வெள்ளி, 23 அக்டோபர், 2020

இரவு பகல் அற்ற இடம் !

 *இரவும் பகலும் இல்லாத இடம்* ! 

*இன்று  மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் வெளிப்புறத்தில். வள்ளல்பெருமான் மரணத்தை வென்று சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டநாள்*

*ஒவ்வொரு உலகமும் மண்.நீர்.அக்கினி. காற்று.ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும். வாலணு.திரவவணு. குருஅணு.லகுஅணு.அணு.பரமாணு.விபுஅணு.போன்ற ஏழு விதமான ஆணுக்களும்  நிறைந்ததாகும்.*

*மாயையின் ஆதிக்கம் !* 

இவ்வுலகங்களை கடவுள் படைத்தாலும் பஞ்சபூதஉலகத்தின் நிர்வாகப் பொறுப்பை.

*ஆளுமை பொருப்பை மாயை மாமாயை.பெருமாயை என்னும் மூன்று மாயா சக்திகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. உலகில் தோன்றிய ஏழுவிதமான உயிர் இனங்களில் மனித இனம் மிகவும் உயர்ந்தது. *தன்னைப் படைத்த இறைவனை அறிந்து அருளைப்பெற்று  இறைவனுடன் கலந்து இன்பமுடன் வாழ்வதற்கு மனித இனமே தகுதி உள்ளப்பிறவியாகும்*.

கடவுளைக் காண்பதாக இருந்தாலும் தொடர்பு கொள்வதாக இருந்தாலும்.மிகவும் சக்தி வாய்ந்த அருள் பெறுவதாக இருந்தாலும் *மாயையின் அனுமதி இல்லாமல் எதுவும் பெறமுடியாது. மாயையை எல்லா ஞானிகளும் தவறான கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்கள்.ஆன்மாவிற்கு *மாயை தாய் போன்றது.*

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தந்தை போன்றவர்*. 

ஆன்மா இவ்வுலத்திற்கு வந்ததும் வீடு இல்லாமல் தனித்து செயல்பட முடியாது தனித்து வாழமுடியாது.ஆன்மாவிற்கு வீடு என்பதுதான் பஞ்சபூதகங்களின் அணுக்கூட்ட சேர்க்கையாகும்.

அந்த அணுக்களால் பின்னப்பட்டதே இம்மனித தேகமாகும். அவ் அணுக்களால் கர்மதேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் மூன்று விதமான மாற்றங்கள் பெறவேண்டும்.

ஆன்மா வந்ததும் முதன் முதலில் கர்மதேகம்( கன்மதேகம்) என்னும் தேகத்தை அசுத்த பூதகாரிய சாதாரண அணுக்களைக் கொண்டு *மாயையால்* கட்டிக்கொடுக்கப்பட்ட தேகமே ஊன் உடம்பு என்னும் மனித தேகமாகும்.இவை கற்பனையால் சொல்லவில்லை.

எல்லாம் வள்ளல்பெருமான் ஞான அறிவால் சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல் !

பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான் பெற்ற உடம்பு இதுசாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்

அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின் றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல்அமர்க

தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந் திலையோ *சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே*.! 

என்னும் பாடலின் வாயிலாக (வள்ளல்பெருமான் தெளிவாகப் பதிவு செய்கிறார். எனவேதான் ஆன்மாவைப் பற்றிக் கொண்டுள்ளது. 

*ஆணவம்* *மாயை* *கன்மம்*  என்று சொல்லுவதாகும். ஏழுவிதமான அணுக்களால் பின்னப்பட்ட இவ்வுடம்பில்.கோடி சூரிய பிரகாசம் உள்ள ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டுள்ளது.அவ் ஆன்மாவை ஏழுவிதமான அணுக்களின் வண்ணங்களான மாயா திரைகளால் ஆன்மாவின் உண்மைத்தன்மையை வெளியே காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டுள்ளன.  வள்ளலார்  மாயா திரைகளைப்பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்துள்ளார். 

*அகவல் !* 

1.கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

2. பேருறு நீலப் பெருந்திரை யதனால் ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

3.பச்சைத் திரையாற் பரவெளி யதனைஅச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

4. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

5.பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

6. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

7. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி! 

மேலே கண்ட ஏழு மாயா திரைகளால் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை ஒவ்வொன்றாக அகற்றும் அதாவது நீக்கும் வழியைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நம் உண்மைத் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். வள்ளலார் ஒருவரே திரை மறைப்பெல்லாம் தீர்த்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரில் தொடர்பு கொண்டு பூரண அருள் பெற்று மரணத்தை வென்று கடவுள் மயமானவராகும்.

*அருளினால் மட்டுமே திரைகளை அகற்றமுடியும்* .

அருளை வழங்கும் ஒரே தெய்வம் தான் அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை ! என்னும் தெய்வமாகும். அந்த தெய்வம் மனித தேகத்தில் எவ்வாறு எங்கே இயங்குகிறது என்பதை எளிய முறையில் தெரிவிக்கின்றார்.

*வள்ளலார் பாடல்* ! 

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் *சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*

எந்த தொடர்பும் இல்லாமல் அம்பலத்தில் ஆடுகின்ற தெய்வம்தான் மனித தேகத்தின் சிரநடு சிற்றம்பலச் சிற்சபையில் ஆன்ம ஒளியாக விளங்கி கொண்டுள்ளன என்பதை எளிய முறையில்  தமிழில் பதிவு செய்துள்ளார்.

*இரவும் பகலும் இல்லாத இடம்* !

*இரவும் பகலும் உள்ள பஞ்ச பூத உலகில் வாழ்ந்து வந்த ஆன்மா. இரவு பகல் இல்லாத இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டும் என்பதே வள்ளலார் கண்டு பிடித்த உளவாகும். வேண்டுகோளாகும்*

*இராப்பகல் இல்லாவிடத்தே வெண்ணிலாவே இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.!*

*இரவொடு பகல் இலா இயல்பொது நடமிடுபரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே*! என்றும்.

இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணியே

அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் லமுதம் ஊட்டி யே.!

இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவனே எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவனே

கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவனே.!

எனக்கும் உனக்கும்! இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ என்று தனக்கு கிடைத்த அனுபவத்தை சொல்கிறார்.! 

*இரவு பகல் இல்லாத இடம் இறைவன் இருக்கும் இடம்.*

ஆன்மா வாழும் இந்த உலகமோ இரவு பகல்.நினைப்பு மறைப்பு.இறப்பு பிறப்பு.உண்ணுவது உறங்குவது விழிப்பது.போன்ற மாற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கும் பஞ்சபூத உலகமாகும். இரவு பகல் அற்ற இடமான அருட்பெரு வெளிக்குச் செல்ல உளவு (வழி) தெரியாமல் ஆன்மா பிறந்து பிறந்து.இறந்து இறந்து கொண்டே உள்ளது.

இரவு பகல் அற்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால்.இவ்வுலக வாழ்க்கையில் எவ்விதப் பற்றும் இல்லாமல். பஞ்ச பூதங்களால் உண்டான உணவு வகைகளை உண்ணாமல் உறங்காமல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது அளவில்லா பற்று வைக்க வேண்டும். *ஆன்மா பற்று அற்று வாழ்ந்தால் பற்று அற்ற இறைவனை தொடர்பு கொள்ள முடியும்.*

*வள்ளலார் பாடல்*!

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ

சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை

எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்

*பற்றிய பற்றனைத் தினையும் பற்றற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ எற்றும் இறவீரே.*!

இந்த உலகப்பற்றை விட்டு அம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பற்றை பற்ற வேண்டும்.

அப்பற்றுதான் மிகவும் உயர்ந்த பற்றாகும். நாம் அப்பற்றை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து   அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரைக் கொண்டு  இடைவிடாது தொடர்ந்து உண்மையாக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேசிக்க வேண்டும் அதாவது காதலிக்க வேண்டும்.அப்படி இடைவிடாது தொடர்பு  கொள்ளும் தருணம். *உடம்பைக் கொடுத்த  மாயை என்னும் தாயானவள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளும் தடையை நீக்கிவிடுவார்.*

*பஞ்சபூத அணுக்களால்  ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் தடை நீங்கி வாழும் வாழ்க்கைக்கு ஆன்ம இன்ப வாழ்க்கை என்று பெயர்.*

*அதன்பின் என்றும் அழியாத எதனாலும் அழிக்க முடியாத உயர்ந்த அருள் அமுதமான நன்நிதியை வாரி வழங்குவார்*.

அந்த நன்நிதியான அருள் அமுதைக்கொண்டு.முதலில் அசுத்தபூத காரிய அணுக்களால் பின்னப்பட்ட உடம்பை சுத்த பூதகாரிய அணுக்களாக மாற்ற வேண்டும். அவற்றிற்கு ஆன்ம இன்பலாபம் என்று சொல்லப்படும்.

மேலும் இம்மை இன்பவாழ்வு. இம்மை இன்ப லாபம் என்றும் *சுத்த தேகம் சுவர்ணதேகம்.காரியரூபம் என்றும் பெயராகும்*.  நரை. திரை. பிணி. மூப்பு. மலம். ஜலம். வியர்வை.ஆகாரம்.நித்திரை.தாகம்.சாயை .பயம் முதலியன இல்லாமை.ரோம வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமல் இருக்கும். கர்ம சித்தி.கல்பதேகி அபரமார்க்கி உடையது. *அந்த சுத்த தேக உடம்பு கையில் பிடிபடும் அழிக்க முடியாது*.

அடுத்த மாற்றம். *பிரணவ தேக மாற்றம்.மறுமை இன்பலாபம் மறுமைஇன்ப வாழ்வு* *காரியகாரண ரூபம்* என்றும் பெயராகும்.பரம்பர தேகம்.பரம்பர  பிராண கல்பதேகி. உணர்ச்சி.பரம்பர அறிவு.பரம்பர தத்துவம்.சர்வ சித்தி பர அபர மார்க்கம் உடையது. *பொன் தேகம் உரைபடாதது. தோற்றம் கையில் பிடிபடாது*.எக்கருவியாலும் அழிக்க முடியாது.

*அடுத்த மாற்றம். ஞானதேகம். காரணரூபம் எங்கும் பூரண வியாபகம்* பராபர அறிவு.பராபர தத்துவம்.அளவு கடந்த மாற்று. சப்த மயதரிசனம்.உருவம் தோற்றியும் தோற்றாமலும் இருக்கும்.

சர்வ மகாசக்தி.சர்வ சுதந்தரம்.காலாதீதன் என்றும் பெயர். அவ் உடம்பு நினைத்த மாத்திரத்தில் எல்லா உலகமும் உலாவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலக்கும் தகுதி உடையதாகும்.

சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியும் பெற்றவர்கள் மட்டுமே இரவு பகல் அற்ற இடமான அருட்பெரு வெளிக்குள் சென்று அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து   பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணம் அடையாமல் வாழ்வதே மனித தேகம் கிடைத்த ஆன்ம லாபமாகும்.

*இரவு பகல் அற்ற ஆன்மாதேகம் மட்டுமே இரவு பகல் அற்ற அருட்பெருஞ்ஜோதி யுடன் கலக்க முடியும்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு