செவ்வாய், 25 ஏப்ரல், 2017

நான் யார்?

நான் யார்?

ரமணர் நான் யார் நான் யார் ? என்று கேட்டுக் கொண்டே இருந்தார் முடிவில் நான் யார் எனபதை அறியாமலே நோய்வாய்ப் பட்டு மாண்டு போனார்.

அதேபோல் நாம் போற்றும் ஆன்மிகவாதிகள் நிறைய பேர் மாண்டு போனார்கள்

வள்ளலார் நான் யார் என்பதையும் அறிந்தார்.நாம் யார் என்பதையும் அறிந்தார்.நம்மை படைத்தவன் யார் என்பதையும் அறிந்தார்.

படைத்தவனைத் தொடர்பு கொண்டார் .அவரிடம் அருளைப் பெற்றார்.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு மரணத்தை வென்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்.

மனித தேகம் எடுத்த அனைவராலும் இறைவன் பெருங்கருணையால்.அருளைப் பெற முடியும் என்பதை மக்களுக்கு போதித்தார்.போதித்துக் கொண்டே இருக்கின்றார்.

நாமும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையைப் பின்பற்றி ஒழுக்கமுடன் வாழ்ந்து ஆன்ம லாபம் பெறுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு