திங்கள், 11 செப்டம்பர், 2017

சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு !

சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு !

அன்புள்ளம் கொண்ட ஆன்ம நேய ஒருப்பாட்டு உரிமை உள்ள சம்பந்திகள் அனைவருக்கும் வந்தனம்.

உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற மார்க்கமாகும்.

இந்த மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள்  கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும்ஜோதி யர் என்பதாகும்.அடுத்தது ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை என்பதாகும்.இந்த இரண்டு கொள்கையும் தெரிந்து கொண்டால் உலகத்தில் துன்பம்.துயரம்.அச்சம் பயம் இல்லாமல் மக்கள் வாழலாம்.

இந்த உண்மையை மக்கள் தெரிந்து கொண்டால் சாதி.சமயம்.மதம்.அரசியல்.ஆன்மீகம் போன்ற சூதான குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.மக்கள் பஞ்சம்.பட்டினி .வறுமை.ஏழ்மை போன்ற கீழ் நிலையில் உள்ளவர்களை மேல் நிலைக்குக் கொண்டுவர முடியும்.அதற்குமேல் மனித வர்க்கத்தின் நிலை உயர்ந்து கொண்டே போகும் இறுதியில் மனிதனின் அறிவு ஆற்றல் உயரந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தையே வெல்லும் வழி கிடைக்கும்.

எனவே உலக மனித ஆன்மாக்களின் அறிவை மேம் படுத்தி அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளலார்.

அவர்களின் கொள்கையானது எல்லா உலகத்திற்கும் பொதுவானது. அந்த பொதுவான சுத்த சன்மார்க்க கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே ஒவ்வொரு சுத்த சன்மாரக்கிகளின் கடமையாகும்.வள்ளலார் வகுத்து தந்த கொள்கையை உலக மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவே

*தரும்மிகு சென்னையில் உலக சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு நடத்த சன்மார்க்க சான்றோர்களால் நிச்சயிக்க பட்டதாகும்* வருகிற ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

முதலில் மாநாட்டுக்குழு தலைவராக ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் அவர்களையும்.
மாநாட்டு குழு அமைப்பாளறாக செயல் வீரறாக.பல மாநாடுகளை நடத்திய அனுபவம் வாய்ந்தவராக உள்ள விழுப்புரம் அருள்மாளிகையின் பொருப்பாளர் திரு .அண்ணாமலை பரதேதி அவர்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆலோசனை கூட்டத்தில் மாநாட்டு குழு பொருப்பாளர்களை தேர்வு செய்யப்படும் .அதற்குண்டான அறிவிப்பை தேதியிட்டு தமிழகம் முழுவதும் தெரிவிக்கப்படும்.

எனவே அனைத்து சன்மார்க்க சங்கங்களும்.சன்மார்க்க சம்பந்திகளும் ஒன்று சேர்ந்து உலக சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாட்டை ஒன்று சேர்ந்து செயல்பட்டு உழைத்து உலகம் அறிய வெற்றி காண்போம்

இதுவே தலைசிறந்த ஜீவ காருண்யம்.

அன்புடன் ஆன்ம நேயர்கள் ஈரோடு கதிர்வேல்.
விழுப்புரம் அண்ணாமலைபரதேசி
தொடர்புக்கு
9941884576
9629876011
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு