வியாழன், 3 டிசம்பர், 2015

அருளாளர் என்பவர் யார் ?

அருளாளர் என்பவர் யார் ?

சாகாமல் இருப்பவரே அருளாளர் .

சித்தர்களில் மூன்று வகை உண்டு ,

போதகர்களில் நிறையப்பேர் உண்டு .போதகர்களை விட சித்தர்கள் உயர்ந்தவர்கள்.

கர்ம சித்தர் , ,,யோக சித்தர்,,,,ஞான சித்தர் என்பவர்களாகும் இவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டி அருளைப் பெற்றவர்கள் .

கர்ம சித்தர்கள்;---ஆலயங்களை கட்டி மக்களுக்கு புற உருவ வழிப்பாட்டு முறைகளை தோற்றுவித்தவர்கள்.

எனவே அவர்களுக்கு கடின சித்தர்கள்,அதாவது கர்ம சித்தர்கள் என்ற பெயராகும்.

யோக சித்தர்கள் ;-- மனத்தைக் கட்டுப் படுத்தி அகத்திலே கடவுளைக் காண யோக முறைகளை தோற்றுவித்தவர்கள் .

எனவே அவர்களுக்கு கடின யோக சித்தர்கள் என்று பெயராகும் .

ஞான சித்தர்கள் ;--இவ்வுலகில் ஒருவருமே இல்லை .உண்மையான கடவுளைக் கண்டு அதன் மயமாக தன்னை இணைத்துக் கொள்பவர்கள் ஞான சித்தர்கள் என்பவர்கள் .

கரம சித்தி,..யோகசித்தி,..ஞான சித்தி..என்ற மூன்று வகை சித்தி அனுபவங்களையும் பெற்று முழுமையான இறை அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் ''வள்ளல்பெருமான் ஒருவரே'' !

கர்ம சித்தர்கள்  ,யோக சித்தர்கள் அனைவரும் செத்துப்போய் விட்டார்கள்.ஏன் செத்துப் போய் விட்டார்கள் என்றால் முழுமையான கருணை இல்லாமல் வாழ்ந்தவர்கள் அதனால் செத்துப் போய் விட்டார்கள்

கருணை இல்லாமல் வாழ்ந்தலால் கடின கர்ம ,யோக சித்தர்கள் என்ற பெயராகும்.,அவர்கள் அறக்கருணை இல்லாமல் மறக்கருணை உள்ளவர்கள்.

செத்தவர்களின் சித்து செல்லுபடி ஆகாது .அவர்களின் கொள்கைகளும் செல்லுபடி ஆகாது.அவர்களின் கொள்கையை பின்பற்றி வாழ்பவர்களுக்கும் எந்த வித பயனும் நன்மைகளும் கிடைக்காது.

மேலும் சித்தர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் மட்டுமே கடைபிடித்தவர்கள்.ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் என்பதை கடைபிடிக்க தவறியவர்கள்.

கருணை இல்லா விட்டால் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்பது புரியாது ,விளங்காது,தெரியாது மறைத்து விடும்.

வள்ளல்பெருமான் ஒருவரே ..இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர் .

அந்த நான்கு ஒழுக்கங்களும் ''ஜீவ காருண்யம் ''என்ற உயிர் இரக்கம் ,ஆன்ம நேயம் என்கின்ற ஆன்ம ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இறைவன் அருள் கிடைக்கும்

எனவே தான் ''ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார்.

ஜீவ காருண்யம் இல்லாமல் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பதால் ஜீவ காருண்யத்தைப் பற்றி மக்களுக்குப் போதித்தார்.

ஜீவ காருண்யத்தைப் போதிப்பதற்கும் ,கடவுளின் அருளைப் பெறுவதற்கும் '''சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை '' அமைத்துள்ளார் .அதில் சேருபவர்களுக்கு சுத்த சன்மார்க்கிகள் என்று பெயர் வைத்துள்ளார் .

''சாகாதவனே சன்மார்க்கி'' என்றும் சாகிறவன் சன்மார்க்க நிலை அடைந்தவன்  அல்ல என்றும் தெளிவுப் படுத்தி உள்ளார் .

எனவே செத்துப்போன சித்தர்கள் வழியைப் பின்பற்றாமல்,, சாகாமல் வாழும் அருளாளர் வள்ளல்பெருமான் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் ''கொள்கைகளைப் பின்பற்றி கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே .

மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுளின் முழுமையான பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைநிலையை அடைய முடியும் .வேறு எந்த மார்க்கத்தாலும் மனிதன் கடைத்தேற முடியாது.அழிந்து போவான் .

மண்,,நீர்..அக்கினி ,,காற்று,,ஆகாயம்,,என்னும் ஐம் பூதங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே மார்க்கம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புதிய புனித அருள் நெறி மார்க்கமாகும் ..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்--என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து !

சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி நாடு என்ற எந்த பேதமும் இல்லாத ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைக் கொண்ட ஒரே மார்க்கம்.வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ள சுத்த சன்மார்க்கம்.

வள்ளல்பெருமான் தோற்றுவித்த மார்க்கத்தை உலகில் உள்ள எல்லா சிறிய பெரிய அருளாளர்கள் அனைவரும் போற்றிப் புகழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

மனிதர்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள்.

இன்றைய அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே என்பதை மனித குலம் அறிந்து,தெரிந்து புரிந்து கொண்டு,உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்

துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
போன் ;--9865939896. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு