புதன், 5 ஜூலை, 2017

வள்ளலார்**சமூக* *புரட்சியாளர்*!


*வள்ளலார்**சமூக* *புரட்சியாளர்*!

வள்ளலார் சமூக புரட்சியாளர் என்பதற்கு ஒரே ஒரு சான்று போதும்

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றும்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும்

புதிய ஆன்மீகப் புரட்சியை மனித சமுதாயத்திற்கு கட்டளையாக.சட்டமாக வெளியிட்டார்.

மேலும் பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்களைக் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

பெண்ணும் ஆணும் சம்ம் பேதம் பார்க்க கூடாது என்று கட்டளை இட்டார்.

முதன் முதலில் 1870 ஆம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த முதன்மையான புரட்சியாளர்  வள்ளலார் என்பதை பெண்கள் சமுதாயம் .ஆண்கள் சமுதாயம் மறந்து விடக் கூடாது.

இன்று பெண்களுக்காக எல்லாத் துறைகளிலும் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு வித்திட்டவர் வள்ளலார் என்பதை எவறும் மறந்து விட வேண்டாம்.

ஆன்மீக வழியாக சமய புரட்சி.மதப்புரட்சி.சாதி புரட்சி.சமூக முன்னேற்ற புரட்சிக்கு வித்திட்டவர்  வள்ளலார் தான்.

சாதி.சமய.மதங்களை.சாத்திரங்களை வேரோடு பிடுங்கி இருக்கும் இடம் தெரியாமல் அழித்து ஒழித்து விட வேண்டும் என்று குரல் கொடுத்தவர.அழித்துக் கொண்டே இருப்பவர்.

மனித குலத்தை அழிக்கும்.எந்த கொள்கையாக இருந்தாலும் சட்டமாக இருந்தாலும் அவற்றை அப்புறப் படுத்துவதே வள்ளலாரின்""சுத்த சன்மார்க்க கொள்கையாகும்"'

அவர் போட்ட வித்துதான் இன்று செடியாகி.மரமாகி.பூவாகி.காயாகி கனிந்து கொண்டு உள்ளது.

வள்ளலார் என்ற அருளாளர் புரட்சியாளரின் வார்த்தைகள்் சொல்லிய வண்ணம் என்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

"வள்ளலார.பாடல்*!

நான்உரைக்கும்
வார்த்தை எல்லாம் நாயகன்றன் வார்த்தைநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.,!

மனித குலத்தை மேம்படுத்தவே புரட்சி குரல் கொடுத்த ஆன்மீக புரட்சி யாளர்  வள்ளலார ஒருவரே !

இன்னும் நிறைய உள்ளது.இது ஒரு மாதிரி வடிவம்.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்.
9865939896.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு