வெள்ளி, 2 டிசம்பர், 2016

அன்புடன் அனைவருக்கும் !

அன்புடன் அனைவருக்கும் வந்தனம் !

வள்ளலார் சொல்லி உள்ள ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஈடேறலாம் !

மனித சமுதாயம் நல் வாழவு வாழ வேண்டும் என்பதற்காக வள்ளலார் உண்மையான ஒழுக்க நெறிகளை வகுத்து தந்து உள்ளார் ,

அவைதான் இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் ,என்பதாகும் ,

அவற்றை பின் பற்றுவதும் பின் பற்றாததும் உங்கள் விருப்பம் ,

எதை விட வேண்டும் எதை பின் பற்ற வேண்டாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் ,அதை விடுத்து அவை பெரியது, இவை பெரியது என்று வாதம் செய்வது ,நமது முன்னேற்றத்தை தடுத்து விடும் ,

அதைக் கருத்தில் கொண்டு தான் " இதுவரை இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் " நமக்கு காலம் இல்லை என்கிறார் வள்ளலார் .

எனவே ஆன்ம நேய சகோதரர்கள் காலத்தை வீண் கழிக்காமல் இக் காலமே சுத்த சன்மார்க்க காலம் என்பதை உணர்ந்து .நீங்கள் ஒழுக்கிற்கு வருவதோடு மற்றவர்களையும் ஒழுக்கத்திற்கு வரும்படி செய்விக்க வேண்டும் ,அதுவே சிறந்த ஜீவ காருண்யம்.

சுத்த சன்மார்க்க ஒன்றே எல்லா உலகும் விளங்கும் ,வேறு எதிலும் நாட்டம் கொள்ளாமல் ,சுத்த சன்மார்க்க ஒன்றையே பின் பற்றி நாட்டம் கொள்ள வேண்டும் .அதுவே நமது வாழ்க்கையின் லட்சயமாகும் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு