திங்கள், 9 பிப்ரவரி, 2015

உண்மைப் பத்திரிகை !




உண்மைப் பத்திரிகை !

வள்ளல்பெருமான் சித்திப் பெறுவதற்கு முன் உலக மக்களுக்கு உண்மை பத்திரிக்கை என்னும் தலைப்பில் வெளிப்படுத்தி உள்ளது !

சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும்,சாத்திர பேதங்களும்,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.அது  கடவுள் சம்மதம்.இது இருபத்தி ஒன்பது (29--வருஷத்திற்கு மேல் ) கலியுகம் 5000 ,--க்கு மேல் .

இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் ,மூர்த்திகள் ,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும்,எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும்,தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்ப் பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி ..

இது உண்மையாயின்,அந்த பதியின் அருளை நான் பெறுவேன் ! பெறுகின்றேன் !! பெற்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை. பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! அஞ்ச வேண்டாம் ..

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்.
பிரஜோத்பத்தி வருடம்
சித்திரை மாதம் ஒன்றாம் தேதி
சித்திவளாகம்
1874 .  

மேலே கண்ட கட்டுரையை வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

இதுவரை வழிபாடு செய்துவந்த,புராணங்களில் சொல்லப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள் முதலான ,கடவுள்.தேவர் ,அடியார் ,யோகி,ஞானி போன்றவர்களை   நினைந்து வழிபாடு செய்யாமல் உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதியை நாம் உண்மை அன்பு, உண்மை இரக்கம்,கொண்டு வழிபாடு செய்தால்,எந்த தடைகளும் இல்லாமல் நமக்கு கொடுக்க வேண்டிய அருளை கொடுத்து ,மேல்நிலைக்கு கொண்டு செல்வார் என்பதை தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்கள்.

ஆதலால் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து வளம் பெறுவோம்..

ஆன்மநேய அன்புடன் ஈரோடு கதிர்வேல்.    

10 கருத்துகள்:

13 மே, 2017 அன்று AM 9:45 க்கு, Blogger Unknown கூறியது…

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

 
13 மே, 2017 அன்று AM 9:45 க்கு, Blogger Unknown கூறியது…

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

 
29 மார்ச், 2019 அன்று AM 11:41 க்கு, Anonymous SALAI GOPINATH கூறியது…

Unmai pathirikai said by Ramalinga Adigalar , clearly states that this sutha sanmargam was thier in the past ,in the present and will be in future.After 29 years ( 1900) his god ,who gonna come will continue the Sutha sanmargam. And he is not the one among the saint , god, guru, rishi, erai thuthar in the past. He ( MEIVAZHI SALAI ANDAVARGAL) is the thani thalaimai perumpathi , whose arrival was waited by all the gurus , saints, rishi, yogi in the past.

Vadalur Vallal Piran guiding his people in last speech to follow is god who gonna come after 29 years to have the same sutha sanmargam.....

why the page is interpreting in wrong way ??? The same was happened in all our religious books and guiding people wrongly. But Vadalur Vallar was clear in easy font... plz stop guiding people wrongly.

Meivazhi salai in Puttkottai teaching the same sutha sanmargam... true hearted people who listen the words of vadlur vallalar will surely think about this.

 
21 பிப்ரவரி, 2020 அன்று AM 4:26 க்கு, Blogger ஜெகன். Oft கூறியது…

வள்ளலார் கூறியது மெய்வழி சாலை தான். உண்மை,சத்தியம். வேறு எங்கும் சாட்சிகள் இல்லை

 
31 ஜூலை, 2022 அன்று AM 11:17 க்கு, Blogger சாலை சரவணன் கூறியது…

ஆம் திருவருட் பிரகாச வள்ளலார் கூறியுள்ள தனித்தலைமைப் பெரும்பதி நமது பிரம்மப்ரகாச வள்ளல் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அவர்களே... அவர்களின் பொற்பாதங்களை வணங்குவோம்...

 
8 செப்டம்பர், 2022 அன்று AM 5:24 க்கு, Anonymous Salai Ramanan கூறியது…

உலகம் முழுதும் சுத்த சன்மார்க்கம் ஒன்றுதான் என பின்பற்றுவார்கள் என்றும் இதற்கு எந்த தடையும் இல்லை எனவும், இந்த பெரிய நெறி வழக்கமானது கலியுகம் 5000 க்கு மேல் துவங்கி அவில்லாத நெடுங்காலமும் -- மேலும் இந்த உலக மக்களுக்கு வழங்கபடும்.

என்றும்

பலவகையான விதவிதமான சமயங்கள், சாஸ்திரங்கள், ஜாதிகள், ஆச்சாரங்கள், இவை அனைத்தும் மக்களிடத்தில் சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் விளங்குவதற்காகத்தான் உண்டாக்கபட்டது என்பதை நிரூபிக்கப்பெறும். என்பதும் அதுதான் கடவுளுடைய சம்மதம். என்றும் திருவருட் பிரகாச வள்ளலார் கூறியுள்ள படி 1871 (கலியுகம் 4971) ல் இருந்து சரியாக இருபத்தி ஒன்பது (29--வருஷத்திற்கு மேல் ) கலியுகம் 5000 -- க்கு மேல்.

இப்போது

வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமயம், சாஸ்த்திரம், புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், தேவர், அடியார்கள், யோகிகள், ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல!


இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும்,எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும், ஆகிய அனைவரும் அவரவர் அவரவர்களுடைய அனுபவங்களை வைத்து எதிர்ப்பார்க்கின்றபடி அவதாரம் செய்யபோகிற தனித்தலைமைப் பெரும்பதி ..

மேற்கண்ட தகவல்கள் உண்மையானதுதான் என்றால் அந்த தனித்தலைமைப் பெரும்பதியின் அருளை (வள்ளல் பெருமான்) ஆகிய நான் பெறுவேன் ! பெறுகின்றேன் !! பெற்றேன் !!! எனக்கு அடுத்து வர இருக்கிறவர்களும் அந்த பதியின் அருளை பெறுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! பயப்பட வேண்டாம் ..

மேலே கண்ட உண்மை பத்திரிகையை வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கலியுகம் 5000 க்கு மேல் எங்கே இந்த சன்மார்க்க சத்திய ஒழுக்க நெறி வழங்க படுகிறது என்றும் அதன் அடையாள தோற்றமும் தெரிந்து, அறிந்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றல்லவா இந்த பதிவை பார்த்தும் இதை மற்றி சிந்திக்கவில்லையெனில் ஆறு திருமுறைகளை கரைத்து குடித்திருப்பினும் திருவருட் பிரகாச வள்ளல் பெருமானை அலட்சியம் செய்ததாகவே ஆகும் பிறகு அவரவர்கள் விருப்பம்

 
8 செப்டம்பர், 2022 அன்று PM 12:12 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

காலகாலமாக இந்த உலகத்திற்கு இறைவனால் முத்தரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சித்தர்கள் முத்தர்கள் ஞானிகள் பாரவான்கள் இவ்வாறாக இறைவனுடைய வருகையை குறித்தும் அவர்களுடைய செயலை குறித்தும் அறிவித்துக் கொண்டுதான் வந்தார்கள். ஆனால் அதனைக் கேட்டு பயனடைந்தவர்கள் ஒரு சிலரே அதை அல்ல தட்டினவர்கள் பல பேர். இவ்வாறு அநேகம் பேர் தீர்க்கதரிசனமாக கூறியிருந்த அந்த தலைமை பெரும்பதி அவதாரம் நிகழ்ந்துள்ளது என்பதை நம் காதுகளில் என்று கேட்கிறோமோ அன்றே தேடி அடைந்து கொள்வதே நமக்கு நலம் பயக்கும். அந்த சுத்த சன்மார்க்கம் இன்று எங்கு உள்ளது என்று தேடிப் பார்க்க வேண்டாமா? இதைத்தான் இயேசு பெருமான் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்கும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று கூறினார்கள். இந்த உலகத்திற்கு ஒரே மேய்ப்பரும் இறுதி தீர்ப்பு கர்த்தரும் ஆகிய எம்மான் பிரம்ம பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் இப்பூவுலகில் தென்னிந்தியாவில் மெய்வழி சாலை என்னும் ஊரில் உதித்துள்ளார்கள். அனைவரும் அங்கு வந்து அண்டி பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அரைகூவி அழைக்கிறோம். வாங்கோ வாருங்கோ.

 
8 செப்டம்பர், 2022 அன்று PM 12:12 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

சாலை மீனாட்சி சுந்தரம்

 
24 ஜூன், 2023 அன்று AM 12:19 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

எந்தவித அரசியல் ஆதாயம் இன்றி ஆன்மநேயத்தை போற்றும் விதமாக மாநில அரசும், மத்திய அரசும் ஒங்கிணைந்து வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கத்தை பறைசாற்றும் காலம் மிக சமீபத்தில் உள்ளது, அந்த பொன்னான விழாவே *வடலூரை புனித பூமியாக சட்டப்பூர்வமாக அறிவிக்கும் நாள்* அந்நிகழ்வில் நம் நாட்டு பாரத பிரதமரும், முதல் அமைச்சரும் தலைமை தாங்கி கொண்டாடுவார்கள், அந்த அற்புத நிகழ்வில் உலகில் உள்ள அனைத்து நாட்டின் தலைவர்களும் சமரசமாக கலந்து கொள்வார்கள் இதனை சத்தியமாக வள்ளல் பெருமான் தன் உண்மைத் தொண்டர்கள் மூலமாக நடத்துவார் இது சத்தியம். சத்தியம். சத்தியம்.

 
24 ஜூன், 2023 அன்று AM 12:24 க்கு, Anonymous பாடியநல்லூர் வினோத்குமார் கூறியது…

அனைத்து ஜீவராசிகளும் இறைவனே, பக்தியை ஜீவராசிகளிடம் வைத்தருள்வதே ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகும், ஞானம் என்பது தயவு, பக்தியை ஜீவராசிகளிடம் விருத்தி செய்வதே ஞானம், இதன் பூரணமே அருட்பூரணம், தயவை விருத்தி செய்வதான தேடலே இறைவனின் அருளை பெறும் ஒரே வழி*

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு