செவ்வாய், 22 நவம்பர், 2016

ஒரு அன்பர் கேட்டு உள்ள விணா ?

ஒரு அன்பர்  கேட்டு உள்ள விணா !

ஆன்மா வேறா ? உயிர் வேறா ? எனபதே அந்த விணா !

ஆன்மா என்பது ஒளித்தன்மை உடையது அதுதான் அருட்பெருஞ்ஜோதி தன்மை உடையது .
அது இருந்த இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கிக் கொண்டு உள்ள  அருட்பெருவெளி என்னும் இடமாகும்  .

அந்த அருட்பெருவெளி என்னும் சமூகத்தில ஆன்மா ் உள்ளதால ஆண்டவரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது . ஆன்மாவுக்கும் ஒரு தேகம் உள்ளது , அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர் . ஒளி தேகம் என்றும் பெயர் .

அந்த ஆன்மா . . இந்த பஞ்ச பூத உலகிற்கு இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறது ,

இந்த உலகத்தில் ஆன்மா தனித்து ஒளித்தேகத்துடன்  வாழ்வதற்கு வசதிகள் கிடையாது . இந்த மாயை உலகத்தின் சட்டப்படி ஆன்மா வாழ்வதற்கு ,உயிரும் உடம்பும் கொடுக்கப் படுகிறது .

அதனால் தான் நம்முடைய  தேகத்திற்கு ஜீவ தேகம் என்று பெயர் . ஜீவன் என்றால் உயிர் என்பதாகும் .

ஆன்மா இல்லை  என்றால் உயிருக்கும் ,உடம்பிற்கும் வேலை இல்லை ,

ஆன்மா ் இந்த உலகத்தில் வாழ்வதற்கு கொடுத்த உயிரையும் உடம்பையும் பழுது இல்லாமல் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே பழைய ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்   கிடைக்கும் .

 ஆன்மா இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுத்த காரணத்தால் .துன்பங்கள் அனைத்தும் திரைகளாக ,ஆன்மாவை மறைத்து கொண்டு உள்ளது .அதற்குப் பெயர்  தான் மாயா திரைகள் என்பதாகும் .

 அந்த திரைகள் நீக்குவதற்கு சமய மதங்கள் பல தவறான வழிகளை காட்டி உள்ளது .அதுதான் கலை உரைத்த கற்பனைக் கதைகள் என்கிறார் வள்ளலார் .

வள்ளலார் வந்து தான் உண்மையான வழியைக் காட்டி உள்ளார் . அதற்காக ஜீவ காருண்யம் என்றும் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின  திறவு கோல் என்றும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்

ஆன்மா வேறு உயிர் வேறு .அதே நேரத்தில் ஆன்மா இல்லை என்றால் உயிரும் உடம்பும் இயங்காது .

உயிர் இருக்கும் வரை ஆன்மா பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கும் .எனவே தான் ஒளி தேகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார் .ஒளிதேகம் பெற்றுக் கொள்வதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் .

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவு என்று உரைத்த மெய்ச் சிவமே !

என்றும்

உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !

எனத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

உயிர் எல்லாம் ஒரு நீ திருநடம் புரியும்  ஒரு திருப்   திருப்பொது என அறிந்தேன் .

செயிரெலாம் தவிர்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன்

மயிரெலாம் புளகி உளமெலாம் கனிந்தே மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்

பயிர் எலாம் தழைக்கப் பதி எலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே !

 எனவே அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உண்மையை உணர்ந்து உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யப் பணியில் அக்கரைக் கொண்டு பூர்த்தி அடைந்து .பின் இறைவன இடம் ் தொடர்பு கொண்டு அருள்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் ,

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அலைய வேண்டாம் .மனிதன் சொல்லியதை விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியதை பின் பற்றுங்கள் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு