புதன், 24 ஜனவரி, 2018

வள்ளலார் பாடல் !

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யே

நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே

உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து

மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

இந்த பாடலை ஊன்றி படிக்கவும்..ஈரோடு கதிர்வேல் .தான் மற்றவர்கள் மனது புண்படும் படி எழுதுகிறான்.பேசுகிறான் என்று சில அன்பர்கள் வருத்தப் படுகிறார்கள்.

நான் வள்ளலார் சொல்லியதை மாற்றம் இல்லாமல் பதிவு செய்கிறேன் .அவ்வளவுதான்..

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்பொதுநடங்கண்டு உளங்களிக்கும் போதுமண வாளர்

மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்

மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காணமாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலாரிடம் சொல்லுகிறாராம்.

உலகில் தோன்றிய அருளாளர்கள்.எல்லோரும் பொய்பிடித்தவர்கள்.பொய்யான கடவுளையே பின் பற்றி உள்ளார்கள் .

நீ ஒருவன் தான் மெய்பிடித்தாய் மெய்யான என்னைத் தொடர்பு கொண்டாய்.எனவே நீ என்றும் நீடூழி வாழ்க என்றும்.

உண்மை மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்கத்தை உலகம் எல்லாம் கொண்டு செல்க என்றார்.நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் காலைப் பிடித்துக் கொண்டேன்.

களித்திடுக இனி உன்னை கைவிட மாட்டேன் என்று மைபிடித்த விழி உலகர் முன்னாடி வள்ளலாரை அமர்த்தி அறிமுகப்படுத்தி் அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் சொல்லுகின்றார்.

யார் ? யார்? முன்னாடி !

பொய் பிடித்த  அருளாளர்கள்.எல்லோரையும் முன்னே அமரவைத்து அவர்கள் காணும்படி அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் .வள்ளலாருக்கு ஐந்தொழில்  வல்லபத்தை கொடுத்து அருள் மாலை அணிவிக்கின்றார்.அருட் செங்கோல் வழங்குகிறார். என்பதை தெளிவாக அருட் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

முன்னாடி இருந்தவர்கள் யார் ? யார் ? என்பதையும் தெரிவிக்கின்றார்.!

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடிஉறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்றுதியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறிமாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!

இதைவிட வேறு விளக்கம் தேவையா ? தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

நாம் கடைத்தேர வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதைதான் உண்மையானது.நேர்மையானது.சாதி.
சமயம்.மதம் சாராத பொதுவான மார்க்கமாகும்.

இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டதாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு