திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வசைபாடும் அன்பர்களுக்கு வாழத்துக்கள் !

வசைபாடும் அன்பர்களுக்கு வாழத்துக்கள் !

செய்தாலும் தீமை எலாம் பொருத்து அருள்வான் பொதுவில்

திரு நடஞ் செய் பெருங்கருணைத் திறத்தான் அங்கு அவனை

மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்

மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்

வைதாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன்

மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்

பொய் தானோர் சிறிது எனினும் புகலேன் சத்தியமே

புகல்கின்றேன் நீவிர் எல்லாம் புனிதம் பொருட்டே !

என்னும் வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல் பட்டு கொண்டு வருகிறேன் .

யார் எதைச் சொன்னாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை

எனக்கு இட்ட பணியை செயது கொண்டே இருப்பேன் .

எனக்கு மரணம் இல்லா பெரு வாழவு கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் , அதைப்பற்றி நான் கவலைப் பட வில்லை அதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பார்த்து கொள்வார் .

அவருக்குத் தெரியும் யார் யார் என்ன என்ன செய்து கொண்டு உள்ளார்கள் என்று

யாரை ஏமாற்றினாலும கடவுளை ஏமாற்ற முடியாது .

சன்மார்க்கி யார் ? சமய மத சன்மார்க்கி யார் ? சுத்த சன்மார்க்கி யார்? உண்மையான சுத்த சன்மார்க்கி யார் ? என்பது எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்

யாரும் தப்பிக்க முடியாது !

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது

மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்

சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !

என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .

இது வள்ளலார் சொல்லிது அல்ல

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது .என்று நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை எனபதில் இருந்து

நீங்கள் புரிந்து கொண்டு  உள்ளீகளோ இல்லையோ நான் புரிந்து கொண்டு உள்ளேன் .

எனவே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய பாதையில் வாழந்து கொண்டு

மக்களுக்கும் சொல்லி கொண்டு வருகிறேன் .

ஆதலால் யார் எதைச் சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு