வெள்ளி, 2 டிசம்பர், 2016

காவி உடை அவசியம் இல்லை !

காவி உடை அணிபவர்களுக்கு அருள் கிடைப்பது சிரமம் !

சந்நியாசமும் காவி உடையும்
மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவ ஆபாசம் உள்ளது , தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.

சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயவு யில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை.

குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

தயவு என்பது ஜீவர்கள்  சிறிய ஜீவதயவு சிறிய வெளிச்சம்  - சுத்தம், வெள்ளை வருணம்,

ஞானம், என்பது அருள் ,கடவுளின் பெரிய தயவு,  பெரிய வெளிச்சம்

சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவையும் ,சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தையும் பெற வேண்டும் என்கிறார் வள்ளலார் _

எனவே காவி உடை சந்நியாசம் வேண்டியதில்லை ,

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு