புதன், 14 அக்டோபர், 2020

வடலூர் சங்கம் சாலை சபை !

 *வடலூர் சங்கம் சாலை சபை*! 


இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்பு கொள்வதற்கும் அருள் பெறுவதற்கும் சங்கம். சாலை.சபை என்ற மூன்று அமைப்புகளை வள்ளல்பெருமான் வடலூரில் அமைத்துள்ளார். 1865 ஆம் ஆண்டு சங்கம் ஆரம்பிக்கிறார்.1867 ஆம் ஆண்டு தருமச்சாலையை தோற்றுவித்து திறப்புவிழா செய்கிறார் வள்ளலார்.


1872 ஆம் ஆண்டு சபை திறப்புவிழா அன்று. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை* என்றும். சங்கம் சாலை சபைக்கு நிலையான புதியதோர் பெயர் மாற்றம் செய்து புதிய அறிவிப்பை வெளியிடுகிறார். 


*சங்கம் சாலை சபை மூன்றும் இறைவன் அறிவித்த வண்ணம் வள்ளல்பெருமானே அருள் அறிவாலே அமைத்துள்ளார்*.


உலகின் புதியதோர் சமுதாயத்தை உருவாக்க. சாதி சமயம் மதம் அற்ற பொதுவான ஆன்மீகப் புரட்சிக் கொள்கைகளை உலக மக்களுக்காக  படைத்திருக்கின்றார்வள்ளலார். அவர் கொள்கையின் முக்கிய குறிக்கோள். *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.*


காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த மனிதன்.எல்லா உயிர்களும் ஒன்று என்று தெரியாமல் உணவிற்காக  உயிர்களைக் கொன்று தின்னும் பழக்கத்துடன் வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.


மனிதனுக்கு கொஞ்சம் அறிவு வளர்ச்சி உண்டான காலக்கட்டங்களில்.நாகரீகம் என்ற பெயரில் பலநாடுகளில் பல விதமான நாகரீகங்களைத் தோற்றி வைத்தார்கள். அவற்றைப் பின்பற்ற  பல தத்துவ தெய்வங்களை படைத்தார்கள். தெய்வங்கள் பெயரால்  வேதங்கள். ஆகமங்கள். புராணங்கள்.இதிகாசங்கள். சாத்திரங்கள் போன்றவற்றின் மூலமாக  கொள்கைகளை உருவாக்கினார்கள்.


கொள்கைகளின் வாயிலாக பல மதங்கள் தோன்றின.

மதங்களின் பெயரால் சமயங்கள் தோன்றின.தொழில்களின் பெயரால் சாதிகள் தோன்றின.


சாதி சமயம் மதம் என்ற பிரிவினையால் மனித நேயம் இல்லாமல்.

ஜீவநேயம் இல்லாமல்

ஆன்மநேயம் தெரியாமல்.உண்மையான மெய்ப்பொருளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல்

சுயநலத்தால்.

போட்டியால் பொறாமையால்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள்  போரிட்டு அழிந்து கொண்டு இருந்தார்கள்.

இதற்கு எல்லாம் காரண காரியமாக இருந்தது இருக்கின்றது பலப்பல ஆன்மீக கடவுள் கொள்கைகளாகும். 


*மனிதகுலம்*!


எல்லா பிறப்புகளிலும் மிகவும் உயர்ந்த பிறப்பும் உயர்ந்த அறிவும் பெற்ற மனிதன்.

*தன்பெருமையைத் தான் அறிந்து கொள்ள முடியாமலும் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியாமலும்*  அழிந்து கொண்டே உள்ளார்கள்.


இறைவனால் படைத்த மனித குலத்தையும்.

உயிர்குலத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற தனிப்பெருங்கருணை உள்ளத்தோடு இறைவனால் வருவிக்க உற்றவர்  தான் வள்ளலார்.


உயர்ந்த அறிவு பெற்றுக் கொண்ட மனிதன் இறந்து இறந்து பிறந்து பிறந்து கொண்டே இருப்பதற்காக அல்ல. உண்மையான இறைவனைத் தொடர்பு கொண்டு என்று அழியாமல் வாழ்வதற்கு. அருள் பூரணம் பெற்று மரணத்தை வென்று *இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவே மனிதகுலத்தை இறைவன் படைத்துள்ளார்* என்னும் உண்மையை *அணு அறிவியல் அருள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் வள்ளலார்*.


மனிதகுலத்தை காப்பாற்றுவதற்காகவே சாதி சமயம் மதம் அல்லாத சங்கம். சாலை. சபையை பொதுமை உணர்வோடு வடலூரில்  அமைத்துள்ளார்.


*இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை!*


எந்த நோக்கத்திற்காக.

சாதி சமயம் மதக்கொள்கைகள்  வேண்டாம் என்று வள்ளலார் சொன்னாரோ அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல். *இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை யிடம்* வடலூர் சங்கம்.சாலை.சபையை சிக்க வைத்து விட்டார்கள்.அதனால் வடலூர் சமய மதக் கோயில்கள் போல் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.


சங்கம் சாலை சபை பல ஆண்டுகளாக *வள்ளலார் தெய்வ நிலையம்* என்ற பெயரில் 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உள்ளே புகுந்து வள்ளலார் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சமய மதக் கொள்கை போல் நடைபெற்று வருகிறது. 


வள்ளலாரின்  சுத்த சன்மார்க்க புதிய புரட்சி கொள்கைகளை வள்ளலார் உடன் இருந்த அறிவாளிகளும் பின்பற்றவில்லை. மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லவும் ஆள்இல்லை. 


வள்ளலார் சொல்லிய இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கமும். உண்மையான அறிவில் சிறந்தஒழுக்கம்   ஆர்வம் உள்ளவர்கள்  இல்லாமலும இருந்துள்ளார்கள்.


 வள்ளலார் கொள்கை புரியாமலும்.புரிந்து கொண்டாலும் கடைபிடிக்க முடியாமலும்.

கண்டும் காணாதது போல் இருந்துகொண்டு வந்துள்ளார்கள். தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாமலும்.  *சமய மத வழிபாடுகள் போல் வடலூர் சங்கம் சாலை சபை நடைபெற்றுக் கொண்டு வருகிறது* *. 


*சுத்த சன்மார்க்கிகள்* ! 


வடலூர் சங்கம் சாலை.சபை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை  வள்ளலார் பாடல்கள் மூலமும்.உரைநடைப்பகுதி வாயிலாகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார். 


பெருமான் சொல்லிய வண்ணம் சாதி சமய மத ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல்.அவற்றை சார்ந்து செயல்படாமல் சுத்த சன்மார்க்க கொள்கைப்படி தூய்மையாக நடைபெற வேண்டும்.அவ்வாறு செயல்பட வேண்டும்  என்ற ஆர்வமும் அக்கறையும்  துடிப்பும் மிகுந்த அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்க அன்பர்கள். சன்மார்க்க சாதுக்கள் போன்றவர்கள் வந்து கொண்டே உள்ளார்கள்.

சன்மார்க்க கொள்கைகளை ஓர்அளவு தெளிவாக புரிந்து கொண்டும் செயல்பட்ட்டுக்கொண்டும் வருகிறார்கள். .


*அறநிலையத்துறை யிடம் இருந்து சங்கம் சாலை சபையை மீட்கவேண்டும்.சுத்த சன்மார்க்கிகளே நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  மேலோங்கி வளர்ந்து வருகிறது.*


இந்து சமய அறநிலையத்துறையை எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்ற குழப்பம் சன்மார்க்கிகளிடம். நிலவி வருகிறது.


சன்மார்க்கிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும். பல கருத்து வேறுபாடும் உண்டு என்ற எண்ணமும் வலுத்து வருகிறது. காரணம்.சுத்த சன்மார்க்கத்தில் ஒத்த கருத்து உடையவர்கள் ஒற்றுமையாய் இணைந்தால் எதையும் நிறைவேற்றுவது எளிதாகிவிடும்.


சன்மார்க்கத்தில் சாதி.சமயம் மதம் சார்ந்த சன்மார்க்கிகள் தான் எல்லா ஊர்களிலும் சங்கம் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

ஜீவகாருண்யம் செய்து கொண்டு வருகிறார்கள்.

வழிப்பாட்டு விஷயத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்.


வள்ளலார் சொல்லியவாறு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று  பெயர் வைக்காமல் அவரவர்கள் விருப்பபடி சங்கத்திற்கு பெயர்வைத்து நடத்திவருகிறார்கள்.


இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உறுப்பினர் ஆக்குவதும். வடலூரைத் தூய்மைபடுத்துவதும் மிகவும் கடினம்.


வள்ளலார் கொள்கையின் சுத்த சன்மார்க்கத்தின்  முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து அறிந்து தெரிந்து முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் ஒத்த கருத்துடன்  ஒன்று சேர்ந்தால் மட்டுமே  வெற்றி நிச்சயம்.


இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உயர் அதிகாரிகளிடமும் மத்திய மாநில அமைச்சர்களிடமும் வள்ளலார் கொள்கையின்  தனித்துவத்தின் உண்மையை எழுத்து மூலமாகவும்.

நேரிலும்  பக்குவமான முறையில்  எடுத்து சொல்லி வடலூரை தூய்மை படுத்தலாம்.அதில் சிரமம் ஒன்றும் இல்லை.


*சண்டை தகராறு மறியல் போராட்டம் எதுவும் தேவை இல்லை*. 


வடலூர் சங்கம் சாலை.சபை ஞானத்தை போதிப்பதாகும் சாதாரண மனித்தரத்தில் உள்ளவர்களால் வெற்றி கிட்டாது.அருள் அறிவு தரத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் நிச்சயம் வெற்றி கிட்டும்.


உலகியல் பற்று அற்ற தூய்மை உடையவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன்  நல்லதே நலமுடன்  நடக்கும்.


காலத்தின் கட்டாயம் காலம் கனிந்து வருகிறது நல்லோர் நினைத்த நலம் பெறுகும் எல்லோரும் இசைந்து வாழ்ந்து இன்பம் பெருகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

1 கருத்துகள்:

5 செப்டம்பர், 2023 அன்று 7:04 AM க்கு, Blogger World News கூறியது…

vallalar songs

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு