திங்கள், 5 அக்டோபர், 2020

05-10-1823.ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினம் !

 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

           *திருஅருட்பிரகாச*

         *வள்ளல்பெருமான்*

  *வருவிக்கவுற்ற பெருநாள்* 

                 *05-10-1823*

               *ஆன்மநேய*

     *ஒருமைப்பாட்டு தினம்*

               ஓர் சிறு குறிப்பு

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦

*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்* இது இறைவனுக்கு வள்ளல்பெருமான் விடுத்த விண்ணப்பம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~

*விண்ணப்பம் என்பது பணிவான வேண்டுகோள்.* எனவே *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* என்ற ஒரு குறிக்கோளை மட்டுமே செயலாக்க முனைந்த வள்ளல்பெருமான், இந்த அப்பட்டமான உண்மையை, எவரும் எழுதத் துணியாததை எழுதுகிறார். மனித உயிர்கள் எதனாலெல்லாம் துன்புறுகின்றன என்று பார்த்தால் பசி, பட்டினி, நோய், அறியாமை, பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றம், கொடுங்கோல் ஆட்சி, நாடுகட்கிடையிலான போர், கொலை, கொள்ளை, ஏமாற்றம், அற்ப சுகத்துக்கு அடிமையாதல் போன்றவை நமக்கு தெரிகின்ற காரணங்கள். ஆனால் வள்ளல்பெருமான் இவைகள் எதுவுமே முதல் காரணமல்ல. சமய, மத, மார்க்க, வர்ணாசிரமங்களை ஆணித்தரமாக்க முனைந்த உலகாசார சங்கற்ப விகற்பங்களே முக்கிய தடையென்கிறாரே!

 இதை எப்படி ஏற்பது?

~~~~~~~~~~~~~~~~~~~~~

*வருணம்* (வர்ணம்) என்பது -- அறவோர், அரசர், வணிகர், வேளாளர் என மனித இனம் நான்காக பிரிக்கப்பட்டது. (பிற இதற்கு இணையான பெயரில் பிரிக்கப்பட்டிருக்கிறது.) *ஆசிரமம்* என்பது -- குருமார்களின் இருப்பிடம், அவர்களின் வழிகாட்டுதலில் நடத்தப்படுவது.

*ஆசாரம்* என்பது -- அனுஷ்டானம், ஒழுக்கம், நெறி.

*சங்கற்பம்* என்பது -- மனோ நிச்சயம், நியமம், எண்ணம், மனோ கற்பனை. 

*விகற்பம்* என்பது -- வேற்றுமை, தவறு, ஐயம், வித்தியாசப்படுத்துதல்.

~~~~~~~~~~~~~~~~~~~~~

மனித இனம் நால்வகை வருணமாக உலகர்களால்தான் (பிரிக்கப்பட்டது) விகற்பமானது. இது நம்மை படைத்த இறைவனுக்கு ஏற்புடையதல்ல. எனவேதான் இன்றைய உலக சமாதானத்திற்கு ஊறு செய்ய இது காரணமாகிவிட்டது. இறைவன் படைப்பில் கூட உடலிலுள்ள கால்கள் ஓடியாடி உழைத்து மனித இனத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை தர உறுதுணை நிற்கிறது. *(இது வேளாண்மை)* வயிற்றுப் பகுதி உடலுக்கு தேவையான உணவை (வாய் வழியாக) கொள்முதல் செய்து ஜீரண உறுப்புகள் மூலம் உதரமாக்கி உடல் முழுவதுவற்கும் விநியோகம் செய்கிறது. *(இது வணிகம்)* மார்புப் பகுதியில் உள்ள இருதயம், நுரையீரல் இரத்தத்திலுள்ள உள்ள அழுக்கை நீக்கி (சமுதாயத்தில் குற்றம் நீக்குதல் போல) சுத்தப்படுத்தி உடலில் பரவச் செய்வதுடன், உடலை காப்பாற்ற கைகள், எதிரிகளுடன் போரிட அக்காலத்தில் வில்லேந்தவும், இக்காலத்தில் துப்பாக்கி  தொங்கவிடவும் தோள்களை கொண்டுள்ளது. *(அரசர்)* கழுத்திற்கு மேலுள்ள பகுதியால் இங்கே உணவு இருக்கிறது அங்கே எதிரி வருகிறான் போன்றவற்றை காண கண்கள், பிறரை அழைக்க, கல்வி கற்க,  உரையாட, அறிவை வளர்க்க வாயும், செவியும் உறுதுணையாய் நிற்கும். நன்மை, தீமையறிய, அனுபவத்தை சேமிக்க மூளை உண்டு. *(அறவோர்)*. 

~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த நான்கையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றையொன்று தொடாமல் விகற்பமானால் உடம்பில் உயிர் தரிக்காது. பறந்துவிடும். காலுக்கு பாய்ந்த உதரம் (இரத்தம்) அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தலைக்கும் பாய்கிறதே! இதில் எப்படி பேதம் இல்லையோ அதே நிலையை நாம் இதுவரை வருணாசிரமத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. எல்லா மனிதர்களிடமும் அவர்களை வழிநடத்தும் குருமார்கள் இந்த சாதி, மத உட்பிரிவுகளை காட்டியே தத்தம் ஆசிரமங்களை தக்கவைத்துக் கொள்கின்றனர். எல்லா மகான்களும் *அன்பாயிரு* என்பதை அடிப்படையாகக் கொண்டே மதங்களை உருவாக்கினர். ஆனால் வழிநடத்துபவர்கள் அதை விகர்பமாக்கிவிட்டனர். 

~~~~~~~~~~~~~~~~~~~~~

உலகத்தையும் அதிலுள்ள சுகங்களையும் உன் சந்ததி மற்றும் சுற்றத்தவர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் கூட அதை இப்போது அனுபவிக்கிறார்கள். அவர்களை ஓரங்கட்டு,  ஒதுக்கிடு அல்லது ஒழித்திடு என்பதுதான் இன்றைய வரை மனிதனுக்கு வழிகாட்டும் மந்திரமாகிருக்கிறது. சமயவாத போரில் நாலாயிரம் சமணர்கள் கழு ஏற்றப்பட்டனர். பசி, பட்டினி, இயற்கை சீற்றத்தால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கையை விட சாதி, மத வேறுபாடுகளால் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆறு இலட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்றதை சரித்திரம் சொல்கிறது. நான்கு இலட்சத்திற்கும் மேலான மஞ்சள் இனத்தவரை ஹிரோஷிமா, நாகசாகியில் அடுத்தடுத்த நாளில் அணுகுண்டை போட்டு அழித்தது வெள்ளையினத்தினர். பலநாடுகளில் மெத்தப் படித்தவர்கள் ஆட்சி செய்தாலும் இந்த நிலை மாறவேயில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இதற்கு ஒரு முடிவு காண 24-10-1945 ல் ஐக்கிய நாடுகள் சபை (United Nations Organisation-UNO) தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமை பொறுப்பில் வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிறத்தவர் இருந்தனர். இருக்கின்றனர். ஆனால் இன்றைய தேதியில் கூட 

*இராக்-இரான் போர்*

*இஸ்ரேல் - பாலஸ்தீன போர்*

*வடகொரியா - தென்கொரியா போர்*

*சிரியா - அமெரிக்க போர்*, பல நாடுகளில் உள்நாட்டில் வாழும் வேறு வேறு சாதி இனத்தவரிடையே போர்.  இவைகளெல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை.  ஐக்கிய நாடு சபையால் இரும்புக் கரம் கொண்டு அடக்கவோ, பிற நாடுகளின் மூலம் நெருக்கடியை கொடுத்தோ போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. அதன் அதிகாரம் அறுதியிடப்பட்டுள்ளது. எனவே வேறு விதமாக UNO, UNESCO, WHO போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து, மனித இனத்திற்கு தொண்டு செய்ய அதை மகிழ்விக்க முனைந்தது.

உதாரணமாக: புகையிலை மறுப்பு தினம், தற்கொலை தடுப்பு தினம் போன்றவற்றை ஆண்டிலுள்ள 365 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிரகடனம் செய்கிறது. Valentine Day, Father's Day,  Senior Citizens Day போன்றவைகள் எதை பெரிதாக சாதிக்க போகிறது? ஏற்கெனவே தனிமனிதர்கள் இதை கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

*ஒட்டு மொத்த மனித இனம் (எல்லா உயிர்களும்) இன்புற்று வாழ ஒரே வழி மனிதரிடையே ஆன்மநேயத்தை விதைத்து வளர்ப்பதுதான்.* எல்லாம் அதில் அடங்கிவிடும். உதாரணமாக புகை பிடிப்பவர்களிடம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அறிவுறுத்தப்படும் போது அதில் புகை பிடிக்கும் அந்த உயிரும் சேர்ந்து தான். அப்போது அவரும், அவரின் உயிரை நேசித்து அதை தன் உடலில் இருந்து பறந்து விடாமல் நிறுத்தி உடலுடன் நீண்ட காலம் உறவாட வைக்க முடியும். பிறகு பிற ஆன்மாக்களையும் நேசிக்கும் எண்ணம் உருவாகி அதுவும் என்னை போன்றது தானே என்ற எண்ணத்தை விதைத்து வளர்க்க *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினம்*  *UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY* என்பதை பிரகடனம் செய்ய வேண்டும். அதை எந்த நாளில் செய்யலாம்? 

~~~~~~~~~~~~~~~~~~~~~

திருஅருட்பிரகாச வள்ளாரெனும் இராமலிங்க பெருமானார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தடையாயிருப்பது சாதி, மத, சமயத்தினால் ஏற்பட்ட விகற்பத்தால்தான் -- இது எங்கள் மனதில் பற்றக்கூடாது என்ற ஒன்றை மட்டும் விண்ணப்பத்து கேட்டாரே (உணவு, உடை, இறந்த பிறகு சொர்க்கம் கொடு என்று கேட்கவில்லையே) அவரின் பிறந்த நாளான இந்நிலவுலகிற்கு வருவிக்கவுற்ற நன்னாளான *அக்டோபர் 5-ம் நாள்*. அந்த நாளே ஆன்மநேய ஒருமைப்பாட்டு நாள். அதில் இன்னொரு விளக்கத்தையும் உலகர் பெறுவர். உலகில் இதுவரை வாழ்ந்த எல்லோருக்கும் பிறந்த நாள்,  மறைந்த நாள் என இரண்டு நாள் வரும். ஆனால் வள்ளல்பெருமானுக்கு பிறந்த நாள் மட்டுமே வரும். *இன்னொரு நாள் எப்போதும் வராது* .இதை அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் *கலெக்டர் G.H.கார்ஸ்ட்டின்* தெளிவாக கெசட்டில் பதிவு செய்திருக்கிறார்.  

*Saint Ramalingam Disappeared from this small room of Mettukuppam and proved His claim of Deathiessness.* 

எனவே எதிர்வரும் அக்டோபர் ஐந்து முதல் ஆண்டுதோறும் இது *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* அழைக்கப்பட வேண்டும். UNO-வும் இதற்கு ஆவண செய்யட்டும். 

Let all Humans hall *UNIVERSAL BROTHERHOOD AND COMPASSION DAY*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஆக்கம் 

*K.N.உமாபதி*

K.K.நகர், சென்னை

*"தீப நெறி"* ஆசிரியர்

தீபம் அறக் கட்டளை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு