செவ்வாய், 22 நவம்பர், 2016

வள்ளலாற்கு முன்பு எங்கே சென்றார்கள் !

அன்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் !

அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் வந்தனம்

வள்ளலாருக்கு முன்பு எங்கே சென்று இருந்தார்கள் சமய மத வாதிகள் .

அவர்களால்  மக்களை ஏன் நல்வழியில் கொண்டு  செல்ல முடியவில்லை .

வள்ளலார் வழி காட்டிய பிறகு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சப்பைக் கட்டு கட்டுவது ஏன் ?

இன்னும் வள்ளலார் யார் ? எனபதே புரிந்து கொள்ளாமல் ,தெரிந்து கொள்ளாமல் ,வள்ளலார் எதற்காக வந்தார் ?ஏன் வந்தார் ? என்பதே தெரியாமல் மக்களை குழப்புவது அறியாமையைக் காட்டுகிறது ,

இறைவனால் வருவிக்க உற்றேன் என்று சொல்லியும் உணர்த்தியும் கூட அறிந்து தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் , அறியாமையா ?  அல்லது சமய மத பற்றா . ? அல்லது சித்தர்கள் மீது வைத்து உள்ள பற்றா ?

வள்ளலார் வருவதற்கு முன் சன்மார்க்கம் இருந்தது ,சுத்த சன்மார்க்கம் என்பதும் இல்லை .இப்படி எல்லாம்  சொல்வார்கள் என்பதை அறிந்து தான் வள்ளலார் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம"் என்று பெயர் வைத்தார்

எந்த அருளாளர் எழுதி வைத்து  உள்ள நூலில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து உள்ளார்கள் .

தயவு செய்து மக்களை குழப்பாதீர்கள் .உங்களால் நல்ல வழியைக் காட்ட முடியாவிட்டாலும் .வழியை அடைக்காதீர்கள் .

முன்னாடி இருந்த அருளாளர்கள் எல்லாம்  மறைத்து வைத்து இருந்த தடைகளை எல்லாம் வள்ளலார் உடைத்து எறிந்து விட்டார் .

மனிதன் நல்வழியில் செல்ல ஒழுக்கம் நிறைந்த தூய்மையான அருள் வழியை வள்ளலார் காட்டி உள்ளார் .அவர் காட்டிய வழியில் சென்று முதலில்  மனிதனாக வாழ்ந்து ,அனைத்து உயிர்களுக்கும நன்மை செய்து _இறைவனிடம் அன்பு கொண்டு அருளைப் பெற்று _பேரின்ப பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்வோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு