே அருட்சித்தி நாடடைந்தேன் -  *நானே*

*அழியா வடிவம்* *அவைமூன்றும் பெற்றேன்*

இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.! 

*ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்பார் வள்ளலார்*

மேலே கண்ட பாடல்களின் மூலமாக தான்பெற்ற அனுபவத்தை வெளிப்படையாக பதிவு செய்கிறார்.

*நாம் எந்நிலையில் உள்ளோம்* என்பதை சிந்தித்து அதிதீவிர முயற்சியில் சென்றால்தான் பெறவேண்டியதை பெறமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு