வெள்ளி, 2 அக்டோபர், 2020

வாழ்விக்க வந்த வள்ளல் ! பாகம் 2.

புத்தம் புதிய சமுதாயத்தை உருவாக்க சங்கம்.சாலை.சபை என்ற மூன்று அமைப்புக்களையும் வடலூரில் தோற்றுவிக்கிறார்.

1872 ஆண்டு   *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும்

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்*

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்  

பெயர் சூட்டுகிறார்...

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக புதிய கொள்கைகளையும் தனிமனித ஒழுங்கங்களையும். இயற்கை உண்மை கடவுளின்  வழிப்பாட்டு முறைகளையும்.புதிய கல்விக் கொள்கையான சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல்.போன்ற உண்மை வழிகளைத் தெரிந்து. சாகாக்கலை. சாகாக்கல்வி கற்று பூரண அருள் பெற்று மனிதன் மரணத்தை வெல்ல வேண்டும். 

மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து கொண்டு பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு போதிக்கும் கல்விக்கூடம்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முக்கிய பணியாகும்.

*வள்ளலார் பாடல்* !


இறைவன் அருளைப்பெற சாதி சமயம் மதம் அல்லாத ஒரு நெறியே..  இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட. தனிப்பெரும்நெறி  உயர்ந்த திருநெறி உலகப்பொதுநெறியே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும்  நெறியாகும்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* !  

23-05-1867 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தோற்றுவிக்கிறார்..

கடவுள் வழிபாட்டை இரண்டாகப் பிரிக்கின்றார் வள்ளலார்.ஒன்று புறவழிபாடு.ஒன்று அகவழிபாடு என இரண்டு வழிபாடு மட்டுமே இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் வழியாகும்... 

சத்தியச் தருமச்சாலை தோற்றுவித்ததின் நோக்கம். உயிர்களுக்கு பயன் இல்லாத.பயன் அளிக்காத ஆலய வழிப்பாட்டையும் உருவ வழிப்பாட்டையும் தவிர்த்து மக்களுக்கு நன்மைதரும் பயன் அளிக்கும் வழிப்பாட்டை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக சத்திய தருமச்சாலை தோற்றுவிக்கப்பட்டதாகும். 

வள்ளல்பெருமான் கொள்கையில் தலையானது.ஜீவகாருண்யம்.ஜீவகாருண்யத்தை இருவகையால் வற்புறுத்துவார்.அவை அற்றார் அழிபசி தீர்த்தல்.கொலை தவிர்த்தல் புலால் மறுத்தல் என்பதாகும். அதாவது ஏழைகளின் பசியைத் தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் தெளிவாக புரிய வைக்கிறார்..

இறைவனால் படைத்த வாய்பேசாத உயிர்களை கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வது மன்னிக்க முடியாத பெரிய குற்றமாகும் என்பார்.

உருவ வழிப்பாட்டினால் மன நெகிழ்ச்சியும்.மனமகிழ்ச்சியும்.மன உருக்கமும் உண்டாகும் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும். 

ஜீவகாருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சியும் ஆன்மமகிழ்ச்சியும் ஆன்மஉருக்கமும் உண்டாகும். மேலும் அன்பும்.ஆன்ம அறிவும் அருள் விளக்கமும் தன்னைத்தானே விளங்கும்.இந்த உண்மை தெரியாமல் மக்களை பக்தி மார்க்கத்தில் அலைய விட்டுவிட்டார்கள்.ஆதலால் உருவ வழிப்பாட்டைவிட ஜீவகாருண்யமே சிறந்த புறவழிபாட்டு முறையாகும் என்ற புதிய நேர் வழியை மக்களுக்கு காட்டவே சத்திய தருமச்சாலை தோற்றுவிக்கிறார்..

சத்திய தருமச்சாலை வழியாகத்தான் இறைவனைத் தொடர்பு கொள்ள முடியும்.உண்மை அன்பு.உண்மைஇரக்கம். உண்மை தயவு .உண்மை ஒழுக்கம்.உண்மைக் கருணையுடன் வாழ்ந்தால் தான். இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையால் ஆட்கொள்வார் என்பது சத்தியம்.

வள்ளலார் பாடல் !    

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


காலம் எல்லாம் கடுமையான தியானம்.தவம்.யோகம் பக்தி செய்து கிடைக்கின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம். இம்மை இன்பவாழ்வு.மறுமை இம்மைவாழ்வு.பேரின்பவாழ்வு போன்ற அனைத்தையும் தருமச்சாலையில் ஒரே பகலில் தந்த தனிப்பெருங்கருணை தந்தையே என்று போற்றி புகழ்கின்றார்.  

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!  என்பார் வள்ளலார். ஆன்மீகத்தின் அனைத்துலக கருணை வள்ளலாக திகழ்ந்தவர் வள்ளலார். அன்பு.தயவு.கருணை இல்லாத  சாதி சமய மதக் கொள்கைகளுக்கு மூடுவிழா கொண்டு வந்தவர் வள்ளலார்.

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*  

கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவர் சாதி சமயம் மதங்களில் சொல்லும் கடவுள் அல்ல.அருள் நிறைந்த பேரொளியாக உள்ளவரே உண்மையான கடவுள். அவர் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக உள்ளார் என்பதை வெளிப்படையாக காட்டுவதற்காக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை* வடலூரில் தோற்றுவிக்கிறார். 

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை யான் பெற்றுக் கொண்டனன் என்றும்.

சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி! என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றார்.

ஒவ்வொரு மனிதனின் சிரநடு சிற்றம்பலமான ஆன்ம சிற்சபையில் விளங்கும் ஆன்ம ஒளியைப் புறத்தில் காட்டுவதற்காக அமைக்கப்பட்டதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.

சத்திய ஞானசபையில் ஒளியே கடவுள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவே இயற்கை விளக்கமான சபையில்  ஒளியை இடைவிடாது பிரகாசிக்கும் வகையில் தீப ஒளி வழிபாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

தொடரும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு