வெள்ளி, 19 ஜனவரி, 2018

தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி வந்த்து ? நுழைந்த்து ?

தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி வந்த்து ?  நுழைந்த்து ?

தழிழ் நாட்டில் தமிழ் சித்தர்களால் தமிழ் கடவுள்களைத் தோற்றுவிக்கப் பட்டது.தமிழ் மன்னர்களால் ஆலயங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது .

தமிழ் கடவுள்களை தமிழில் தானே வழிபாடு செய்ய வேண்டும்.

தமிழ் கடவுள்களை வழிபாடு செய்ய
தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி நுழைந்த்து.

இங்கே தான் சூழ்ச்சி நடந்துள்ளது. 

தமிழ் நாட்டில் கோயிலைக் கட்ட சொன்னவன்  தமிழன்.
கோயிலைக் கட்டியவன் தமிழன்
கோயிலைக் கட்ட உழைத்தவன் தமிழன்.
சிற்பங்களை செதுக்கியவன் தமிழன்.

உழைத்தவர்கள் அனைவரும் தமிழர்கள்!  .

மக்கள் கடவுளை வழிபாடு செய்ய இடைத்தரகள் எப்படி வந்தார்கள் .

சமஸ்கிருதம் கற்றவர்களை கோயிலுக்கு உள்ளே விட்டவர்கள் யார் ? தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருதம் தான் பிடிக்குமா ?

கடவுளுக்கு பட்டை அடித்தவன் யார் ?
கடவுளுக்கு நாம்ம் போட்டவன் யார் ?

தமிழ் மக்களுக்கு பட்டை அடிக்கவும் .கொட்டை அணியவும்.நாம்ம் போடவும் கற்றுக் கொடுத்தவன் யார் ?

கேட்டால் வேதம்.ஆகம்ம் புராணம் இதிகாசம்  சொல்கிறது என்பார்கள்.

எல்லாமே மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் உயர்ந்த சாதிக்காரண் என்பவர்களின். சுயநலவாதிகளின் சூழ்ச்சிகள்.என்பதை தமிழக மக்களும் .உலக மக்களும் புரிந்து .தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் வந்துதான் அந்த சுயநலக்கார்ர்களின் சூழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்.

ஆண்டவரை தொடர்பு கொள்ள வேதம் ஆகம்ம் புராணம் இதிகாசம்.போன்றவைகளின் கொள்கைகளை முழுவதும் பொய்யானது அதிலே கவனம் செலுத்தாதீரகள் என்கின்றார். கடவுளைத் தெரிந்து கொள்ள வழிபாடு செய்ய இவைகள் யாவும் தடைகளாக உள்ளன.இடைத்தரகர்கள் தேவை இல்லை  என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும்  விண்ணப்பம்..

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் .என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரம்ம்.முதலிய உலக ஆச்சார  சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனத்தில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.என்கிறார் மேலும்

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல்  வேண்டும் என்கிறார் 

எல்லாம் ஆகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம் ! வந்தனம் ! என்று விண்ணப்பம் செய்ய கற்றுத் தருகிறார் வள்ளலார்

வள்ளலார் பாடல் ! ஊன்றிப் படிக்க வேண்டும் !

வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.

எல்லாமே சூதாக சொல்லி உள்ளார்கள் . அவற்றில்  எதிலுமே உண்மையை வெளிப்படையாக சொல்லவில்லை.எனவே  அவற்றில் கவனம் செலுத்தாதீர்கள் என்கிறார் வள்ளலார்.

 மேலும் அவைகளில் உள்ள சூதை ஆண்டவர் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் என்கிறார்.

பாடலைப் பாருங்கள் !

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டிஉள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

எவ்வளவு தெளிவாக விளக்கி உள்ளார் நம் வள்ளல் பெருமான்.

கடவுளை தொடர்பு கொள்ள .ஜீவ காருண்யம்  என்னும்  பரோபகாரமும் .இறைவன்  மேல் இடைவிடாது அன்பு கொள்ளும் சத்விசாரமும் என்கின்ற  இரண்டு வழிகள் போதும் என்கிறார்.

இனிமேலாவது திருந்தி வாழ முயற்சி செய்ய வேணுமாய் பணிவுடன் உங்களின்  தாழ் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

2 கருத்துகள்:

20 ஜனவரி, 2018 அன்று AM 10:17 க்கு, Blogger Unknown கூறியது…

அப்படியே இசுலாம் கிருத்துவம் பொய் என்று சொல்ல மாட்டீர்களே!

 
5 பிப்ரவரி, 2018 அன்று PM 1:15 க்கு, Blogger Unknown கூறியது…

தமிழ் மக்களுக்கு பட்டை அடிக்கவும் .கொட்டை அணியவும்.நாம்ம் போடவும் கற்றுக் கொடுத்திருக்கவில்லை எனில் தண்ணி போடுவது மணல் திருடுவது லஞ்சம் வாங்குவது என்று எப்போதோ ஆரம்பித்திருப்பார்கள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு