புதன், 26 ஏப்ரல், 2017

வள்ளலார் எழுதிய திரு முறைகள் மூன்று !


வள்ளலார் எழுதிய திரு முறைகள் மூன்று !


ஒன்றிலிருந்து நான்கு  திருமுறை வரை ஒன்று ! ஐந்தாம் திருமறை ஒன்று !
ஆறாம் திருமுறை ஒன்று !

ஒன்றிலிருந்து நான்கு  திருமுறை எழுதிய போது  வள்ளலார் தேகத்தின் தன்மை;--''.சுத்த தேகம்'',சுத்த தேகத்தில் இருந்து போது எழுதியது நான்கு திரு முறைகளாகும்.

.ஐந்தாவது திருமுறை எழுதிய போது,வள்ளலார் தேகம் 'பிரணவ தேகம்'' முதல் நான்கு திரு முறைகளும் ஐந்தாவது திருமுறையும் எழுதியது,, அவருடன் இருந்த அன்பர்களுக்குத் தெரியும். நான்கு திருமுறை எழுதியதும்,  ஐந்து திருமுறை எழுதியதும்   சென்னையிலும்,கருங்குழியிலும்,வடலூரில் உள்ளபோதும் எழுதியதாகும். 

அன்பர்களின் விருப்பத்தாலும்,வேண்டு கோளாலும் .உண்ணா நோன்பு இருந்தும்,   வள்ளலாரின் விருப்படி  வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள் மற்றும்   வேலாயுதம் அவர்களால் 1867 ஆம் ஆண்டில் நான்கு திரு முறை வெளியிடப் பட்டது .வள்ளலார் சித்திப் பெற்ற பின் 1880 ஆம் ஆண்டில் ஐந்தாம் திருமுறை வெளியிடப் பட்டது.

அதன்பின்பு நான்கு திருமுறையும் ஐந்தாம் திருமுறையும் சேர்த்து ஒரே புத்தகமாகவும்..ஆறாம் திருமுறை தனிப் புத்தகமாகவும் வெளியிடப்படுகின்றது. 

ஆறாம் திருமுறை ! 

ஆறாம் திருமுறை எழுதிய போது வள்ளலார்  ''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்ற காலத்தில் எழுதியதாகும். ஆறாம் திருமுறை எழுதியது மேட்டுக்குப்பத்தில் தங்கி இருந்த காலத்தில்  எழுதியதாகும்.ஆறாம் திருமுறை எழுதியது அவருடன் இருந்த அன்பர்களுக்கோ,.மற்ற அணுக்கத் தொண்டர்களுக்கோ எவருக்கும் தெரியாது.

ஆறாம் திருமுறை முழுவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்ல சொல்ல,மெய்மொழி  தமிழில் .எடுத்து கொடுக்க கொடுக்க வள்ளலார் எழுதியதாகும் .சரியாக சொல்வதானால்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எழுதியதாகும்.ஆறாம் திருமுறை எழுதியது வள்ளலாருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். 

வள்ளலார் சித்திப் பெற்றது 1874 -1-30.ஆம் ஆண்டாகும் .அதாவது ஸ்ரீ முக வருடம் தை மாதம் 19,ஆம் நாள் வெள்ளிக் கிழமை அன்று சித்திப் பெற்றார் ....

வள்ளலார் சித்திப் பெற்ற பின்பு 1885,ஆம் ஆண்டு ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது
வள்ளலார் சித்திப் பற்ற பின் 11,ஆண்டுகள் கழித்து தான் ஆறாம் திருமுறை வெளியிடப்படுகின்றது..

ஐந்து திருமுறைகளும் வள்ளலார்  சமயம் சார்ந்து எழுதப் பட்ட பாடல்களாகும் ,சாதாரண நித்திய கரும விதிகளும் நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல் ஒழுக்க உப தேசங்களும் சுத்த பிரணவ தேகத்தில் இருக்கும் போது எழுதியதாகும்.

  ஆறாம் திருமுறை ,சாதி,சமயம்,மதம் கடந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க''  பாடல்களாகும் ஆறாம் திருமுறை வெளியிடும் போது சமயம் சார்ந்த சில உரைநடைப் பகுதிகளை,அதனுடன் சேர்த்து  வெளியிட்டதால் மக்களிடம் குழப்பம் உண்டாகி விட்டது.....இவைகள் யாவும் புத்தகம் வெளியிட்டவர்களின் அறியாமை ஆகும்...அவர்கள் வேண்டும் என்று செய்யவில்லை.எல்லா உரைநடைகளும்  வள்ளலார் எழுதியது தானே என்ற கருத்தில் வெளியிட்டு விட்டார்கள்.

சில உரைநடைகள் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள் வள்ளலார் சொல்லும் போது.அதைக் கேட்டு  எழுதி வைத்து இருந்ததையும்.சேர்த்து  பதிவு செய்து உள்ளார்கள்.

சன்மார்க்க சங்கம் !

வள்ளலார் முதலில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்து தொடங்குகின்றார் ..அதன்பின்பு 1865,ஆண்டு ஷ்டாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் பெயரில்  தொடங்குகின்றார் . 1867 ,ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையை துவங்குகின்றார்..அதன்பின்பு வள்ளலாருக்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் அருள் ஆற்றல் பெறுகின்றார்.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைகின்றார் .அப்படி இருந்தும் மக்களுக்கு தன்னுடைய அருள் ஆற்றலை,அருள் உடம்பை  வெளியேக் காட்டாமல் மனித தேகத்தையே காட்டிக் கொண்டு இருந்தார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி 1872.-1--25,ஆண்டு கடவுளின் உண்மையை வெளிப்படுத்த சத்திய ஞான சபையைக் கட்டி முடித்து கடவுளின் வழிபாட்டு   பூச விழாவைத் தொடங்கி வைக்கின்றார் .

பெயர் மாற்றம் செய்கின்றார்  ! 

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

இன்று தொடங்கி ,சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்..
சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.
சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 
பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை இடுகின்றார் ,

இவைகள் அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உரைத்த வண்ணம் உரைக்கின்றேன் என்கின்றார் .

சாதி சமயம் மதம் கடந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து .வள்ளலார் சொல்லிய வண்ணம் உண்மையான  ஒழுக்க நெறிகளை கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற முடியும் என்பதுதான் ஆண்டவர் கட்டளை .என்கின்றார் .

நான் உரைக்கவில்லை !

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை 
நம்புமினோ நமரங்காள் நற் தருணம் இதுவே 
வான் உரைத்த மணி மன்றில் நடம்புரி எம்பெருமான் 
வரவு எதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே 
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் 
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும் 
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர் 
யான் அடையும் சுகத்தனை நீர் தான் அடைதல் குறித்தே !

மேலும் உண்மை சொல்லுகின்றேன் என்னுள் இருந்து இறைவன் சொல்லுகின்றார் அதனால் உண்மையை சொல்லுகின்றேன் என்கின்றார்.

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர் 
உரை இதனில் சந்தேகித்து உளறி  அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான் 
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர் 
தண்மை யொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் 
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய  வாழ்வளிக்கக் 
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலுங் 
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்னும் பாடல் வாயிலாக எளிய தமிழ் நடையில் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் .ஆறாம் திருமறை முழுவதும் சாகாக் கல்வி கற்று அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழும் வழியைக் கற்றுக் கொள்ளும் உயர்ந்த  ஒழுக்க நெறியாகும் .

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி 
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் 
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப் 
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க 
ஞான அமுதம் எனக்கு நல்கியதே --வானப் 
பொருட் பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும் 
அருட்பெருஞ்ஜோதி அது !

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார 
நித்த வடவும் நிறைந்து ஓங்கும் --சித்து எனும் ஓர் 
ஞான வடிவும்  இங்கே நான் பெற்றேன் எங்கு எங்கும் 
தான விளையாட்டு இயற்றத் தான் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே 
கனலாலே புனலாலே கதிர் ஆதியாலோ 
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே 
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர் 
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

நோவாது நோன்பு  எனைப்போல் நோற்றவரும் எஞ் ஞான்றும் 
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின் 
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் 
யார் உளர் சற்றே அறை !

என ஆயிரக் கணக்கான பாடல்கள் வாயிலாக மரணம் இல்லாமல் வாழும் வழியையும்  தான் வாழ்ந்து காட்டிய வழி முறைகளையும் பாடல்கள் வாயிலாகவும்,உரைநடை விண்ணப்பங்கள் வாயிலாகவும்  ஆறாம் திருமுறையில் நிறைய  பதிவு செய்து உள்ளார் ..

ஆறாம் திருமுறையை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளாமல் வள்ளலாரைப் பற்றி அறிவு தெளிவு இல்லாமல் மக்கள் பலர் பலவிதமாக பேசிக் கொண்டு இருப்பதும்,எழுதிக் கொண்டு இருப்பதும் அறியாமையாகும்.வேதனைத் தருவதாகும்.இனிமேலாவது ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் வள்ளலாரின் வாழ்க்கையின்  உண்மையை அறிந்து கொண்டு செயல்பட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் .

இது சுருக்கம் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
9865939896.



 .





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு