வியாழன், 19 டிசம்பர், 2019

மலேசியா நாட்டில் அற்புதம் !

*மலேசியா நாட்டில் அற்புதம்* !

*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை* பெக்கான் கர்ணி (சிம்பாங் தீகா ) சித்தியவான். பேராக் என்னும் இடத்தில் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.

14-12-2019 முதல் 15-12-2019 ஆகிய இரண்டு நாட்கள் *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை* திறப்பு விழா. **அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தலைமையில்** மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை அமைக்கவும் தோற்றுவிக்கவும் இடைவிடாது முயற்சி செய்து கடுமையான உழைப்பால் வெற்றி கண்ட. விழாவின் தலைமை இயக்குனராக.செயல் வீர்ராக *இந்துபாபா* அவர்களின் செயல்பாடுகள் அளவில் அடங்காத செயல்களாகும் பாராட்டுற்குரியதாகும்.

பொருளை கணக்கு பார்க்காமல் வாரி வழங்கி சபையைத் தோற்றுவிக்க துணைபுரிந்த   சபையின் தலைவர் *திரு.திருமதி வனிதா திருமலைநாயக்கன்* அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவும் அழகாகவும் வருபவர்களை வரவேற்று உண்மை அன்பால் உபசரித்து பணிகளை சிறப்பாக செய்தார்கள்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளும்.
*திருஅருட்பா இசை.திருஅருட்பா நாட்டியம்.திருஅருட்பா சொற்பொழிவுகள்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஜோதி வழிப்பாட்டுடன் நிறைவான நிகழ்ச்சிகளாக நடைபெற்றது* தொடர்ந்து கொண்டே இருக்கும்.

*இந்துபாபா.திரு.திருமதி வனிதா திருமலைநாயக்கன்* அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும்.சன்மார்க்க சங்க அன்பர்களுக்கும். உற்றார் உறவினர் நண்பர் அயலார் மற்றும்  அனைவருக்கும்  நீண்ட ஆயுள்.நிறைந்த செல்வம்.அழியாப்புகழ். அழியா அருள் வழங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்ள வேணுமாய் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழக முக்கிய சன்மார்க்கிகள் .
மலேசியா சன்மார்க்க சங்கங்கள் மற்றும் சன்மார்க்க சான்றோர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இரண்டு நாட்களும் தாவர உணவு வகைகள் முறையாக சிறப்பாக செய்து மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்து விட்டார்கள்.

*வழிபாடு*

*சன்மார்க்க சங்கங்களின் சகோதர சகோதரிகள் 24 மணி நேரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் தொடர்ச்சியாக பாராயணம்.மற்றும் அருட் பிரார்த்தனை செய்தார்கள்*.

*அற்புதம்* !

வள்ளலார் சொல்லிய வண்ணம் *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல்.*

அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் தொடர்ச்சியாக ஓதி ஜோதி வழிபாடு செய்து சபை சிறப்புவிழா எல்லோராலும் பாராட்டும் வண்ணம் ஒரு புதிய கோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.

*அதிசயம் அற்புதம்* !

*நான் பல ஆண்டுகளாக வள்ளலார் படம் வேண்டாம் .அதுவும் சமய சின்னங்கங்கள் அணிந்த படம்  வேண்டாம் விபூதி போன்ற சமய மத பிரசாதங்கள்  வேண்டாம்.படையல்கள் வேண்டாம் என்று மேடைகள் தோறும் சொல்லிக் கொண்டே வந்தேன் வருகிறேன்.இன்று மலேசிய நாட்டில் முதன் முதலாக அரங்கேற்றம் பெற்றன.அவற்றை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்*.

*மலேசியா நாட்டில் சபை திறப்பு விழாவில் வள்ளலார் உருவ படம் எங்கும் இல்லை*.

*அபிஷேகம் ஆராதனை படையல் இல்லை.விபூதி.குங்குமம் போன்ற சமய பிரசாதங்கள் இல்லை. சின்னங்கள் இல்லை.சமய வழிப்பாட்டு முறைகள் இல்லை*.

வடலூர் சபை.சாலை.தீஞ்சுவைஓடை தண்ணீர் கொண்டுவந்து கலச கோபுர உச்சியில் ஊற்றி குளிர வைத்தார்கள்.

*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே* முதல்இடம் கொடுத்து சபை திறக்கட்டது மிகவும் பாராட்ட வேண்டியதாகும் மகிழ்ச்சி அடைய வேண்டியதாகும்.

இதுவரையில் சன்மார்க்க சங்கம்.சாலை. சபை திறப்பு விழா சமய மத சடங்குகள் இல்லாமல் நடைபெற்றது இல்லை.

*மலேசியா நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட சித்திவான் சபை மட்டுமே உலக சன்மார்க்கம் சார்ந்த மக்களுக்கு வழிகாட்டியதாக திகழ்கின்றது*.

மலேசியா நாட்டு ஆன்மநேய அன்பர் இந்துபாபா.திரு.
திருமதி வனிதா திருமலைநாயக்கன்.
அவர்களை அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டு செயல்படுத்தி உள்ளார் என்பதை நினைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

வள்ளலார் பாடல் !

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை

நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்

புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை

அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.!

மேலும்

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

மேலே கண்ட வள்ளலார் பாடல்களில் கண்டுள்ளபடி மலேசியா நாட்டில் அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி  திருச்சபை அற்புதமாக தோற்றுவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் எல்லா சன்மார்க்க சங்கங்களும்.சபைகளும் சமய.மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல் செயல்பட்டால் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்கள் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி மக்கள் ஜீவகாருண்ய நல் ஒழுக்கம் பெற்று .உலகம் முழுவதும் அமைதி பூங்காவாக மலரும் என்பதில் ஐயம்இல்லை.

மலேசியா நாட்டு மக்கள் அனைவரும்.சித்திவான் சபைக்கு சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வதற்கு ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு