திங்கள், 28 செப்டம்பர், 2020

ஒரு ஒளி உதயமானது ! பாகம் 2

 ஓர் ஒளி உதயமானது ! பாகம் 2.

*சென்னையில் 35 ஆண்டுகள்*

சென்னையில் வாழ்ந்த காலத்தில் பல சமய தெய்வங்களை வணங்கியும் போற்றியும் பல ஆயிரம் திருஅருட்பா பாடல்களை இயற்றியுள்ளார்.

அவர் அறிவுத் திறமையும் அருள் வல்லபத்தையும் உணர்ந்த.தமிழ் பண்டிதர்கள் திரு. வேலாயும்.திரு. இறுக்கம்இரத்தினம்.திரு.வீராசாமி. திரு.பொன்னேரி சுந்தரம்.திரு.காயாறு ஞானசுந்தர்ர்.திரு.கிரியாயோக சாதகர் திரு.பண்டார ஆறுமுகம் போன்ற  நிறைய தமிழ் அறிஞர் பெருமக்கள் இராமலிங்கத்தின் சீடர்களாய் அவருடன் சென்னையில் இருந்து தொடர்ந்து வந்துள்ளார்கள்.

இவர்களால் இராமலிங்கம் என்ற பெயரை மாற்றி திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பட்டப்பெயரை வழங்கினார்கள். ஆனாலும் சித்திபெருகின்ற வரை அவர் அந்தப்பெயரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.அது ஆராவாரத்திற்கு அடுத்தபெயர் என்றும்.அப்பெயர் அருட்பெருஞ்ஜோதிஆண்டவருக்கே சொந்தமானது பொருத்தமானது என்பதைக் கருத்தில் கொண்டு. சிதம்பரம் இராமலிங்கம் என்றே கைஏழுத்து போடுவார். 

இருந்தாலும் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிவாகிவிட்டது.

பிள்ளைப்பருவத்திலேயே மூவாசைகளையும் முற்றும் துறந்த வள்ளல்பெருமான் இல்லறவாழ்வை விரும்பவில்லை.

தாய் அண்ணார் அண்ணி.அக்காள்கள் உற்றார் உறவினர் வற்புறுத்தலாலும்.திருமணத்திற்கு இசைய வேண்டியவராய் ஆனார்.தனது தமக்கை உண்ணாமலை அம்மையாரின் மகள் தனம்மாள் என்பவரை மணம் புரியவைத்தனர். பெருமான் தொட்டு தாலி கட்டினார்களே அன்றி இல்லறவாழ்வில்  ஈடுபடவில்லை.ஒருத்தியைக் கை தொட்ச்சார்ந்தேன்..தொட்டனன் அன்றி கலப்பிலேன் என்பது வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ள திருவாக்காகும். மனைவி தனம்மாள் அனுமதியோடு இல்லறவாழ்வை விட்டு இறைஉணர்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

சென்னையில் வாழ்கின்றபோது.

உரைநடை நூல்கள் அரிதாகத் தோன்ற தொடங்கிய காலத்தில். வள்ளலார் எழுதிய உரைநடை நூல்கள் *சின்மய தீபிகை என்றநூல் 1857 ஆம் ஆண்டு வெளிவந்த்து. *மனுமுறைகண்டவாசகம்*  என்ற நூல் 1854 ஆம் ஆண்டு வெளியாயிற்று. ஜீவகாருண்ய ஒழுக்கம்.1879 ஆம் ஆண்டு வெளியாயிற்று.பின்பு திருஅருட்பா ஐந்து திருமுறைகளும் வெளியாயிற்று.

சமய தெய்வங்களைப்பற்றி பாடி எழுதிய பாடல்களில் உள்ள தெய்வங்கள் யாவும் தத்துவங்களே என்பதை தன் அருள் அறிவு அனுபவத்தால் உணர்ந்து சென்னையை விட்டு வெளியேறுகிறார்.

ஆராவாரம் நிறைந்த சென்னை வாழ்க்கையை விரும்பாததாலும்.

வீட்டில் இருப்பதையும் விரும்பாமல் அதன் விளைவாக தனது 35 ஆம் வயதில் 1858 ஆம் ஆண்டு சென்னை வாழ்வை நீத்து தலயாத்திரை மேற்கொண்டு தில்லை சிதம்பரம் வந்து அடைந்தார்கள்.

கருங்குழி செல்லுதல்.!

சிதம்பரத்தில் கருங்குழி மணியக்காரர் திரு வேங்கடம் அய்யாவைச் சந்தித்து அவர்களின் அன்பான  வேண்டுகோளின்படி சென்று கருங்குழி இல்லத்திலே தங்குகிறார்.

அவருக்கு என்று தனிஅறை கொடுக்கப்பட்டது...1858 முதல் 1867 ஆண்டுவரை கருங்குழியிலே தங்கி திருஅருட்பா ஐந்து திருமுறைகளும் எழுதிமுடிக்கிறார்.

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு வள்ளலார் திருஅருட்பா எழுதிக்கொண்டு இருக்கும்போது.எண்ணெய் இல்லாமல் அகல் விளக்கு மங்கவே.எண்ணெய் சொம்பென எண்ணித் தண்ணீர் சொம்பில் உள்ள தண்ணீரை எடுத்து விளக்கில் வார்த்தார்.விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கு எரிந்த இவ் அற்புதத்தை பற்றி வள்ளலாரே ஒருபாடல் வாயிலாக சென்னையில் உள்ள  அன்பர்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

*வள்ளலார் பாடல்*! 

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லை என்றார் மேலோர் நானும்

பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே

செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்

நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந் நிதியின் முன்னே.! 

என்னும் பாடல் வாயிலாகத் தெரியப்படுத்துகின்றார்.

*வள்ளலார் கொள்கைகள்* 

உலகம் முழுவதும் ஒரே கடவுள் என்ற உண்மையை உணர்த்த வேண்டும்

உலகம் முழுவதும் உள்ள உயர்ந்த அறிவுபெற்ற மனித குலத்தை மரணம் அடையாமல் காப்பாற்ற வேண்டும். சாதி சமயம் மதம் அற்ற.ஏற்ற தாழ்வு அற்ற.உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் என்னும் பேதம் இல்லாமல். மனித நேயத்தோடு.ஜீவநேயத்தோடு.ஆன்ம நேயத்தோடு ஒற்றுமையாக வாழவைக்க வேண்டும்.

பசி.பட்டினி.வறுமை இல்லாத புதிய  சமுதாயத்தை உருவாக்க வேண்டும் போர் இல்லாமல்.தீவிரவாதம். பயங்கரவாதம் இல்லாமல் உலக ஒற்றுமையை நிலை நாட்டவேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தடையின்றி  கிடைக்க வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு மக்களை  வாழவைக்க வேண்டும்.அனைத்து உயிர்கள் மீதும் அன்பு.தயவு.கருணையுடன் நேசிக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் அடிப்படை கொள்கையாகும்.

உலகில் தோன்றிய ஞானிகள் ஆன்மீகம் என்ற பெயரில் இறைவன் தொடர்பு கொண்டு அருள்பெற்று முக்தி அடைந்தால் போதும் என்று வாழ்ந்த காலகட்டத்தில். 

*வள்ளலார் ஒரு சமுதாய புரட்சியாளர்* 

இறைவனால் படைத்த மனித குலத்தை காப்பாற்றவும் ஒழுங்குபடுத்தவும்.நேர்மறையான கொள்கைகளை மக்கள்ஆன்மாவில் பதிய வைக்கவும். அவற்றை எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லவும் 1872 ஆம்ஆண்டு வடலூரில்  *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*   என்ற ஒரு புதியதோர் தனி நெறியைத் தோற்றுவிக்கிறார். இச் சங்கத்தின் வாயிலாக  பல புரட்சிகரமான கொள்கைகளை வெளியிடுகிறார்.

*வள்ளலாரின் கொள்கைகள்*..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு