செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சன்மார்க்க சங்கங்களில் விபூதி பிரசாதம் வழங்கலாமா !


சன்மார்க்க சங்கங்களில் விபூதி பிரசாதம் வழங்கலாமா !

சின்னகாவனத்தில் உள்ள முக்கியமான  நண்பர் ஒருவர் கேட்டார் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் .என்பது சாதி,.சமய .மதங்களை கடந்தது.அதில் எந்த சாதி,சமய மதங்களை சார்ந்த பிரசாதங்களையும் வழங்குவது அவ்வளவு நல்லதாக தெரியவில்லை...

வள்ளலார் ஆரம்ப காலத்தில் விபூதி வழங்கி உள்ளார் என்பதை பலர் பலவிதமாக விளக்கம் சொல்லுவார்கள்..விபூதி கொடுத்து பல நோய்களை நீக்கி உள்ளார் என்றும் சொல்லுவார்கள்...கண்நோய் உள்ளவர் ஒருவர்  வருகின்றார் .அப்போது வள்ளலார் அருகில் இருந்த வாழைப் பழத்தைக் கொடுத்து கண்ணில் வைத்து கட்டுங்கள் கண்நோய் நீங்கிவிடும் என்று சொல்லுகின்றார் அப்படியே கண்நோய்  நீங்கி விடுகின்றது.

எந்த நோய் நீங்குவதும் கொடுக்கும் பொருளில் இல்லை .கொடுப்பவரின் அருள் ஆற்றலில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதே விபூதியை நாம் கொடுத்தால் நோய்கள்  நீங்கி விடுமா என்றால் நீங்காது.

வள்ளலார் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்த காலத்தில் விபூதி வழங்கினார் .பின்பு சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கம் என்ற பொது நெறியை,பொது மார்க்கத்தை  உலகிற்கு அறிமுகப் படுத்து கின்றார் ,அதன் பின்பு அவர் தோற்றி வைத்த சுத்த சங்கத்திற்கு,எந்தவிதமான சாதி  சமய மதங்களின் சின்னங்கள் வேண்டாம் என்கின்றார்.அவைகள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு தடையானவை என்கின்றார்.

மேலும் பெருபதேசத்தில் வள்ளலார்  சொல்லுவதை கவனிக்க வேண்டும் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது ,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்திப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ளவில்லை.நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்து இருந்த லஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,.அந்த லஷியம் தூக்கி விடவில்லை

மேலும் இவைகளுக்கு எல்லாம் சாட்சி நானே இருக்கின்றேன்,நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது,இவ்வளவு என்று சொல்ல முடியாது.அது பட்டினத்து சாமிகளுக்கும், வேலாயுதம்  அவர்களுக்கும் ,இன்னும் சிலருக்கும் தெரியும்.அந்த லஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டுவதில்லை .

நான் பாடி இருக்கின்ற திருவருட்பாவில் அடங்கி இருக்கின்ற நான் பாடி இருக்கின்ற பாடலையும்.மற்றவர்கள் பாடலையும் சபைக்கு கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும்.ஏன் ? அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு  கொஞ்சம்
அற்ப அறிவாக இருந்தது என்பதை வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

வள்ளலாருக்கு அற்ப அறிவு என்பது கிடையாது .நாம் திருந்த வேண்டும் என்பதற்காகவே அப்படி சொல்லுகின்றார்.எப்படியாவது எந்த விதத்திலாவது நம்மைத் திருத்த  வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் எண்ணம் ,சொல் .செயல் எல்லாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரே வழிபாட்டு விஷயங்களில் ஒரு தடையும் செய்யாமல் நான் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் என்கின்றார்,

ஒவ்வொரு சங்கங்களிலும் விண்ணப்பம் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி வைத்து எழுதியும் வைத்துள்ளார் .

எல்லாம் உடையானுக்கு விண்ணப்பம் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார ,சங்கற்ப விகற்பங்களும் .வருணம் ஆசிரமும் முதலிய

உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கின்றார் .

அதற்குமேலும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

விபூதி என்பது சைவ சமய சின்னங்களில் ஒன்று .இப்படி.வைணவம்,கிருத்தவம்,இஸ்லாம் ,பவுத்தம் சமணம்,போன்ற  ஒவ்வொரு சமய மதங்களுக்கும் ஒவ்வொரு சின்னங்கள் உண்டு. எனவே எந்த ஒரு தனிப்பட்ட சமய மதங்களின் சின்னங்களை அடையாளங்களை  பிரசாதமாக வழங்க வேண்டிய அவசியம்.இல்லை.எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இனிப்பு வழங்கலாம்.கற்கண்டு,நாட்டு சர்க்கரை போன்றவற்றை  வழங்கலாம்..

இப்போது வடலூர் ஞான சபையில் நாட்டு சர்க்கரை மட்டுமே  வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.இன்னும் தருமச்சாலை,கருங்குழி,மேட்டுக்குப்பம் ,மருதூர் போன்ற இடங்களில் விபூதி வழங்கிக் கொண்டு உள்ளார்கள் .அவற்றையும் காலப் போக்கில் மாற்றும் வேலையை சுத்த சன்மார்க்கிகள் செயல்படுத்த வேண்டும். ஆரம்ப காலத்தில் இருந்தே சமய மத சன்மார்க்கிகள் அந்த பழக்கத்தை கொண்டு வந்து விட்டார்கள்.இன்னும் நிறைய வடலூர் தெய்வ நிலையங்களின் பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டி உள்ளது.

ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் விபூதியும் ஒன்று எனவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களில் விபூதிக்குப் பதிலாக இனிப்பு வழங்குவதே நல்லதாகும் ,நன்மையாகும்.

இதிலே வாதங்களை விட்டுவிட்டு வள்ளலார் சொல்லியுள்ள உண்மை நெறியான சுத்த சன்மார்க்க பெரு நெறியைப் பின்பற்றி ,சாதி  சமய,மத சின்னங்களை, சங்கற்ப விகற்ப  ஆசாரங்களை, வழங்காமல் இனிப்பு வழங்கினால் .வருங்கால சந்ததிகளுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும்....

குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்
பொறித்த சமயம்,மதம் ,எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடு சிற்சபை  நடத்தை தெரிந்து துதித்திடு மின்
சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே !

என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் ,

சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேன் ....என்றும்
பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன் என்கின்றார் .....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு