சனி, 21 பிப்ரவரி, 2015

பாடு பட்டீர் பயன் அறியீர் !

பாடு பட்டீர் பயன் அறியீர் !

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டெருவும் போட்டுக்
கரும்பை விட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே
குடி இருப்பீர் ஐயயோ நீர் குறித்து அறியீர்
பாடு பட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் களித்தீர்
பட்டது எல்லாம் போது இது பரமர் வருதருணம்
ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்
எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தனனே .!

திருஅருட்பாவில் ''உறுதி கூறல்'' என்ற தலைப்பில் இரண்டாவது பாடல் .--
நினைத்து பார்க்க முடியாத கல்லும் மண்ணும் காடுகளும் நிறைந்த இடத்தை ,அறிவுள்ள மனிதன் அதை பண்படுத்தி சமமாக்கி கிணறு வெட்டி அல்லது போர் குழாய் வைத்து,தண்ணீர் வரவழைத்து ,நல்ல காட்டு எருவைப் போட்டு,மக்களுக்கு தேவையான நன்செய் நிலமாக மாற்றி,அதிலே நெல்,கரும்பு,வாழை,தென்னை போன்ற நன்செய் பயிர்களை வைக்காமல் ''கடுகு " என்னும் விஷத்தை விதைத்து பயிர் வைத்து களித்து மகிழ்ச்சி அடைகின்றான் .

பாடுபட்டு அதனுடைய நற் பயனை அனுபவிக்காமல் வீணான உழைப்பாகி விட்டது.

அதே போல் மனித தேகம் பலகோடி பிறவிகளின் முயற்ச்சியினால் கிடைத்த அருமையான அற்புதமான பிறவியாகும்.
இந்த பிறவி கிடைத்ததின் அருமை தெரியாமல்,புரியாமல் உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகின்றதே அதாவது மரணம் வந்து விடுகின்றது. மரணம் வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்.மறுபடியும் என்னாவாகப் பிறக்கப் போகின்றீர்கள் .எங்கு செல்லப் போகின்றீர்கள் .எதுவுமே தெரியாது

கிடைபதற்கு அறிய மனித தேகம் கிடைத்தும் அதை பயன் படுத்தத் தெரியாமல் ,மேலும் ஏதும் தெரியாமல் மாண்டு போகின்றீர்கள் .
இனிமேல் அதைப் பற்றி கவலைப் படவேண்டாம் .!
மனிதன் எப்படி வாழ வேண்டும் ,எங்கு செல்ல வேண்டும் என்ற உண்மையைத் தெரியப்படுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து உரைக்கின்றார் .

நான் சொல்லுவதைக் கேட்டு ஈடு கட்டி வாழ்ந்தால் எல்லா நன்மைகளும்,கிடைக்கும் இதுவரையில் கிடைத்த இன்பத்தைவிட,லாபத்தை விட பெரிய இன்பமும் லாபமும் கிடைக்கும் வாருங்கள் என உலக மக்களை வள்ளல்பெருமான் கூவி அழைக்கின்றார் .

நான் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லுகிறேன் நான் அடைந்த பேரின்ப லாபத்தை ,மரணம் இல்லாப் பெருவாழ்வை ,நீங்களும் பெறலாம் அதற்கு எந்த தடைகளும் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லுகின்றேன். என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் சொல்லியபடி நாமும் வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு