திங்கள், 5 டிசம்பர், 2016

மரணத்தை வெல்லும் வழி!

மரணத்தை வெல்லும் வழி !



மனித தேகம்  எடுத்தவர்கள்   எவ்வளவு சக்தி  படைத்தவர்களாய் இருந்தாலும் ,உலகத்தையே ஆளும்   ஆற்றல்   படைத்தவர்களாய்  இருந்தவர்களாய் இருந்தாலும் , எவ்வளவு வசதி ,பதவி,அதிகாரம் படைபலம் , பணபலம்  இருந்தாலும்  ,மக்கள்  செல்வாக்கு இருந்தாலும்  ,மரணத்தை  வெல்ல முடியாது , மரண வேதனைகளைத் தவிர்க்க  முடியாது, 

 மக்கள் செய்யும்  வழிபாட்டினாலும் மரணத்தை வெல்ல  முடியாது,

அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரிடம் பூரண அருளைப்  பெற்றால்  மட்டுமே  மரணத்தை வெல்ல  முடியும்  என்பதை  வள்ளலார்  தெளிவாக விளக்கம்  தந்து உள்ளார் ,

 அருளைப்  பெறாமல்  மேலே சொல்லி  உள்ள வசதிகளை  வைத்துக் கொண்டு ,  எவ்வளவு திறமை  வாய்ந்த செயற்கை  மருத்தவர்களைக் கொண்டும ,உயிரைக்,காப்பாற்ற  முடியாது ,என்பதை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் , கால தாமதம்  படுத்தலாம் ,மரணத்தை வெல்ல  முடியாது.

 எனவே  மனித தேகம் எடுத்தவர்கள்  மரணத்தை வெல்லுவதே  இயற்கையின் நியதி . என்பது தெரியாமல்  வாழ்வது  அறியாமையாகும். 

இந்த  ஒப்பற்றை  உண்மையைத் தெரிவிக்கவே  அருட்பெருட்ஜோதி ஆண்டவரால்  வள்ளலார்  வருவிக்க உற்றார்  என்பதை  அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும் .

 அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு   கதிர்வேல்  ,


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு