செவ்வாய், 22 நவம்பர், 2016

மா தவம் செய தவர்களின் நிலை !

மா தவம் செயதவர்களின் நிலை !

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னால் புரிந்து மணிமாட நடுவே

தேன் இருக்கும் மலர் அணை மேற் பளிக்கரையின் ஊடே திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்

நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருள் அமுதம் நல்கியதும் அன்றியும் என்

ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

 மேலே கண்ட பாடலை பல தடவை படியுங்கள் . முன் உள்ள அருளாளர்களின் நிலையும் ,மற்றும் உள்ள சமய மத அருளாளர்களின் நிலையும் , அளவில்லாத காலமெல்லாம் தவம் செய்தவர்களின் நிலையும் ,எந்த அளவில் உள்ளன என்பது விளங்கலாம் .

சாதி சமயம் மதம் அற்ற
பொது நோக்கத்தோடு வாழந்து மக்களுக்கு உண்மையான வழியைக் காட்டிய வள்ளலார் நிலையும் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை எந்த அளவிற்கு நேசித்து அருளை வழங்கி ஆட்கொண்டார் என்பதை அழுத்தம் திருத்தமாக மேலே கண்ட பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் ,

 அன்பு உள்ளங்களே யார் குழம்பி  குழப்பினாலும் , செவி சாய்க்காமல் ,வள்ளலார் சொல்லிய நேர் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு