ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இறந்தவரை பார்த்து ஏன் அழுகின்றீர் !

 *இறந்தவரை பார்த்து ஏன் அழுகின்றீர்.!*


உடலைவிட்டு உயிர் பிரிந்தால் அதற்கு மரணம் என்று பெயர். எமன் என்னும் கூற்றுவன் வந்து உயிரைப் பரித்துக் கொண்டான் என்றும் சொல்லுகின்றார்கள்


உயிரைக் கொடுத்த கடவுளே உயிரைப் பரித்துக்கொண்டார் என்றும். கடவுள் மீதே பழியைப் போட்டுவிடுகின்றார்கள். மேலும் அவற்றிற்கு விதிஎன்றும் வினைப்பயன் என்றும்.பாவம் புண்ணியம் என்றும். பலப்பல ஆன்மீகப் பெரியோர்களால் கற்பனையாக சொல்லி வைத்து உள்ளார்கள். 


*கடவுள் கருணை உள்ளவர் சோதனையும் தரமாட்டார் வேதனையும் தரமாட்டார்*


நன்மை தீமை என்பது நாமே உருவாக்கிக் கொள்வதாகும்.


மேலும் மரணம் என்பது இயற்கையானது என்றும் ஆறிலும் சாவு.நூரிலும் சாவு என்றும் சொல்லுவார்கள். இறந்தவர்களை விதிவசத்தால் நேர்ந்தது எனபாடல்தி.நல்வினை.தீவினைப்போன்ற வினைப்பயன்களால் மரணம் அடைகிறார்கள் என்றும் சொல்லப் படுகின்றது. 


இறந்தவர்கள் சொர்க்கம்.

கைலாயம்.வைகுண்டம்.பரலோகம்.

சிவலோகம் நரகம். போன்ற இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டிவிட்டு  பெரியோர்கள் சென்றுவிட்டார்கள்.அவையாவும் உண்மை என்றே மக்கள் நம்பிக்கொண்டு உள்ளார்கள்.


மேலும் இறந்த பிணங்களை வைத்துக்கொண்டு ஆசார.சங்கற்ப விகற்பங்கள்.சாங்கியம்.சடங்குகள் சம்பரதாயங்கள் செய்வதும் வழக்கமாக உள்ளது.மேலும் தேவை இல்லாத சாதி சமய மதச் சடங்குகள் மற்றும் பலவகையான மந்திரங்கள் ஓதி மண்ணைப்போட்டு மறைத்தோ.அல்லது தீயிட்டு கொளுத்தியோ சாதி சமய மதச் சடங்குகளைச் செய்து முடித்து விடுகிறார்கள்.


இவைகளை எல்லாம் அவரவர்கள் தரத்திற்கும் வசதிக்கும் தகுந்தாற்போல் தொன்றுதொட்டு இன்றுவரை நம்பிக்கையோடு செய்து வருகிறார்கள்.

*இவைகள் யாவையும் வள்ளல்பெருமான் மறுக்கிறார்*


அறியாமையாலும்.

அஜாக்கிறதையாலும். பயத்தாலும்.அச்சத்தாலும் பலநூறு ஆண்டுகளாக.

 மக்கள் மூட நம்பிக்கைகளைப் பின்பற்றி தொடர்ந்து  செயல்பட்டுக் கொண்டே வருகின்றார்கள்.


*குழந்தை பிறக்கும்போது சிரிக்கின்றீர். அதே குழந்தை இறக்கும்போது அழுகின்றீர்*.


பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் என்ன நடக்கின்றது என்பது எவருக்கும் தெரிவதில்லை.தெரிந்துகொள்வதும் இல்லை.இதுவே பெரிய மறைப்பு.இதுவே அறிவின் அறியாமையாகும்.


குழந்தை பிறக்கும் போது சிரிக்கின்றீர் மகிழ்ச்சி அடைகின்றீர் ஆனந்தம் அடைகின்றார்.வரம் என்கின்றீர்.


அதே குழந்தை பிறந்து வளர்ந்து வாழ்ந்து முதிர்ச்சிபெற்று நரை திரை பிணி மூப்பு வந்து இறுதியில் மரணம் வந்துவிடுகின்றது. உடம்பைவிட்டு உயிர் பிரிந்து விடுகின்றது


பின்பு இறந்தவரை அடக்கம் செய்ய எடுத்திடும் போது எல்லோரும் சேர்ந்து மாளாத துயரம் துன்பம் வந்ததுபோல் அழுகின்றீர் உலகீர்.கொஞ்சம் நாளில் சமநிலைக்கு வந்துவிடுகின்றீர்.


*செத்த பிணங்களைப் கலந்து சாகும் பிணங்கள் அழுகின்றது வேடிக்கையாகும்*.


*மரணம் வராமல் அதாவது இறவாத பெருவரம் ஒன்று உண்டு* அவற்றை ஏன் அடைய முடியாமல் பெறமுடியாமல் தவிக்கின்றீர் என்று மனித குலத்தை பார்த்து கேட்கின்றார் வள்ளல்பெருமான்.


*வள்ளலார் பாடல்* ! 


*இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர்* *உலகீர்*


*இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்*


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு


மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடு* *சன் மார்க்கம்ஒன்றே* *பிணிமூப்பு மரணம்*


*சேராமல்* *தவிர்த்திடுங்காண்* *தெரிந்துவம்மின் இங்கே*


பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வுபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


என்னும் திருஅருட்பா பாடல் வாயிலாக தான் அடைந்த அனுபவத்தையும்.

நித்தியமான வாழ்க்கை வாழமுடியும்.

 இறை அருள் வல்லபத்தால் மரணத்தை வென்று அதன் உண்மைகளை உலக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.


பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக பார்த்து பார்த்து பழகிப்போன மனிதர்கள் மத்தியில் இறக்காமல் மீண்டும் பிறக்காமல் வாழும் வாழ்க்கைக்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் சூட்டுகின்றார்.


*மரணம் என்பது இயற்கையானது அல்ல.செயற்கையானது என்கிறார் வள்ளலார்* *தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்.* தவறான வாழ்க்கை வாழ்வதால்  மரணம் வருகிறது என்கிறார்.


*மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்*.


தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடித்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான்  வள்ளலார் என்பவராகும்.


இயற்கையால் (அதாவது கடவுளால்)  உயர்ந்த அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதின் நோக்கமும் அதன் உண்மையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற உயர்ந்த குணம் மனிதனுக்கு உண்டு.


மனிதன் மரணத்தை வென்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப் பட்டதாகும். 


மனிதன் தன் உயர்ந்த அறிவை வெளிப்படுத்தி கொள்ளாமல்.அதன் உண்மைசெயலை அறிந்து கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும்  இறந்தும் பிறந்தும் குடும்ப சாகரத்தில் சிக்கி அருள் பெறும் வழி தெரியாமல்.சிறிய இன்பம்  துன்பமே வாழ்க்கை என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லித் தேற்றிக்கொண்டு அற்ப வாழ்க்கையில் இச்சைவைத்து கண்தெரியாத குருடனைப்போல் வாழ்ந்து கொண்டே உள்ளான்.


*மனிதனுக்கு மட்டுமே அகம் என்னும் ஆன்மாவில் அறிவு வைக்கப்பட்டுள்ளது*


*அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளால் ஆன்மாவில் உள்ள அறிவு மறைக்கப்பட்டுள்ளன.அத் திரைகளை நீக்கி ஆன்மாவை புதுப்பிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.* 


அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்களை திருத்தி இகத்தே பரத்தை பெறவேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னை வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கிறார்.


திருஅருட்பா பாடல்!


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!


மேலே கண்ட பாடல்வாயிலாக தான் வந்த நோக்கத்தைப்பற்றி தெரிவிக்கின்றார்.


*உலகியல் வாழ்க்கை* !


*உலகியலில் பட்டம் பதவி புகழுக்காக பொருள் ஈட்டுவதே வாழ்க்கை என வாழ்ந்து அழிந்து கொண்டுள்ளான் மனிதன்*


ஆன்மீகம் என்ற பெயரில் உலகில் உள்ள எல்லா மதங்களும். ஆன்மீக அடையாளமாக வேதம் ஆகமம்.

புராணம்.இதிகாசம்.சாத்திரம் போன்ற கலைகளை இயற்றி வைத்துள்ளார்கள்.


ஆன்மீக சம்பந்தமான

அதில் உள்ள கற்பனை கதைகளையும். அதில் உள்ள கதாபாத்திரங்களான  தத்துவங்களையும் தெய்வங்களாக படைத்துள்ளார்கள்.


இயற்கை உண்மைக்கு புறம்பாக செயற்கையான வகையில் படைத்து மக்களை நம்ப வைத்து அலையவிட்டு விட்டார்கள். 


மக்கள் கோயில்.ஆலயம்.

சர்ச்.மசூதி.பிரமிட்.

புத்தகயா மற்றும் புண்ணிய ஸ்தலங்கள்.காடு.

மலை.குகைகள் போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று எதாவது ஆறுதல் கிடைக்காதா?  அமைதி கிடைக்காதா? மகிழ்ச்சி கிடைக்காதா ? என்று தேடித் தேடி அலைந்து கொண்டே உள்ளார்கள்.


*அறிவியல் வல்லுநர்கள்*


அறிவியல். விஞ்ஞானம்.

வேதியலில் தேர்ச்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள். இறைவன் படைத்தை பஞ்சபூதக் கருவிகளைக் கொண்டு.பல அறிவியல் ஆராய்ச்சிகளால் பலவிதமான அளவற்ற அணு ஆராய்ச்சிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.


*ஆனாலும் தன் உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் அறிவியல் ஆராய்ச்சியால் கண்டுபிடிக்க தவரிவிட்டார்கள்*. 


மாயையின் ஆதிக்கத்தில் உள்ள பஞ்சபூத பொருள்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.

செய்து கொண்டே உள்ளார்கள்.


ஆனாலும் அருள் பெறும் வழியைக்  கண்டுபிடித்து மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க தவரிவிட்டார்கள்.


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணயால் மட்டுமே அருள் பெறமுடியும்.

 

மாபெரும் சக்தி ஆற்றல் கொண்ட  அருள் விஞ்ஞான அறிவியல் ஆராச்சியால் மட்டுமே மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.அதற்கு சாகாக்கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.


அவற்றை பெறுவதற்கு சாதி.சமயம்.மதம் அற்ற இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கமான தனிமனித ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.


*அருள் பெறுவதற்கு  உண்டான தகுதியும் சக்தியும் ஆற்றலும் மனிதனுக்கு மட்டுமே இறைவனால் கொடுக்கப்பட்டு உள்ளது.*


உலகியல் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி புகழுடன் வாழ்ந்த மனிதர்களாய் இருந்தாலும். இறந்துவிட்டால் மீண்டும் அவர்கள் பிறப்பு எடுத்து இங்கே வேறுஒரு உருவத்தில் வந்தே ஆகவேண்டும்.வேறு எங்கும் செல்ல வாய்ப்பே இல்லை.


*இறந்தவர்களைப் பற்றி இருப்பவர்களுக்குத் தெரியாது*.


*இருப்பவர்களைப்பற்றி இறந்தவர்களுக்குத் தெரியாது*. இதுதான் இறை ரகசியம்.


இறந்தவர்களின் உடம்பானது. உயிர் இயக்கம் இல்லாத ஜடப்பொருளுக்குச் சமம்.அவர்களுக்கு தேவை இல்லாத சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்வது அறியாமையின் உச்சகட்டமாகும் என்கிறார் வள்ளலார்.


ஒருவர் இறந்துவிட்டால் தீயிட்டு எரிக்காமல் மண்ணில் அடக்கம் செய்வதே சிறந்த செயலாகும் என்கிறார் வள்ளலார்.


அதே சமயம் அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இறை உணர்வோடு உயிர் நேயத்தோடு ஜீவ உரிமையோடு மனிதநேயத்தோடு அவர்நினைவாக ஏழை எளிய ஆதரவு அற்ற மக்களுக்கு தங்கள் தகுதிக்குத் தக்கவாறு உணவு வழங்கி பசியைப் போக்குவதே புண்ணிய செயலாகும் என்கிறார்.


உயர்ந்த அறிவு உடைய  மனித தேகம் பெற்றவர்கள்.

பொருள் ஈட்டி பட்டம் பதவி புகழ் பெற்று இறுதியில் மரணம் அடைந்து வாழ்வது உயர்ந்த வாழ்க்கை அல்ல.  


இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.

அதுவே உயர்ந்த வாழ்க்கையாகும்.


இறக்கபோகும் மனிதர்களால்.இறந்தவர்களைப் பற்றி போற்றி புகழ்வதும் பாராட்டுவதும் இறந்தவர்களிடம் போய் சேராது .அவர்களே உயிர் அற்றவர்கள் அவர்கள் எப்படி அறிவார்கள் என்பதை அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.


என்றும் அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கும். எல்லா ஆன்மாக்களையும் எல்லா உயிர்களையும் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் புகழ் பெறவேண்டும்.  


*தந்தையால் மகன் பாராட்டு பெறவேண்டும்*.

*தந்தை பாராட்டும் அளவிற்கு மகன் தகுதி உள்ளவனாக வாழவேண்டும்*


அதேபோல் நம்மைப்படைத்த இறைவனால் நல்லபிள்ளை என்ற பாராட்டை பெற வேண்டும்.போற்ற வேண்டும்.


*ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்பார் வள்ளலார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  அருள் வழங்கி மரணத்தை வென்றவர் புகழ்ந்து மகிழ்ச்சி அடைய செய்விப்பதே சிறந்த புகழ்ச்சியாகும்.

சிறந்த மகிழ்ச்சி யாகும். சிறந்த ஆனந்தமாகும்.


அருள் பெற்றவரை அருள் பெற்றவர் புகழ்ந்தால் அருள் பெற்றவர் அறிவார்.

ஆண்டவரே அறிவார் புகழ்வார்.அதுவே உண்மையான அருள் இன்ப மகிழ்ச்சியாகும்.


*இந்த உண்மையை தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் எவரோ அவரே உயர்ந்தமனிதர்கள்ஆவார்கள்*


உயிர் வந்தவழியும். உடம்பு வந்த வழியும் தெரியாமல்  மாண்டுபோவது அறியாமையாகும்.


*வள்ளலார் பாடல்!*


உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்


இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தேஎண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே


நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 


என்னும் பாடல் வாயிலாக எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார். 


உடம்பு வந்த வழியும் .உயிர்வந்த வழியும் தெரிந்துகொண்டு. எல்லாம்வல்ல தனித்தலைமை பெரும்பதியான தனித் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று பஞ்ச பூத உடம்பை.அருள் ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும்.


மனிதன் உலக வாழ்க்கையான மரணம் அடையும் பொய் வாழ்க்கை வாழாமல்.சாதாரண இன்பம் துன்பத்திற்கு ஆசைபடாமல் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெறவேண்டும்.


மீண்டும் உயிர் உடம்பு எடுக்காமல்.  மெய்ப்பொருளான அருளைப் பெற்று பேரின்ப பெரு வாழ்க்கை வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.  


 அருளைப்பெற்று மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து வாழ்வதே சிறந்த மனிதகுல அருள்  வாழ்க்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்


9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு